என் மலர்
நீங்கள் தேடியது "ஹோட்டல்"
- இந்நிலையில் ஷில்பா உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்
- அதிக வருமானம் கிடைக்கிறது ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.
மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில்ஷில்பா தனது நடிப்பு தொழிலை விட இந்த உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன.
கடந்த நிதியாண்டில் தனது ஹோட்டல் தான் ஜிஎஸ்டி தொகையை அரசுக்கு செலுத்தியதில் முதலிடத்தில் இருந்தது. ஹோட்டல் தொழில் தனக்கு மகிழ்ச்சி தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.
- வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
- பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று
வடித்த சாதம் - 2 கப்
வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
• முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.
• சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
• அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
• பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
• இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.
இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
- ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்தார் ஒரு பெண்
- சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார்.
ஐஸ்கிரீமில் மனித விரல், பூரான், மெஸ் உணவில் பாம்பு, குலோம்பஜாமூனில் கரப்பான் பூச்சி, தோசைக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் செத்துக்கிடந்த எலி என சமீப காலமாக இந்தியாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. சிறியது முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பரிமாறப்படும் உணவின் தரம் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உடுப்பி ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவு ஆறியிருந்ததால் டென்ஷனான கஸ்டமர் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்த பெண்ணுக்கு ஆறிப்போன உணவு பரிமாறுபாடுள்ளது.

தனக்கு சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்த பெண் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆறிப்போன உணவைப் பரிமாறியதற்காக உடுப்பி ஹோட்டலுக்கு ரூ.7000 விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
- எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர்.
புத்தாண்டு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நாகா பகுதியில் உள்ள ஷரன்ஜித் என்ற ஹோட்டல் விடுதி அறையில் வைத்து 24 வயது இளைஞன் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை இன்று படுகொலை செய்துள்ளான்.
ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 30 அன்று அந்த குடும்பம் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளது .
குற்றம் சாட்டப்பட்டவர், ஆக்ராவின் குபேர்பூரை சேர்ந்த அர்ஷத். தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை விடுதிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச்செய்து அவர்களின் கை மணிக்கட்டை அறுத்து கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஹோட்டல் அறையில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.
இறந்தவர்கள் அலியா (9), அல்ஷியா (19), அக்சா (16) மற்றும் ரஹ்மீன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள். ஐந்தாவது உடல் தாயார் அஸ்மா உடையது. அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் காவல்துறை உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து அர்ஷத்தை கைது செய்தது என்று டிசிபி ரவீனா கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டு, தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களைச் சேகரித்து வருவதாக ரவீனா கூறினார்.
சமபவத்தின் பின் தலைமறைவான அர்ஷத்தின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. குடும்பத் தகராரே கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த பின், குற்றவாளி அர்ஷத் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார். வீடியோவில் இறந்த தாய் மற்றும் சகோதரிகளைக் காட்டினார். இதன் போது அவருடன் அவரது தந்தையும் இருந்தார்.
என் பெயர் ஆசாத்... இன்று, குடிசைவாசிகளின் [அக்கபக்கத்தினரின்] நிர்ப்பந்தத்தால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். தாயையும் சகோதரிகளையும் என் கைகளால் கொன்றேன். இதற்கு, எங்கள் காலனியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. யோகி ஜிக்கு [முதல்வருக்கு] ஒரு வேண்டுகோள், இது போன்றவர்களை விட்டுவிடாதீர்கள், மரணத்திற்கு முழு காலனியும் பொறுப்பு.
இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர் அகமது, அசார் மற்றும் சிறுமிகளை விற்கும் அவரது உறவினர்கள். எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர். நாங்கள் இதை எதிர்த்தோம். காவல்துறையிடம் உதவி கேட்டேன், தலைவர்களிடம் உதவி கேட்டேன், ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் படவுன் குடியிருப்பாளர்கள். எங்களை வங்கதேசத்தினர் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் படவுனில் வசிக்கும் எங்கள் அத்தையிடம் இருந்து நீங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.. நாங்கள் மதம் மாற விரும்பினோம். இன்று என் சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நானும் இறப்பேன்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஜி... எல்லா முஸ்லிமும் ஒரே மாதிரி இல்லை. இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. உயிருடன் இருக்கும் போது இல்லை என்றால் இறந்த பிறகு நீதி வழங்குங்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
காலனி மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பல ஏழைகளின் பெண் குழந்தைகளை இவர்கள் தூக்கிச் சென்று விற்கின்றனர். காவல்துறையினரிடம் பணம் கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.
எனது குடும்பத்தின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது உங்கள் விருப்பம். நான் அவர்களை கொடூரமாக கொன்றேன். கூப்பிய கைகளுடன் நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
- யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி காலியில் அனுப்பி வைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இளம்பெண் ஒருவர் கோரமங்களா பகுதியில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த 33 வயது திருமணமான பெண் ஒருவர் பெங்களூருவில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) கோரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி அருகே அந்த பெண் நின்றுகொண்டிருந்தபோது ஏற்க்கனவே அறிமுகமான ஒரு இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் அந்த பெண்ணை அணுகினார். அவருடன் நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
டின்னருக்கு பிறகு அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை ஓட்டலின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த பிறகு, அந்தப் பெண் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியபின் விஷயம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போலீஸ், குற்றாவளிகளின் மூன்று பேரை கைது செய்தது.
அவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டல்களில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவித்தனர். நான்காவது குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.