என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹோட்டல்"
- ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்தார் ஒரு பெண்
- சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார்.
ஐஸ்கிரீமில் மனித விரல், பூரான், மெஸ் உணவில் பாம்பு, குலோம்பஜாமூனில் கரப்பான் பூச்சி, தோசைக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் செத்துக்கிடந்த எலி என சமீப காலமாக இந்தியாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. சிறியது முதல் பெரிய ஹோட்டல்கள் வரை பரிமாறப்படும் உணவின் தரம் குறித்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உடுப்பி ஹோட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவு ஆறியிருந்ததால் டென்ஷனான கஸ்டமர் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ரம்யமான நாளொன்றின் காலைப் பொழுதில் சிற்றுண்டி சாப்பிட பெங்களூரில் உள்ள உடுப்பி கார்டன் ரெஸ்டாரண்டில் நுழைந்த பெண்ணுக்கு ஆறிப்போன உணவு பரிமாறுபாடுள்ளது.
தனக்கு சூடான உணவுதான் வேண்டும் என்று அந்த பெண் கேட்ட நிலையில் அதெல்லாம் தரமுடியாது என்று சர்வர் தெனாவட்டாக பதிலளித்துள்ளார். இதனால் மனம் நொந்த பெண் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆறிப்போன உணவைப் பரிமாறியதற்காக உடுப்பி ஹோட்டலுக்கு ரூ.7000 விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்
- பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
அலுவலகம் சென்று வரும் பெண்களும், ஆண்களுக்கும் மிகவும் சவாலாக இருப்பது சாப்பாடுதான். சில நேரங்களில் வேலை பளு காரணமாக ஹோட்டல்களில் சாப்பிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஹோட்டல்களில் உபயோகிக்கும் மசாலா, சிக்கன், எண்ணெய் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று கவலையும் அடைகிறார்கள். உங்களுக்காக ஈஸியா வீட்டிலேயே உடலுக்கு எந்த விதி பாதிப்பும் ஏற்படாமல் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் வாங்க...
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்
எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
கேரட் - 1
குடைமிளகாய் சிகப்பு மற்றும் மஞ்சள் - 1 ஒன்று
வடித்த சாதம் - 2 கப்
வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
• முதலில் scramble egg செய்ய ஒரு கடாயில் எண்ணெய் முட்டை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலக்கவும். பின்னர் அதை தனியாக ஒரு பக்கம் எடுத்து வைத்து கொள்ளவும்.
• சிக்கனை 65 மசாலா சேர்ந்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பொரித்த சிக்கன்களை சிறுசிறு துண்டுகலாக வெட்டிக் கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சிக்கன் சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக 3 நிமிடம் வதக்கவும்.
• அதனுடன் சோயா சாஸ், கேரட், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
• குடைமிளகாய் கேரட் வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்
• பின் scramble egg வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
• இதோ சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டிலே ரெடி.
இதுபோல் வீட்டிலேயே நாம் கண்ணெதிரே செய்து சாப்பிடும் உணவுகளால் நமது உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
- இந்நிலையில் ஷில்பா உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்
- அதிக வருமானம் கிடைக்கிறது ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக பல்வேறு வணிகத்திலும் அவர் ஈடுபட்டு உள்ளார்.
மும்பை மாநகரத்தின் மைய பகுதியில் 'பாஸ்டியன் உணவகம்' என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.இந்த உணவகம் தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது.
இந்நிலையில்ஷில்பா தனது நடிப்பு தொழிலை விட இந்த உணவகத்தில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.அதிக வருமானம் கிடைக்கிறது. இந்த ஹோட்டலில் முன்பதிவு செய்வதற்கு அதிக போன் அழைப்புகள் வருகின்றன.
கடந்த நிதியாண்டில் தனது ஹோட்டல் தான் ஜிஎஸ்டி தொகையை அரசுக்கு செலுத்தியதில் முதலிடத்தில் இருந்தது. ஹோட்டல் தொழில் தனக்கு மகிழ்ச்சி தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
48 வயதாகும் ஷில்பா தற்போது பஞ்சாபி இல்லத்தரசி கேரக்டரில் ஒரு இந்தி படத்திலும் நடித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்