search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயாப் சிங் சைனி"

    • மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும்.
    • கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

    அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடித்துள்ள பா.ஜ.க. இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முனைப்பு காட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.

    முதல்வர் நயாப் சிங் சைனி லத்வா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை அவர் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் கூறியதாவது:-

    பா.ஜ.க.-வுக்கு சாதகமாக காற்று வீசுகிறது. அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் லத்வா தொகுதியில் தாமரை மலரும். கனவு காண்பதில் இருந்து காங்கிரசை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் கனவு கண்டார்கள்.

    அவர்களுடைய பணிகளை அவர்கள் உற்று நோக்க வேண்டும். அவைகள் வளர்ச்சிக்கு எவ்வாறு தடையாக இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். தலித் மக்களை அவர்கள் இழிவுப்படுத்தியதை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு நயாப் சிங் சைனி தெரிவித்தார்.

    • அரியானாவில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.
    • இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் நயாப் சிங் சைனி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    90 சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள அரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி மற்றும் மாநில பா.ஜ.க. தலைவரான மோகன் லால் பதோலி ஆகியோர் ஜிந்த் கிராமத்தில் இன்று மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

    அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்த பெண்மணியிடம் முதல் மந்திரி நயாப் சிங் சைனி கிராமத்தில் நடைபெறும் விவசாயம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    முதல் மந்திரியின் பாதுகாப்புக்காக வந்த பாதுகாவலர்களும் மாட்டு வண்டியுடன் நடந்து சென்றனர்.

    • நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது.
    • நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.

    அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றது. இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்நிலையில், அரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்- அரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசியம் காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ×