என் மலர்
நீங்கள் தேடியது "BRS"
- கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
- இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
தெலங்கானாவின் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராமாராவ்இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
* இந்த அநீதிக்கு எதிராகத் தென் மாநிலங்கள் குரல் கொடுக்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
* கூட்டாட்சி என்பது பரிசு அல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
* தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது.
* உரிமைகளைக் காக்க போராடுவதற்கான இன்ஸ்பிரேசன் தான் தமிழ்நாடு
* இந்த கூட்டத்தை நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்று கூறினார்.
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது.
- 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு இன்று தொடங்குகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடக்க நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படவுள்ளது. மேலும் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் கே.கேசவராவ் கூறுகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
- 119 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் அறிவிப்பு
- சந்திரசேகர ராவ் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும், சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி 119 இடங்களில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளையும் ஆச்சர்யத்திற்குள் ஆழ்த்தும் வகையில், வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நர்சாபுர், நம்பல்லி, கோஷமஹால், ஜன்கயோன் ஆகிய நான்கு இடத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சந்திரசேகர ராவ், ''நாங்கள் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருந்த பட்டியலில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்திரசேகர ராவ், காஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். அத்துடன் தற்போது கமரெட்டி தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த கட்சியை சேர்ந்த கம்பா கோவர்தன் தொடர்ந்து நான்கு முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலில் ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிதான், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போது, வேட்பாளர்களுக்கான விண்ணபத்தை வினியோகம் செய்துள்ளது. கடந்த 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 25-ந்தேதி வரை போட்டியிட விரும்புவோம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
- 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சந்திரசேகர ராவ் வெளியிட்டார்
- ஏழு மாற்றங்கள் மட்டுமே இடம் பிடித்திருந்ததால், ஏற்கனவே உள்ளவர்களுக்கு வாய்ப்பு
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏழு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, கிடைக்காததால் தலைவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் காட்சி வெளியாகியுள்ளது.
ஸ்டேசன் கான்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தட்டிகோண்டா ராஜையா விண்ணப்பத்திருந்தார். ஆனால், அவருக்கு பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி வாய்ப்பு வழங்கவில்லை. வாய்ப்பை கிடைக்காததை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், மண்டியிட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கானா ஜன சமிதி, தெலுங்கு தேசம், சிபிஐ ஆகிய நான்கு கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (தற்போது பாரத ராஷ்டிய சமிதி) தோற்கடிக்க முயற்சி செய்தன. ஆனால் மகா கூட்டணிக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.
சந்திரசேகர ராவ் கட்சி 88 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும், ஒவைசி கட்சி 7 இடங்களிலும், தெலுங்கு தேசம் 2 இடங்களிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
- தெலுங்கானாவின் 119 இடங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது
- மாநில அரசுக்கு கோவில்களின் நிர்வாகத்தில் தலையிட உரிமை உள்ளதா என கேட்டார்
தெலுங்கானாவில் 2018ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி வெற்றி பெற்று அவர் ஆட்சி அமைத்தார்.
இவ்வருட இறுதிக்குள் தெலுங்கானா மாநிலத்தில் 119 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகரில் அக்கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
தனது நீண்ட உரையில் கே.சி.ஆர். ஆட்சியை விமர்சித்த மோடி, தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க.வையும் தாக்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இந்து கோவில்களை தி.மு.க. அரசாங்கமே எடுத்து நடத்தி வருகிறது. அரசின் முழு கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளன. அவ்வாறு அவர்கள் செய்யும் போது கோவில் சொத்துக்கள் நிலங்கள், வீடுகள், செல்வங்கள் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் கொள்ளை போவதையும் தடுக்க முடியாமல் அரசே அக்கொள்ளைக்கு துணை நிற்கிறது. கோவில்களை மாநில அரசாங்கமே எடுத்து நடத்த அரசுக்கு உரிமை உள்ளதா? மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களை அரசு தொடுவதில்லை. ஆனால், தொன்று தொட்டு இருந்து வரும் இந்துக்களின் கோவில் நிர்வாகத்தில் மட்டும் தி.மு.க. அரசு தலையிடுவது ஏன்? தனது கூட்டணி கட்சியான தி.மு.க. இவ்வாறு செய்வதை காங்கிரஸ் தட்டி கேட்குமா? இந்துக்களுக்கே கோவில் நிர்வாகத்தை திருப்பி அளிக்கும்படி தி.மு.க.வை கேட்குமா?
இவ்வாறு மோடி கேள்வி எழுப்பினார்.
கோவில்களின் மாநிலம் என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் 1000 வருடத்திற்கு மேற்பட்ட கோவில்கள் மட்டுமே 400க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு.
- பொது கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரசேகர ராவ் திட்டம்.
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (அக்டோபர் 15) துவங்கி மொத்தம் 41 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரசாரத்தினை சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள ஹூஸ்னாபாத்தில் கே. சந்திரசேகர ராவ் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டபோர் 16 மற்றும் அக்டோபர் 17-ம் தேதிகளில் ஜங்கோன், புவனகிரி மற்றும் சிர்சிலா மற்றும் சித்திப்பெட் பகுதிகளில் நடைபெற இருக்கும் பொது கூட்டங்களில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
சந்திரசேகர ராவ் நவம்பர் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி 105 பேர் அடங்கிய வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ், அங்கு ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது
- குடும்ப ஊழல் மாநிலம் தாண்டி டெல்லி வரை பரவியிருக்கிறது
இந்தியாவின் தெலுங்கானா மாநில 119 சட்டசபை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 30 அன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.
தற்போது தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இத்தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி புதியதாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் தற்போதைய பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.
இரு கட்சியின் முக்கிய தலைவர்களும் இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானாவின் கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஹுசுராபாத் (Huzurabad) பகுதியில் தெலுங்கானா பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 வருடங்களில் தெலுங்கானாவின் வளர்ச்சி ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சியாக மாறி விட்டது. எங்கும் கே.சி.ஆர். குடும்பத்தின் ஆதிக்கம் தெரிகிறது. தெலுங்கானாவில் மக்களாட்சி நடைபெறவில்லை; தனியார் குடும்ப நிறுவனத்தின் ஆட்சிதான் நடக்கிறது. கே.சி.ஆர். ஆட்சியை நடத்தத்தான் அவருக்கு மக்கள் வாக்களித்தனர்; அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி நடத்த அல்ல. நான் அவர் குடும்ப உறுப்பினர் எவர் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மக்கள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கே.சி.ஆர். குடும்ப ஊழல் ஹைதராபாத்துடன் மட்டுமே நிற்காமல் டெல்லி வரை பரவியிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
- தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
ஐதராபாத்:
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தெலுங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்காக மட்டுமே வருபவர் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி என தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கவிதா கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் நடக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று தெலுங்கானா வருகிறார்கள். அவர்கள் உத்தரவாதம் அளித்து பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி சொல்வதை அவர்கள் செய்யவே மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி வருவதால் அவரை தேர்தல் காந்தி என்றே அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.
- 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு
- தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும்
தெலுங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், காஜ்வெல் தொகுதி மக்கள் தன்மீது அன்பு வைத்திருப்பதாகவும், தொடர்ந்து இரண்டு முறை பிரமாண்ட வெற்றியை வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொகுதி அளவிலான கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், 2016 பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனா ஆகியவற்றால் தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதாகவும், இந்தியாவின் இளம் மாநிலமான தெலுங்கானா கடுமையான மற்றும் தியாகத்தின் மூலமாக மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது வளர்ச்சி மற்றும் சாதனையால் நாம் திருப்தி அடையக் கூடாது. சிறந்து விளங்க பாடுபடுவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், நாம் மக்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
2016-ல் இருந்து சந்திரசேகர ராவ் தொடர்ந்து தெலுங்கானாவின் முதல்வராக இருந்து வருகிறார். அவரது பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ்க்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே பா.ஜனதாவும் தெலுங்கானாவில் கால்பதிக்க முயற்சி செய்து வருகிறது.
- தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி சட்டசப்பைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத ராஷ்டிரீய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தனியார் டி.வி. நேரலை விவாத நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தியது. இதில் சந்திரசேகரராவ் கட்சி எம்.எல்.ஏ. விவேகானந்தர் மற்றும் பா.ஜ.க வேட்பாளரான குணா ஸ்ரீசைலம் கவுட் ஆகியோர் பங்கேற்றனர்.
பா.ஜ.க. வேட்பாளர் குணா ஸ்ரீசைலம் கவுட் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த விவேகானந்தர் எம்.எல்.ஏ, பா.ஜ.க வேட்பாளரின் கழுத்தை இறுக்கி பிடித்துக் கொண்டு முகத்தில் கையால் குத்தினார்.
இதனை நேரடியாக பார்த்த பல்லாயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கானா பா.ஜ.க. மாநில தலைவரும், மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி கூறுகையில், விவேகானந்தர் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இல்லை என்றால் பா.ஜ.க. சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
- தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
- அங்கு ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிரிய சமிதி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாரத் ராஷ்டிரிய சமிதி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி, சென்னூர் தொகுதியில் தனது மகன் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதனால் அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி.யான விவேக் வெங்கடசாமி பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் கிஷண் ரெட்டிக்கு இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, அவர் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தெலுங்கானாவில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பூத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல் மந்திரியும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
பிரதமர் மோடிக்கு 100 கடிதங்கள் எழுதியும் அவர்கள் எங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தரவில்லை.
பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது வீண். காங்கிரசுக்கு வாக்களிப்பது அதைவிட பெரிய வீண் என தெரிவித்தார்.