search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமாண பத்திரம்"

    • 411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
    • ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 5-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையடுத்து பாராளுமன்ற தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் குருஷேத்திரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக பிஜூ ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா ரூ.482 கோடி சொத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆம்ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ரூ.169 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்தது.

    வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டத் தேர்தலில் மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 338 பேர் (39 சதவீதம்) கோடீஸ்வரர்களாவர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடியாக உள்ளது.

    இத்தேர்தலில் 6 பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 48 பேரும் காங்கிரசை சேர்ந்த 25 வேட்பாளர்களில் 20 பேரும், சமாஜ்வாடியைச் சேர்ந்த 12 வேட்பாளர்களில் 11 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 வேட்பாளர்களில் 7 பேரும், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த 6 பேரும், ஆம்ஆத்மியைச் சேர்ந்த 5 பேரில் 4 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

    411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 141 பேர் மீது அதி தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த தேர்தலில் ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.

    இதுவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். பணமாக 1 ரூபாயும் வங்கியில் சேமிப்பாக 1 ரூபாயும் வைத்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தகவல்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று காலை 11.45 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் பா.ஜ.க. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பிரதமருடன் காணப்பட்டனர்.

    பிரதமர் மோடியுடன் பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, லால்சந்த் குஷ்வாஹா, பைஜ்நாத் படேல் மற்றும் சஞ்சய் சோன்கர் ஆகிய நான்கு பேர் முன்மொழிந்தனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2014ம் ஆண்டு முதல் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வாரணாசியில் போட்டியிட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் பிரமாணப் பத்திரத்தில், அவர் ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும், ரூ.52,920 ரொக்கத்தையும் வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19 நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23ல் ரூ.23.5 லட்சம் என இரு மடங்காக உயர்ந்துள்ளது. 

    பாரத ஸ்டேட் வங்கியில் பிரதமர் மோடிக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. எஸ்பிஐயின் காந்திநகர் கிளையில் ரூ.73,304 டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐயின் வாரணாசி கிளையில் ரூ.7,000 மட்டுமே உள்ளது.

    பிரதமருக்கு எஸ்பிஐயில் ரூ.2,85,60,338 நிலையான வைப்புத்தொகை உள்ளது.

    பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்களும் உள்ளன.

    கடந்த 2019ம் ஆண்டு தேர்தலைவிட இந்த முறை பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்
    • ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டு வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த சொத்து விவரங்களை சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.
    • வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தங்களுடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை சொத்துக்களை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.

    மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்ற பின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

    வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.

    கணிசமான மதிப்பு அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்காத பட்சத்தில், வேட்பாளர்கள் தங்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒவ்வொரு அசையும் சொத்துகளையும் வெளியிட வேண்டியதில்லை.

    பொருத்தமற்றது என கருதும் விசயங்களை பொது அலுவலகத்தில் தெரிவிக்காத வகையில் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
    • ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இதற்கிடையே, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பா.ஜ.க. மந்திரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் செல்லாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான். பாஜகவிற்காகவும், மோடிக்காகவும் இப்படித்தான் இந்திய ஏஜென்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ×