search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரஜ்வால் ரேவண்ணா"

    • பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது.
    • பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

    ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.

    பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார். அவர் தற்போது ஆபாச வீடியோ வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் அவரால் பாதிக்கப்பட்ட மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண்ணை கடத்தியதாக எச்.டி.ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்.

    தற்போது அவர் ஜாமினில் இருந்து வருகிறார். அதுபோல் இந்த வழக்கில் அவரது மனைவி பவானி ரேவண்ணாவும் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் பிரஜ்வால் ரேவண்ணா ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பிரஜ்வால் ரேவண்ணாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முதல் வழக்கில் இன்னும் ஜாமின் கிடைக்காத நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஆபாச வீடியோ, பாலியல் தொல்லை, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் ஆகிய 4 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மூன்றாவது வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அவரைக் காவலில் எடுத்தது.
    • தற்போது நீதிமன்றம் ஜூலை 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து அவரை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரம் காட்டி வந்தனர். அதன் பேரில் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 31-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து பலாத்கார வழக்குகள் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 2 முறை போலீஸ் காவலில் எடுத்து பிரஜ்வலிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் முடிவடைந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ஆஜர்படுத்தப்பட்டபோது எஸ்ஐடி மேற்கொண்டு விசாரணை நடத்த பிரஜ்வாலின் காவலிலை நீட்டிக்க கோரிக்கை வை்ககவில்லை. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் பலத்த பாதுகாப்புடன் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    விசாரணையின் போது, இரைப்பை பிரச்சினைகள் குறித்து பிரஜ்வால் புகார் செய்தார். இதற்கு பதிலளித்த நீதிபதி, அவரது உடல்நிலையை கண்காணிக்க எஸ்ஐடி அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.

    • சுரஜ் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக நபர் ஒருவர் புகார்.
    • போலி புகார் மூலம் பிளாக்மெயில் செய்வதாக சுராஜ் ரேவண்ணா போலீசில் புகார்.

    கர்நாடக மாநில முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ஆபாச வீடியோ வெளியானது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அவரது சகோதரரான சுரேஜ் ரேவண்ணா, தன்னை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலியாக புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை மிரட்டியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுராஜ் ரேவண்ணாவை மிரட்டுவதாக இருவர் மீது போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    சுராஜ் ரேவண்ணா மற்றும் அவருக்கு நன்கு அறிந்தவருமான சிவகுமார் ஆகியோர் சேத்தன் மற்றும் அவர் மைத்துனர் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர். ரேவண்ணாவை அவதூறாக பேசாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்று கேட்டதாக அந்த புகாரில் குற்றம்சாட்டியுள்ளனர்.

    சேத்தன் சிவகுமாருடன் நட்பாக இருந்துள்ளார். அவருக்கு பாதுகாப்பான வேலைக்கு உதவி செய்யுமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார். சிவகுமாரும் சரி எனச் சொல்லி, சேத்தனை சுராஜ் ரேவண்ணாவிடம் மக்களவை தேர்தலின்போது அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    ஜூன் 17-ந்தேதி சேத்தன் சிவக்குமாருக்கு போன் செய்து ரேவண்ணாவின் பண்ணை வீட்டிற்கு வேலை கேட்டு சென்றதாகவும், வேலை மறுக்கப்பட்டதாகவும் தெரிவிதுள்ளார். பின்னர் சிவக்குமாருக்கு போன் செய்து ஐந்து கோடி ரூபாய் தரவில்லை என்றால் ரேவண்ணா மற்றும் ரேவண்ணா குடும்பம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார். அதன்பின் தனது மைத்துனருடன் சேர்ந்து 3 கோடி ரூபாய், 2.5 கோடி ரூபாய் தருமாறு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

    ஜூன் 19-ந்தேதி சேத்தன் மீண்டும் போன் செய்து, ரேவண்ணா குடும்பம் மீது அவதூறு பரப்புவேன் என மிரட்டியுள்ளார். அதன்பின் சுராஜ் ரேவண்ணா, சிவக்குமார் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். அதேவேளையில் பண்ணை வீட்டில் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என சேத்தன் தெரிவித்துள்ளார்.

    "ஹசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகாடா பண்ணை வீட்டில் ஜூன் 16-ந்தேதி சுராஜ் ரேவண்ணா என்னுடைய தோள்பட்டையில் அவருடைய கையை போட்டார். அவருடைய கை எங்கே எங்கேயோ சென்றது. அதன்பின் என்ன நடக்கக் கூடாதோ, அது எனக்கு நடந்தது. ரேவண்ணாவின் உதவியாளர் இந்த விசயத்தை மூடி மறைக்க தனக்கு வேலை தருவதாகவும் தெரிவித்தார். மேலும் பிளாக்மெயில் செய்ய முயன்றார்.

    ஹோலேனராசிபுர டவுண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். ஆனால், எனக்கு புகார் மறுக்கப்பட்டது. அதன்பின் பெங்களூருவில் உள்ள டிஜி அலுவலத்தில் புகார் அளித்தேன்" எனத தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில் "யார் குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும், சட்டத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது" என்றார்.

    • பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதையடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார்.

    இதையடுத்து அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தேடிவந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அதிகாலை ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்த போது பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் பிரஜ்வல் ரேவண்ணாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 6ம் தேதியுடன் அவரது காவல் முடிவடைந்தது.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது மேலும் 5 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இதையடுத்து மீண்டும் 5 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் பெரும்பாலான கேள்விகளுக்கு எந்த பதிலும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதற்கிடையே பிரஜ்வல் பிறந்து வளர்ந்த ஹோலே நரசிப்பூர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் நாயுடு தலைமையில் இந்த சோதனை நடந்தது. சுமார் 4 மணி நேரம் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்தது. அப்போது பிரஜ்வலை பார்த்து அவரது தந்தை ரேவண்ணா கண்ணீர் விட்டு அழுதார். இதைப்பார்த்த பிரஜ்வலும் அழுதார். பின்னர் போலீசார் பிரஜ்வலை அங்கிருந்து மீண்டும் விசாரணை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பிரஜ்வல் ஜெர்மனியில் பதுங்கி இருந்த போது அவர் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிரஜ்வல் தங்க மற்றும் அவருக்கு தேவையான பண உதவிகளை அவரது காதலி செய்து இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை மீண்டும் இன்று மாலை நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
    • விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சுமார் 2000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால் கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை கடத்திய குற்றத்திற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் பிரஜ்வாலின் தந்தையுமாகிய ஹச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.

    இந்த விவகாரத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வாலை நாடு திரும்புமாறு அவரது தாத்தா தேவகௌடா எச்சரித்தார்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (மே 31) நாடு திரும்புவதாக பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். அதன்படி நாளை (மே 30)  ஜெர்மனி தலைநகர் 'முனிக்'கிலுருந்து பெங்களூருவுக்கு விமானம் முன்பதிவு செய்துள்ள ரேவண்ணா, நாளை மறுநாள் பெங்களூரு கேம்பகௌடா விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். 

     

     

    • முதல் பென் டிரைவ் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. பிரஜ்வல் ஏப்ரல் 27-ந்தேதி வெளிநாட்டிற்கு ஓடினார்.
    • அவர்கள் ஏழு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வழக்குப்பதிவு செய்து ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

    முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோ வெளியாகி கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கர்நாடகா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு ஓடிவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.

    தற்போது 2-வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் "நாட்டை விட்டு வெளியேறவும், குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் அரசு வழங்கிய சலுகையை பிரஜ்வல் ரேவண்ணா துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தயாவுக்கு கொண்டு வர ஒத்துழைக்க தயராக இருக்கிறோம் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-

    தூதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநில அரசு பிரஜ்வல் மீது மத்திய அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரை தடுத்து நிறுத்தவில்லை என கேள்வி எழுப்பி வருகிறது.

    இதற்கு பதில் அளித்த பிரகலாத் ஜோஷி, மாநில அரசு இந்த விசயத்தில் அரசியல் செய்யவும், மத்திய அரசு மீது பழி சுமத்தவும் முயற்சிக்கிறது என்றார்.

    மேலும், முதல் பென் டிரைவ் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. பிரஜ்வல் ஏப்ரல் 27-ந்தேதி வெளிநாட்டிற்கு ஓடினார். அவர்கள் ஏழு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். வழக்குப்பதிவு செய்து ஏன் தடுத்து நிறுத்தவில்லை? என்றார்.

    • ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
    • போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வா லின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்ப ட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் ரேவண்ணாவிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் மேலும் 7 நாட்கள் காவலை நீட்டிக்குமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி ரேவண்ணாவை வருகிற 14-ந் தேதி வரை விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் ரேவண்ணாவை சிறையிலிருந்து அழைத்துச் சென்று மீண்டும் விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.
    • விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபாச வீடியோ தொடர்பாக ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா தேடிப்படும் நபராக அறிவிக்க்ப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரஜ்வாலின் தந்தையும், எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகியோர் மீது வீட்டு பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வாலுடன் ஆபாச வீடியோவில் இருந்த ஒரு பெண் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரேவண்ணாவை போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்து மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கபட்டார்.

    இதற்கிடையே எச்.டி.ரேவண்ணா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனு மீதான விசாரணையை இன்றைக்கு (வியாழக்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார். அதனால் எச்.டி.ரேவண்ணா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவாரா? இல்லையா? என்பது இன்று தெரியவரும்.

    இதற்கிடையே ஆபாச வீடியோ சர்ச்சை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வால் ரேவண்ணா 7 நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தார். அந்த காலஅவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சர்வதேச அளவில் பிரஜ்வால் ரேவண்ணாவை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பிரஜ்வால் ரேவண்ணா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு திரும்பலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய விமான நிலையங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா (64). எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் மீதும், அவரது மகன் பிரஜ்வால் மீதும் வீட்டு பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயை ரேவண்ணா அவரது மனைவி பவானியின் உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கடத்தி சென்றதாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் கே.ஆர்.நகர் போலீசார் ரேவண்ணா, சதீஸ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு வீடியோவில் ஆபாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த பெண் பிரஜ்வால் மீது புகார் கொடுக்காமல் இருக்க ரேவண்ணா மற்றும் சதீஸ்பாபு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சதீஸ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரேவண்ணா பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த ரேவண்ணாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    பின்னர் பெங்களூரு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரேவண்ணா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் அவரை காவிலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    இதையடுத்து ரேவண்ணாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் அவரிடம் விசாரணை தொடங்கியது.

    அவரிடம் பாலியல் பலாத்கார புகார்கள் மற்றும் பெண் கடத்தல் தொடர்பாகவும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் போலீசார் விசாரித்தனர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.

    பின்னர் ரேவண்ணாவை விசாரணைக்குழு அதிகாரிகள் படுத்து ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் அவர் கீழே படுத்து தூங்க மறுத்துவிட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    காலையில் எழுந்து விசாரணைக்குழு அலுவலகத்திலேயே ரேவண்ணா குளித்தார். தொடர்ந்து காலை உணவும் சாப்பிட்டார். இதையடுத்து மீண்டும் காலை 10 மணி முதல் அவரிடம் விசாரணை தொடங்கியது. எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் மற்றும் பிற அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத ரேவண்ணா இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    அப்போது அதிகாரிகள் சில ஆதாரங்களை முன்வைத்து கேள்விகளை கேட்டனர். அப்போது ரேவண்ணா அமைதியாக இருந்துள்ளார்.

    தொடர்ந்து ரேவண்ணாவை போலீசார் போட்டோ எடுத்தனர். அவரது கை ரேகைகளும் பெறப்பட்டது. முதலில் போட்டோ எடுக்கவும், கை ரேகை பெறவும் ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது போலீசார் நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதையடுத்து ரேவண்ணா ஒத்துழைத்தார். தொடர்ந்து ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரேவண்ணாவால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த பெண்ணை அவரது மகனுடன் பாதுகாப்பான இடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ரேவண்ணாவிடம் விசாரணை முடிவடைந்த பின்பு மீண்டும் 8-ந் தேதி அவரை கோர்ட்டில் போலீசார் அஜர்படுத்த உள்ளனர். விசாரணை நடந்து வரும் அலுவலகத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிரஜ்வால் வேரண்ணா இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது.
    • கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் வேரண்ணா இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்டுத்தியது. தற்போது பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் அரசியல் ரீதியாக எங்களுடைய குடும்பத்தை பலவீனப்படுத்துவதற்காக சதி நடப்பதாக பிரஜ்வால் ரேவண்ணாவின் சகோதரரும், கர்காடகா மாநில மேலவை எம்.எல்.ஏ.-வும் (எம்எல்சி) ஆன சுராஜ் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுராஜ் ரேவண்ணா கூறுகையில் "பிரஜ்வால் ரேவண்ணா (சகோதரர்) ஈடுபட்டதாக கூறப்படும் பாலியல் மோசடி வழக்கு விசாரணைக்காக சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எது நிரூபிக்கப்பட வேண்டுமோ, விசாரணையில் அது நிரூபிக்கப்படும். நான் எப்படி அதற்கு பதில் சொல்ல முடியும்?. பிரஜ்வால் ரேவண்ணா குறித்த தகவல் ஏதும் என்னிடம் இல்லை.

    எனது தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரம் வழக்குகள் தொடரப்படலாம். என்ன நிரூபிக்கப்பட வேண்டுமோ, அது இறுதியில் நிரூபிக்கப்படும். ரேவண்ணாவை பற்றி எங்களுடைய தாலுகா மற்றும் மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். நான் ஏதும் கூற விரும்பவில்லை.

    அரசியல் காழ்ப்புணர்ச்சியால் யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம். ஹசன் அரசியலை நீங்கள் எடுத்துக் கொண்டால், ரேவண்ணாவிற்கு போட்டியாக யாரும் இல்லை. அரசியலில் அவரை போன்று யாரும் இல்லை. அவரை பலவீனப்படுத்த, இந்த சதிகள் அனைத்தும் தீட்டப்படுகின்றன.

    நேற்று கூட தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரஜ்வால் ரேவண்ணா வெற்றி பெறுவது 100 சதவீதம் உறுதி. யாரும் யாரையும் குற்றம் சாட்டலாம். சிறப்பு விசாரணைக் குழு முடிவில் என்ன வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு சுராஜ் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

    • பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு.
    • வீடியோக்கள் வெளியான நிலையில், ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

    தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருப்போது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மாநில காவல்துறை சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    இது தொடர்பாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுவிட்டார்.

    அவரை விசாரணைக்கு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பி ஓட பா.ஜனதா உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விசா கிடைத்தது எப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.

    பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்காக இந்தியா அழைத்து வரப்படுவாரா? அல்லது விஜய் மல்லையா, லலித் மோடி, நிரவ் மோடி ஆகியோரை போன்று வெளிநாட்டிலேயே தங்கிவிடுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும்.

    • பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம்.
    • கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்.

    தேவகவுடா பேரனும், மக்களவை எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்து பேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மிகவும் முக்கியமான விசயம். நாம் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் கேட்க விரும்புகிறோம். பிரியங்கா காந்தி அவர்களுடைய முதல்-மந்திரி, துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ×