என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veil"

    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
    • வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.

    தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

     பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

     இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    • பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
    • கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

    மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து அம்மனை வழிபட்டு கோவில் வளாகத்தில் உள்ள குண்டத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் போட்டு வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.

    குறிப்பாக கர்நாடக மாநில எல்லையை யொட்டிய பகுதியில் கோவில் அமைந்து உள்ளதால் அந்த மாநில பக்தர்களும் அதிகளவில் வந்து அம்மனை வழிபடுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் உள்பட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலர் கூட்டம் காரணமாக வெயிலில் நிற்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் தரிசனத்துக்கு வருபவர்களும் வெயிலால் சிரமம் அடைந்து வந்தனர்.

    இதையடுத்து பக்த ர்களின் சிரமத்தை தவி ர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் உப்பு குண்டத்தை சுற்றி தரைக்கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தில் நகரும் நிழற்குடைகளும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடைகள் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் போது அவர்கள் வசதிக்காக பயன்படுத்தப்படும். வெயில் மற்றும் மழை காலங்களில் பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் வரவழைக்கப்பட்டுள்ளது.

    ×