search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை இந்தியன்ஸ் அணி"

    • ஆட்ட நாயகி விருதை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் வென்றார்.
    • 523 ரன்கள் எடுத்த நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மும்பை:

    மூன்றாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 44 பந்தில் 66 ரன் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

    இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த மும்பை அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.

    மேலும், நாட் சிவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

    • மும்பை அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
    • இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று அணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் மும்பை அணிக்கு ஒரு மோசமான சீசனாக அமைந்துள்ளது. மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 தோல்வி, 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் இத்தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி இதுவாகும்.

    10 ஆண்டுகளுக்கு பின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் களமிறங்கிய மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் தோல்வி குறித்து தங்களது கருத்தை பயிற்சியாளரிடமும், அணியின் நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    தோல்வியின் போது ஒரு வீரரின் மேல் பழியை போடுவதும் மும்பை வீரர்களால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எனர்ஜி இல்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைலே காரணம் என்று கூறியுள்ளனர்.

    இதற்கு மும்பை அணி நிர்வாகிகள், அணி 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வந்துள்ளது. அதனால் வழக்கமாக தலைமை மாற்றத்தின் போது வரும் சவால் தான் மும்பை அணிக்கும் வந்துள்ளது. இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று கூறியுள்ளனர்.

    ×