என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சஞ்சீவ் கோயங்கா"

    • பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
    • இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 17 ரன்களே எடுத்து உள்ளார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையில் ரிஷப்பண்ட் உள்ளார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. கடந்த காலங்களில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.

    ஆனால் ரிஷப்பண்டின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ரூ.27 கோடிக்கான மதிப்பில் அவர் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து அவர் 17 ரன்களே எடுத்து உள்ளார். சராசரி 5.66 ஆகும். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்துள்ளார்.

    டெல்லி அணிக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமலும், ஐதராபாத்துக்கு எதிராக 15 ரன்னும் எடுத்து வெளியேறி இருந்தார். நேற்றைய பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.

    தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் ரிஷப்பண்டுடன் உரையாற்றுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. தோல்வி தொடர்பாக அவர் ரிஷப்பண்டை கேள்வி கேட்பது போல் உள்ளது. மேலும் ரிஷப் பண்டை நோக்கி விரலை நீட்டியது கூட காணப்பட்டது.

    இது தொடர்பாக சமூக வலைதளத்தில் சஞ்சீவ் கோயங்கா விமர்சிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனின் போது அவர் கேப்டனாக பணியாற்றிய கே.எல். ராகுல் மீதும் தோல்வி தொடர்பாக கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ராகுல் அந்த அணியில் இருந்து இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அதே நிலைமை ரிஷப்பண்டுக்கு உருவாகிறது.

    • இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
    • பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. கடந்த வருடம் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் மெகா ஏலத்தை தொடர்ந்து லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம்.

    அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது.

    என்று கோயங்கா கூறினார்.

    • ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.
    • ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உபி முதல் மந்திரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    லக்னோ:

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில், ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணி வீரர்கள் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

    மேலும் லக்னோ அணி வீரர்கள் கையெழுத்திட்ட மினி பேட்டை யோகி ஆதித்யநாத்திற்கு பரிசாக லக்னோ அணி உரிமையாளரும் கேப்டன் ரிஷப் பண்டும் இணைந்து வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • கடைசி 2 போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.

    இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டிக்கு பிறகு கேஎல் ராகுலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும், மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் அவர் ஒருசில தினங்களில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கேஎல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.
    • இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களில் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடராக ஐ.பி.எல். இருந்து வருகிறது.

    அந்த வகையில், ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியிடம் லக்னோ அணி கடுமையான தோல்வியை தழுவியது.

     


    தனது அணி மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுலை களத்தில் வைத்தே மிகவும் கடுமையாக சாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதோடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது கே.எல். ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பரஸ்பரம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது.
    • எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்காளக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 5 முதல் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடியை கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்காக ரூ.50 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஏலத்துக்கு வந்தால் ஒரு வீரருக்கு 50 சதவீத சம்பளத்தை பயன்படுத்த முடியுமா? மற்ற 22 வீரர்களை எப்படி தேர்வு செய்ய இயலும்.

    எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது. சிறந்த வீரர் சிறந்த கேப்டன் இருக்க வேண்டும். ஒவ்வொரு உரிமையாளருக்கும் ஒரே ஆசை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக கேப்டன் கே.எல்.ராகுலை பொது வெளியில் சஞ்சீவ் கோயங்கா கண்டித்தார். அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இருந்தது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக நீடிக்க மாட்டார். ஆனால் அவர் அணியில் தொடர்ந்து இருப்பார்.

    சமீபத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை கே.எல். ராகுல் சந்தித்து கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

    • ரிஷப் பண்டை லக்னோ அணியும், கேஎல் ராகுலை டெல்லி அணியும் ஏலம் எடுத்தது.
    • சஞ்சீவ் கோயங்கா, toxic boss என்று கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டிடம் கூறுவது போல மீம்ஸ் வெளியாகி வைரலானது.

    2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

    இந்நிலையில் சஞ்சீவ் கோயங்கா ஒரு கடுமையாக நடந்து கொள்ளும் (toxic boss) முதலாளி என்று கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்டிடம் கூறுவது போல மீம்ஸ் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில் லக்னோ அணியின் ஊரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா எப்படிப்பட்டவர் என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது:-

    பாஸ் அன்பானவர், அக்கறையுள்ளவர் மற்றும் கடினமானவர். மேலும், உங்களுக்கு அன்பு தேவைப்படும்போது அவர் உங்களுக்கு அன்பைத் தருவார். உங்களுக்கு அக்கறை தேவைப்படும்போது உங்களுக்கு அக்கறையைத் தருவார். சில திட்டுகள் தேவைப்படும்போது உங்களையும் திட்டவும் செய்வார் என ராகுல் கூறினார்.

    ×