என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டடம் இடிந்து விபத்து"

    • சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
    • கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.

    கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     

    • வீட்டின் பழைய அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், கட்டடம் எழுப்பியுள்ளார்.
    • வீடு சரிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் வசித்து வருபவர் சுந்தர பாண்டியன். இவர் வசித்து வந்த வீடு 1988-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த வீட்டின் பழைய அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், கட்டடம் எழுப்பியுள்ளார். இந்நிலையில் நேற்று பெய்த லேசான மழையில் பழைய அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விபத்துக்குள்ளானது.

    2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விழும்போழுது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வீடு சரிந்து விழுந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் புராரி பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இடிபாட்டிற்குள் சிக்கியிருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, இடிபாடுகளில் சிக்கிய 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மேலும் இந்த இடிபாட்டில் இருந்து 12 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி கட்டிட விபத்தில் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், எங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    ×