என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சன்ரைசர்ஸ் ஐதராபாத்"

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்களை மட்டுமே எடுத்தது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன. பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.

    4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடி 111 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் அரை சதம் கடந்தனர். துருவ் ஜுரல் 70 ரன்னும், சஞ்சு சாம்சன் 66 ரன்னும் எடுத்தனர்.

    6வது விக்கெட்டுக்கு ஹெட்மயர்-ஷ்உபம் துபே ஜோடி 80 ரன்களை சேர்த்துப் போராடியது. ஹெட்மயர் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.
    • 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு ராஜஸ்தான் ஆடி வருகிறது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் 3 விக்கெட்டுகள் விரைவில் வீழ்ந்தன.

    பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.

    4வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன்-துருவ் ஜுரல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார்.

    ராஜஸ்தான் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல்45 ரன் எடுத்து ஆடி வருகிறார்.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
    • இஷான் கிஷன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.

    சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 24 ரன்னும், நிதிஷ் ரெட்டி 30 ரன்னும், கிளாசன் 34 ரன்னும் எடுத்தனர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 45 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
    • ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    முதல் ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. 2வது ஓவரில் 2வது ஓவரில் 14 ரன்னும் கிடைத்தது.

    3வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட் 21 ரன்கள் கிடைத்தது. 4வது ஓவரில் முதல் பந்தில் அபிஷேக் சர்மா 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து டிராவிஸ் ஹெட்டுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. இதனால் பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.

    ஐதராபாத் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 21 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி அடித்து அரை சதம் கடந்தார்.

    • ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
    • இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணி:-

    டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷண், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அங்கித் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ், சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    சச்சின் பேபி, ஜெய்தேவ் உனத்கட், ஜிஷன் அன்சாரி, ஆடம் ஜமபா, வியான் முல்டர்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:-

    ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ரானா, ரியான் பராக், துருவ் ஜுரல், ஹெட்மயர், ஜோப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, பரூக்கி பரூக்.

    இம்பேக்ட் பிளேயர்ஸ்:

    சஞ்சு சாம்சன், குனல் சிங் ரதோர், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, குவேனா மாபாகா

    • டிராவிஸ் ஹெட், கிளாசன், இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
    • பேட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல் உடன் முகமது ஷமி இணைந்துள்ளது அணிக்கு பலம் சேர்க்கும்.

    கடந்த முறை சாம்பியன் பட்டத்தை தவற விட்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் வகையில் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    பேட்ஸ்மேன்கள்

    டிராவிஸ் ஹெட், கிளாசன், இஷான் கிஷன், அதர்வா டைடு, அபிநவ் மனோகர், அனிகெட் வர்மா, சச்சின் பேபி

    ஆல்-ரவுண்டர்கள்

    அபிஷேக் சர்மா, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், வியான் முல்டர், நிதிஷ் குமார் ரெட்டி

    பந்து வீச்சாளர்கள்

    பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், எசான் மலிங்கா.

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சிக்சர்கள், பவுண்டரிகள் என வாணவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு ஏற்றபட சர்வதேச போட்டிகளில் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஒருவேளை காயம் போன்ற ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் இஷான் கிஷன் மாற்று தொடக்க வீரராக உள்ளார்.

    மிடில் ஆர்டர்

    கிளாசன், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அதர்வா டைடு, கமிந்து மெண்டிஸ், முல்டர் என உள்ளனர். முதல் ஆறு பேர் அதிரடியாக விளையாடக் கூடியவர்களாக இருப்பார்கள்.

    வேகப்பந்து வீச்சு

    பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், வியான் முல்டர் ஆகிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் எசான் மலிங்கா, சிமர்ஜீத் சிங் உள்ளிட்டோர் உள்ளனர். நிதிஷ் குமாரும் தேவைப்பட்டால் மிதவேக பந்து வீச்சாளராக திகழ்வார்.

    பேட் கம்மின்ஸ், முகமது ஷமி, ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் ஆகியோர் களம் இறங்க வாய்ப்புள்ளது. முகமது ஷமி, உனத்கட் தொடக்கத்தில் பந்து வீச, பேட்கம்மின்ஸ் மிடில் ஓவர்கள் பந்து வீச வாய்ப்புள்ளது. ஹர்ஷல் படேல் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளர். இதனால் கடைசி 4 ஓவரின்போது பயன்படுத்தப்படுவார்.

    சுழற்பந்து வீச்சு

    ஆடம் ஜம்பா, ராகுல் சாஹர் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள். அபிஷேக் சர்மா அவர்களுக்கு துணையாக இருப்பார்.

    வெளிநாட்டு வீரர்கள்

    கிளாசன், டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ், வியான் முல்டர், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, எசான் மலிங்கா ஆகியோர் உள்ளனர். இதில் கிளாசன், டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை இம்பேக்ட் பிளேயர் வாய்ப்பை பயன்படுத்த டிராவிஸ் ஹெட்டை பேட்டிங் செய்ய வைத்து, ஆடம் ஜம்பா பந்து வீச வைக்கப்படலாம். இல்லையெனில் மற்ற வெளிநாட்டு வீரர்கள் ஆடும் லெவனில் இடம் பெற வாய்ப்பில்லை.

    பேட்டிங்கில் அசுர பலத்துடன் விளங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் முகமது ஷமி இணைந்துள்ளது பந்து வீச்சுச்கான சமநிலையை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    • சென்னை அணி அதிரடி வீரர் பிராவோவை விடுவித்துள்ளது.
    • ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள்

    சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    சென்னை சூப்பர் கிங்ஸ்:

    டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)

    மும்பை இந்தியன்ஸ்:

    கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

    பஞ்சாப் கிங்ஸ்:

    மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

    கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதாம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்

    குஜராத் டைட்டன்ஸ்:

    ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

    ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மணீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

    ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜாஸ் பரோகா

    டெல்லி கேபிட்டல்ஸ்:

    ஷர்துல் தாக்கூர், டிம் சீபர்ட், அஷ்வின் ஹெப்பர், கேஎஸ் பாரத், மந்தீப் சிங்

    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
    • அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.

    16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

    அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

    எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

    அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது.
    • கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு நீண்ட நாட்களாகவே பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.

    போலாந்த்:

    சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளரும், சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனுக்கு நீண்ட நாட்களாகவே பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடும் போது, போட்டியை பார்ப்பதை விட ரசிகர்கள் காவ்யா மாறனின் ரியாக்சனை தான் பார்ப்பார்கள்.

    ஐபிஎல் ஏலத்தில் கூட காவ்யா மாறன் படு சிறப்பாக செயல்படுவார். எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ, அதே அளவிற்கு அறிவையும் பயன்படுத்தி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு ஆட்டம் காட்டியவர் காவ்யா மாறன். இந்த நிலையில், காவ்யா மாறனின் புகழ் கடல் தாண்டி தென்னாப்பிரிக்க வரை சென்றது.


    தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது. இந்த நிலையில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் போலாந்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசியது.

    அப்போது ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யும் போது 8 ஓவர் முடிவில் 60 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த போது தான், கூட்டத்தில் இருந்த வெளிநாட்டு ரசிகர் ஒருவர், காவ்யா மாறனுக்கு கல்யண புரபோஷலை கொடுத்துள்ளார். அதில் காவ்யா மாறன் தம்மை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற பதாகையை வைத்த படி அந்த இளைஞர் தனது காதலுக்காக கடல் தாண்டி தூது விட்டார்.

    தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து ஈஸ்டர்ன் கேப் அணி 18.2வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3வது வெற்றியை காவ்யா மாறன் படை பதிவு செய்துள்ளது.

    • கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
    • 28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல். 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

    28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    • சென்னை சேப்பாக்கத்தில் நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது போட்டி நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.

    இந்தப் போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் மகள் ஹன்விகா உடன் கொஞ்சி பேசி மகிழ்ந்தார்.

    அப்போது எனக்கு மகள் இருக்கிறாள் என்று டோனி சொல்லவே, தம்பி இல்லையா என்று நடராஜனின் மகள் கேட்க, இல்லை இவ்வளவு உயரத்தில் ஒரு மகள் இருக்கிறாள் என்று டோனி சைகையால் கூறினார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியின் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 95 ரன்களும் சாம்சன் 66 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அப்துல் சமத் அதிரடியாக விளையாடியும் கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா அவுட்டாக்கினார். ஆனால் அதை நோ-பாலாக வீசிய காரணத்தால் கடைசியில் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அவர் 7 பந்தில் 17 ரன்களை குவித்தார்.

    இதன் மூலம் ஐதராபாத் அணி முதல் முறையாக 200+ இலக்க ரன்னை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும். 

    ×