search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரா ஒலிம்பிக்ஸ்"

    • இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.
    • நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

    பிரான்ஸ் நாட்டின் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று அசத்தியது. முன்னதாக கடந்த டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 19 பதக்கங்கள் வென்று இருந்த நிலையில், இந்த முறை முந்திய இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 29 பதக்கங்களை வென்று அசத்தினர்.

    இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பாராஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு பரிசுத்தொகை அறிவித்தது. அதன்படி தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.75 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.50 லட்சமும், வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

     


    பரிசு தொகைக்கான காசோலையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கினார். இதுதவிர அணிகள் பிரிவில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.22.5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    பரிசு தொகை வழங்கி பிறகு பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "2028 லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக்ஸில் அதிக பதக்கங்கள் மற்றும் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக நம் பாரா-தடகள வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்குவோம்."

    "நாட்டிற்கு விருதுகளை பெற்றுத்தந்துள்ளீர்கள், வாழ்வின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் இதோடு நிறுத்தக்கூடாது. லாஸ் ஏஞ்சல்ஸில் (2028) அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டிக்காக பயிற்சியை துவங்க வேண்டும். இதன் மூலம் நாம் அதிக பதக்கங்களை வெல்ல முடியும்."

    "2036-இல் இந்தியா ஒலிம்பிக்ஸ் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் நடத்தும் போது, நாம் நமது திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்தார். 

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

    ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த பதிவில், "பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் பாரா ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பர்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல தடைகளைத் தாண்டி, பாராலிம்பிக்ஸில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்," என திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

    "மிகவும் மறக்கமுடியாத விளையாட்டு திறன் மற்றும் ஒரு சிறப்பான பதக்கம்!

    பாராலிம்பிக்ஸில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் கபில் பார்மருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பாராலிம்பிக்ஸ்2024ல் ஆடவருக்கான 60கிலோ J1 போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்! அவருடைய முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்கள் அடங்கும். தற்போது ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து இந்தியா தனது 25 ஆவது பதக்கத்தை பெற்றது.

    ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.

    • வில்வித்தையில் ஹர்விந்தர் போலந்து வீரரை 6-0 என வீழ்த்தினார்.
    • க்ளப் த்ரோவில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி கிடைத்தது.

    பாரா ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு இன்று அதிகாலை நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தினர்.

    வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் போலந்தின் லூகாஸ் சிஸ்ஜெக்கை எதிர்கொண்டார். இதில் ஹர்விந்தர் 6-0 (28-24, 28-27, 29-25) என போலந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார்.

    அதன்பின் நடைபெற்ற க்ளப் த்ரோ (F51) போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது. தரம்பீர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான பிரனாவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா ஐந்து தங்கம், 9 வெற்றி, 10 வெண்கல பதக்கம் என 24 பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இந்தியாவுக்கு 7-வது நாளான புதன்கிழமை 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது.
    • படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

    பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் டிரண்ட் இந்திய சினிமாவில் கோலோச்சி வருகிறது. அதிலும் முக்கியமாக விளையாட்டு வீரர்களின் தன்னபிக்கையூட்டும் கதைகள் சினிமா மூலம் சொல்லப்பட்டு வருகிறது. தங்கல், எம்.எஸ் தோனி உள்ளிட்ட படங்கள் அதற்கு சிறந்த எடுக்காட்டாகும். அந்த வகையில் இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப் பதக்க ம்வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு 'சந்து சாம்பியன்' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

     

    கபீர் கான் இயக்கும் இப்படத்தில் முரளிகாந்த் கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் கர்த்திக் ஆர்யன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பை குறித்து படத்தின் இயக்குனர் கபீர் கான் மனம் திறந்துள்ளார்.

    இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர், "சந்து சாம்பியன் கதை எந்த அளவுக்கு மக்களுக்கு ஊக்கமளிப்பதோ அதற்க்கு சற்றும் குறையாத வகையில் இந்த படத்துக்காக கார்த்திக் ஆர்யனின் கடின உழைப்பும் ஒருவருக்கு ஊக்கமளிக்கக் கூடியது ஆகும். ஒன்றை வருடங்களுக்கு முன் நான் கார்த்திக்கிடம், இது ஒரு உலக சாம்பியனை பற்றிய கதை என்பதால் சர்வதேச விளையாட்டு வீரரின் உடற்கட்டு உங்களுக்கு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தேன், அதற்கு அவர் சிரித்தபடியே சரி என்று கூறினார்.

    அதன்படி ஒன்றரை வருட காலத்துக்குள் எந்த விதமான ஸ்டிராய்டுகளும் இல்லாமல் கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் கொழுப்பை 32 சதவீதம் வரை குறைத்து 18 கிலோ எடை குறைந்துள்ளார். அவரை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சந்து சாம்பியன் படம் தொடர்பான கார்த்திக் ஆர்யனின் ட்ரான்ஸ்பர்மேசன் போஸ்டர் கார்த்திக் ஆர்யனின் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரின் கமிட்மென்டை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். சந்து சாம்பியன் படத்தின் டிரைலர் நாளை (மே 18) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    ×