search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படைகள் அமைப்பு"

    • கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்பு.

    கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடலூர் அருகே கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக இன்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.

    இந்த கொலை வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

    கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    • கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் பகுதியை சோ்ந்தவர் சிவகுருமுத்துசாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இவர் கடந்த 20-ந் தேதி தனது வருங்கால மனைவி மற்றும் அவரின் நண்பர்களுடன் நெல்லை- திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த 6 பேர் கும்பல் கண்இமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர்.

    இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 5 பேர் கும்பலை பிடித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பசேரா விசாரணை நடத்தினார்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பக்கப்பட்டியில் நடந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது தீபக்ராஜா என்பதால் அவரை மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

    அவர்களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் மேலும் 8 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள். தனிப்படை போலீசார் அவர்கள் இருக்கும் இடங்கள் குறித்து தகவல் சேகரித்து வருகிறார்கள். விரைவில் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில் சரவணன், ஐயப்பன், தம்பன், ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது கொலை வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜா (வயது 28).

    பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது 4 கொலை வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

    இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது வருங்கால மனைவியுடன் பாளை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தபோது 6 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி தூத்துக்குடி கோர்ட்டில் இருந்து போக்சோ வழக்கில் பக்கப்பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவர் விடுதலையான நிலையில் அவர் வாகைகுளம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அவரை முன்விரோதத்தால் ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தனர்.

    அதில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு தீபக்ராஜா உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்றும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்து 2-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.

    இதனால் தீபக்ராஜா உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தற்போது 5 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளதால், அவரது உறவினர்களிடம் தீபக்ராஜா உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருமுத்துசாமி. இவரது மகன் தீபக்ராஜா(வயது 30).

    இவர் நேற்று மதியம் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளை கே.டி.சி.நகர் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது ஓட்டலில் இருந்து வெளியே வந்த அவரை 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.

    தகவல் அறிந்த பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, உதவி கமிஷனர் பிரதீப் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் புளூட்டோ வரழைக்கப்பட்ட நிலையில் அது திருச்செந்தூர் சாலையில் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.

    இந்த சம்பவம் குறித்து பாளை போலீசில் தீபக்ராஜாவின் அண்ணன் முத்துக்குமார் அளித்த புகாரின்பேரில் மர்ம நபர்கள் 6 பேர் தீபக்ராஜாவை கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவத்தை நிகழ்த்திய கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேவேந்திர குல வேளாளர் அமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக இருந்த தீபக் ராஜாவுக்கு அவரது உறவினர் மகள் ஒருவருடன் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.

    இந்நிலையில் நேற்று அவர் தனது வருங்கால மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களை கே.டி.சி.நகர் தனியார் ஓட்டலுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். பின்னர் அவர்களை சாப்பிட சொல்லிவிட்டு தனது வருங்கால மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பாக அந்த ஓட்டலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்து விட்டு சிவப்பு நிற காரில் தப்பியதும், அந்த காருக்கு பின்னால் சில மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் தப்பிச்செல்வதும் தெரியவந்தது. இதனால் அந்த சாலையில் உள்ள மற்ற கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் நெல்லை-குமரி நான்குவழிச்சாலை வழியாக காரில் தப்பிச்சென்றது தெரியவந்து.

    இதையடுத்து நான்குவழிச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 15-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த கும்பல் கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாமா? அல்லது போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிடுவதற்காக குமரி நோக்கி சென்றுவிட்டு பாதி வழியில் திரும்பி கிராமங்கள் வழியாக தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு தப்பி சென்றிருக்கலாமா? என்ற கோணத்தில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட தீபக்ராஜா மீது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் குண்டு வீசி இரட்டைக்கொலை, முறப்பநாடு, தாழையூத்து, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள், மதுரை மாவட்டத்தில் ஆயுதங்கள் பயன்படுத்திய வழக்கு என சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. அவரது பெயரை ரவுடிகள் பட்டியலில் வைத்து கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சமீபத்தில் கூட தீபக் ராஜாவிற்கும், மற்றொரு தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சமூக ரீதியில் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை கொலை செய்திருக்கலாமா? என்று தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவம் நடந்த நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட வந்த சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்யும் வரை தீபக்ராஜா உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று அவரது உறவினர்கள் தமிழர் விடுதலை களம் ராஜ்குமார் தலைமையில் நேற்று அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறை அருகே திருச்செந்தூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்யும்வரை அவரது உடலை பெற்று கொள்ளப்போவதில்லை என கூறினார். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக தீபக் ராஜா உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். 

    ×