என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை பங்குச் சந்தை"

    • மும்பை பங்குச் சந்தை முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது.
    • இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது.

    மும்பை பங்குச் சந்தையின் வர்த்தகம் நேற்று 74.221.06 சென்செக்ஸ் புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு வர்த்தகம் 74.253 சென்செக்ஸ் புள்ளிகளுடன் தொடங்கியது.

    நேரம் செல்லசெல்ல வர்த்தகத்தின் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றது. மதியம் 3.15 மணியளவில் வர்த்தகம் 75,499.91 புள்ளியை தொட்டது. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இந்த உயரத்தை வர்த்தகம் தொட்டது கிடையாது.

    முதன்முறையாக 75,499.91 புள்ளிகளை தொட்டுள்ளது. இன்று குறைந்தபட்சமாக 74,158.35 சென்செக்ஸ் புள்ளிகளில் வர்த்தகமானது. அதன்பின் உச்சத்தை எட்டியது. நேற்றைய முடிவில் இருந்து கணக்கிடும்போது மும்பை பங்குச்சந்தை வர்த்தம் 1196.98 புள்ளிகள் அதிகரித்தது.

    அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 23 ஆயிரத்தை நெருங்கியது. இன்று அதிகபட்சமாக நிஃப்டி 22,993.60 புள்ளிகளில் வர்த்தகமானது. 22,967.65 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

    மகிந்திரா அண்டு மகிந்திரா, லார்சன் அண்டு டூர்போ, ஆக்சிஸ் பேங்க், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், இந்துஸ்இந்த் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஐசிஐசி பேங்க், டைட்டன், டாட்டா கல்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டட்ரிஸ் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

    சன் பார்மா, பவர்கிரிட், என்டிபிசி பங்குகள் சரிவை சந்தித்தன.

    மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் பங்கு ஆதாயம் (ஈவுத்தொகை) கொடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பட்ஜெட் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்காகும். வரவிருக்கும் அரசின் வருவாய் உயர்வுக்கு இது உதவியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    புதன்கிழமையை பொறுத்தவரையில் ஆசிய பங்குசந்தைகளில் சியோல் பங்கு சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தது. ஷாங்காய், ஹாங்காங் இறக்கத்தில் முடிவடைந்தது. ஐரோப்பிய மார்க்கெட்டுகள் ஏறக்குறைய ஏற்றத்தில்தான் இருந்தது.

    • ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட் ஏற்றம் கண்டன.
    • மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் பங்குகள் சரிவை சந்தித்தன.

    மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.

    வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) ஆகியவை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்வை சந்தித்து வர்த்தகமானது.

    சென்செக்ஸ்

    மும்பை பங்கு சந்தை வர்த்தகம் நேற்று 78,053.52 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 9.15 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 78,094.02 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல உயர்ந்து வண்ணம் இருந்தது. மதியம் 3 மணியளவில் 78,759.40 புள்ளிகளை தொட்டு வர்த்தகம் ஆனது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். அதன்பின் சற்று குறைந்து வர்த்தகம் சென்செக்ஸ் 78,674.28 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 0.80 சதவீதம் உயர்ந்தது.

    நிஃப்டி

    அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இதுவரை இல்லாத அளவிற்கு 23,889.90 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நேற்றைய வர்த்தகம் நிஃப்டி 23721.30 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,723.10 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.

    சற்று ஏற்ற இறக்கம் கண்ட நிலையில் புதிய உச்சமான 23,889.90 புள்ளிகளில் வர்த்தகமாகி 23,868.80 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.

    30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இன்ஸ்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், அல்ட்ரெ டெக் சிமெண்ட், சன் பார்மா, அதானி போர்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பஜாஜ் பினான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்வை கண்டன.

    மகிந்த்ரா அண்டு மகிந்த்ரா, டாடா ஸ்டீல், டெக் மகிந்த்ரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    ஆசிய மார்க்கெட்டுகளான சியோல், டோக்கியோ, ஷாங்காள், ஹாங் காங் மார்கெட்டுகளும் இன்று உயர்ந்து காணப்பட்டன.

    • நேற்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
    • இன்று அதையும் தாண்டி 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி உச்சத்தை எட்டியுள்ளது.

    மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சென்செக்ஸ் 78,759.40 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இதுதான் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக இருந்தது.

    இந்த நிலையில் இன்று 79 ஆயிரத்தை கடந்த 79,396.03 புள்ளிகளில் வர்த்தகமாகி இது இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.

    நேற்று சென்செக்ஸ் 78,674.25 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 78,758.67 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய வர்த்தகம் முடிவடைவதற்கு சற்றுமுன் 3.15 மணியளவில் 79,396.03 புள்ளிகளை எட்டியது. அதன்பின் சற்று குறைந்து 79,243.18 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று குறைந்த பட்சமாக 78,467.34 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    நிஃப்டி

    அதேபோல் இந்திய பங்கு சந்தை நிஃப்டியும் இன்று இதுவரை இல்லாத வகையில் 24,087.45 புள்ளிகளை எட்டி வர்த்தகம் ஆனது. நேற்று 23,868.80 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 23,881.55 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இன்றைய குறைந்த வர்த்தகம் 23,805.40 புள்ளிகள் ஆனது.

    மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியான அடுத்த இரண்டு நாட்கள் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) மற்றும் இந்திய பங்குச் சந்தை (நிஃப்டி) உயர்வை சந்தித்தன.

    வாக்கு எண்ணிக்கை நாளன்று பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால் கடுமையான சரிவை சந்தித்தன. அதன்பின் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்கும் என உறுதியான பிறகு பங்குச் சந்தை உயர்ந்த வண்ணம் உள்ளது.

    • அதிக பட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
    • குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு/ Share markets stock markets BSE sensex surge 809 point also nifty surgedமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,182.74 புள்ளிகளுடன் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது. நேற்று சென்செக்ஸ் 80,956.33 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் புள்ளிகள் சற்று குறைந்து உயர்ந்து வர்த்தகம் ஆனது. மதியம் 12 மணியளவில் சட்டென சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. பின்னர் அப்படியே உயர்ந்து அதிகபட்சமாக 82,317.74 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    மதியம் 2.50 மணிக்கு சுமார் 900 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் ஆனது. சரிவை சந்தித்து உடனடியாக மார்க்கெட் உயரத் தொடங்கியது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 81,765.86 புள்ளிகளில் வர்த்தம் நிறைவடைந்தது.

    இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 809.53 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் குறைந்த பட்சமாக 80,467.37 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 82317.74 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    இதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 240.95 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவந்தது. நேற்று நிஃப்டி 24,467.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவந்தது. இன்று காலை நிஃப்டி 24,539.15 புள்ளிகளில் வர்த்தம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 24,295.55 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 24,857.75 நிஃப்டி வர்த்தகம் ஆனது.

    டாலருக்கு நிகரான இந்திய பணமதிப்பு 84.72 ரூபாயாக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 84.75 ரூபாயாக இருந்த நிலையில் 84.72 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    • டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் ஏற்றம்.
    • டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 241.30 புள்ளிகள குறைந்து சென்செக்ஸ் 77,378.91 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

    நேற்று சென்செக்ஸ் 77,620.21 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 77,882.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் சரிவை சநித்தது. பின்னர் மெல்லமெல்ல சற்று உயர்வை சந்தித்த வர்த்தகம் இறுதியாக 241.40 புள்ளிகள் சரிந்து 77,378.91 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    இன்று குறைந்தபட்சமாக 77,099.55 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,919.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

    நிஃப்டி

    இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 86.50 புள்ளிகள் சரிவடைந்து 23,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நேற்று நிஃப்டி 23,526.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 23,551.90 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகம் குறைந்த பட்சமாக 23,344.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,596.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 86.50 புள்ளிகள் குறைந்து 23,440.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

    டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 14 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 88 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஏற்றம் கண்ட பங்குகள்

    30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன

    வீழ்ச்சி கண்ட பங்குகள்

    டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க், ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    • சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது.
    • பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,018 புள்ளிகள் சரிந்து கடும் வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த ஐந்த நாட்களும் சரிவில் முடிவடைந்த நிலையில் மொத்தம் சென்செக்ஸ் 2,290.21 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

    நேற்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 77,311 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 77,384.95 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. மதியம் 12 மணிக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இறுதியாக சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் சரிவை சந்தித்து 76,293.60

    புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக சென்செக்ஸ் 77,387.28 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக சென்செக்ஸ் 76,030.59 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    சொமேட்டோ பங்கு 5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், எல்&டி போன்ற பங்குகளும் சரிவை எதிர்கொண்டது. பாரதி ஏர்டெல் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போன்று, இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் கடும் சரிவை எதிர்கொண்டது. நேற்றைய வர்த்தகம் 23,381.60 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 23,383.55 புள்ளிகளில் தொடங்கியது. குறைந்தபட்சமாக 22,986.65 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,390.05 புள்ளிகளில் வர்த்தகமான நிலையில், இறுதியாக நிஃப்டி 309.80 புள்ளிகள் குறைந்து 23,071.80 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    திங்கட்கிழமை அமெரிக்க மார்க்கெட் உயர்வை சந்தித்த நிலையில், ஆசிய மார்க்கெட்டுகளான ஷாங்காய், ஹாங்காங் போன்றவை சரிவை சந்தித்தன. சியோல் மார்க்கெட் க்ரீனில் முடிவடைந்தது. ஐரோப்பாவின் பெரும்பாலான மார்க்கெட்டுகளும் சரிவை சந்தித்துள்ளன.

    கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 76.74 அமெரிக்க டாலருக்கு விற்பனையாகிறது.

    பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.
    • அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 8 வர்த்தக அமர்வுகளில் ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பிப்ரவரி 5 அன்று ரூ.42,80,3611.66 கோடியாக இருந்த மொத்த சந்தை மூலதனம், அடுத்த 8 வர்த்தக அமர்வுகளில் சரிவுக்கு பிறகு இப்போது ரூ.40,09,9281.11 கோடியாகக் குறைந்துள்ளது.

    இந்த காலகட்டத்தில் சந்தை ரூ.27 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளது. கடந்த எட்டு வர்த்தக அமர்வுகளில் சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 3% சரிந்துள்ளது.

    தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் எல்.ஐ.சி.க்கு ரூ.18,385 கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்திய பங்குச் சந்தை தொடர்ச்சியான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர்.

    தொடர்ந்து அந்நிய முதலீடு வெளியேறுதல், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு போன்றவை இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

    இந்நிலையில், எல்.ஐ.சி. முதலீடு செய்த 330 நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் அந்நிறுவனத்துக்கு கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.84,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில், ITC மூலம் ரூ.11,863 கோடியும் லார்சன் & டூப்ரோ மூலம் ரூ.6,713 கோடியும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் ரூ.5,647 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.18,385 கோடியும், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் மூலம் ரூ. 8,981 கோடியும், உள்கட்டமைப்பு பங்குகளின் மூலம் ரூ. 8,313 கோடியும், மின் உற்பத்தி பங்குகளின் மூலம்(ரூ. 7,193 கோடியும் மருந்துப் பொருட்கள் பங்குகளின் மூலம் (ரூ. 4,591 கோடியும் எல்.ஐ.சி.க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    • சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது.
    • ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன.

    வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப்ரவரி 28) மும்பை பங்குச் சந்தை பெரும் சரிவுடன் தொடங்கியுள்ளது.

    காலை நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் 73,738.11 சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 22,300-க்கு கீழ் சென்றதால் வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஐடி, டெலிகாம், மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன. இந்த தொடர் சரிவு இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    ×