என் மலர்
நீங்கள் தேடியது "சிபிஐஎம்"
- ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சி.பி.ஐ.எம் வலியுறுத்தி உள்ளது.
- ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை.
மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.
ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கும் எம்.ஏ.பேபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிபிஐ(எம்) பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தோழர் எம்.ஏ. பேபிக்கு வாழ்த்துக்கள்.
மாணவர் தலைவராக அவசரநிலையை சவால் செய்வதில் இருந்து, முற்போக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவின் கல்விக் கொள்கையை வடிவமைப்பது வரை, அவரது பயணம் நோக்கத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றில் வலுவான உறவுகளை திமுக எதிர்நோக்குகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 37 வயதான பழங்குடியினப் பெண், வறுமையின் காரணமாக பிறந்த பெண் குழந்தையை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவின் கந்தசேராவில் உள்ள தாராபன் காலனியைச் சேர்ந்த மோர்மதி திரிபுரா (39) என்ற பழங்குடியின பெண்ணுக்கு கடந்த மே 22 ஆம் தேதி வீட்டில் வைத்து நடந்த பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு தாயான மோர்மதியின் கணவர் 5 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் கடுமையான வறுமையில் குடும்பம் இருந்துள்ளது. ரேஷன் கார்டை அடைமானம் வைத்து குழந்தைகளைப் பராமரித்து வந்த மோர்மதி, தற்போது பிறந்த குழந்தையை ஹெஜமாராவில் உள்ள ஒரு தம்பதிக்கு ரூ. 5,000-க்கு விற்றுள்ளார்.

முன்னதாக தனது கருவைக் கலைக்குமாறு மருத்துவரை மோர்மதி அணுகியுள்ளார்.ஆனால் மருத்துவர் அதற்கு மறுப்பு தெரிவித்து மோர்மதிக்கு தேவையான மருந்துகளை இலவசமாக வழங்கி வந்துள்ளார். இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு, வறுமை காரணமாகக் குழந்தையை விற்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு செயலாளருமான ஜிதேந்திர சவுத்ரி அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தால் குழந்தையை வாங்கிய தம்பதியரிடம் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. வறுமை காரணமாக அப்பகுதியில் குழந்தைகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
- பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாரம் யெச்சூரி நிமோனியா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மாணவ பருவத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மேற்கு வங்க மாநிலத்தில் பல முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்களில் தனது ஆற்றல் மிக்க பேச்சால் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தவர் சீதாராம் யெச்சூரி. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ஐதராபாத்தில் வளர்ந்த யெச்சூரி ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்றார். அதன்பிறகு தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கக் கோரிய போராட்டம் காரணமாக 1969 ஆம் ஆண்டு யெச்சூரி டெல்லிக்கு சென்றார். அங்கு பிரெசிடன்ட் எஸ்டேட் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்ற சீதாராம் யெச்சூரி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தினார்.
அதன்பிறகு டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதார பாடப்பிரிவில் பி.ஏ. பட்டமும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். பிறகு இதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். அதன்பிறகு எமர்ஜன்சி காலக்கட்டத்தில் கைதாகி சிறை சென்றார்.
1974 ஆம் ஆண்டு எஸ்.எஃப்.ஐ. மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட யெச்சூரி, அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். எமர்ஜன்சியை தொடர்ந்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தலைவராக யெச்சூரி மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் ஈடுபட்டு வந்த யெச்சூரி, 1984 ஆம் ஆண்டு சி.பி.ஐ. எம் மத்திய குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

1986 ஆம் ஆண்டு எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் இருந்து விலகிய சீதாராம் யெச்சூரி 14 ஆவது காங்கிரஸ் தலைமை குழுவில் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 1992 ஆம் ஆண்டு சி.பி.ஐ.எம். கட்சியின் 5-ஆவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீதாராம் யெச்சூரி மீண்டும் சி.பி.ஐ.எம். கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யெச்சூரி மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதில் பெயர்பெற்றவராக யெச்சூரி திகழந்தார். மேலும், ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதில் யெச்சூரி கைத்தேர்ந்தவர் ஆவார்.
இந்திய அரசியலில் தனது கொள்கை, மக்கள் பிரச்சினை குறித்து பேச தயங்காதவராக சீதாராம் யெச்சூரி அறியப்படுகிறார். மக்கள் பிரச்சினைகள் மற்றும் ஆளும் கட்சி ஆட்சியில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு அவற்றை சரிசெய்ய தொடர்ந்து குரல் கொடுப்பவர்களில் யெச்சூரி முதன்மையானவர்.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
- 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.
- உடல்நலக் குறைவு காரணமாக சீதாரம் யெச்சூரி காலமாணார்.
- கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது."
"தோழர் சீதாராம் யெச்சூரி அச்சமற்ற தலைவராக இருந்தவர், சிறு வயதிலிருந்தே, மாணவர் தலைவராக தைரியமாக அவசரநிலைக்கு எதிராக நின்றதால், நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறப்பான வாழ்க்கையை வடிவமைத்தது."
"அவருடன் நான் கொண்டிருந்த ஆழமான உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரெட் சல்யூட், காம்ரேட்!," என குறிப்பிட்டுள்ளார்.
- உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
- சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"மூத்த சிபிஐ-எம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய அரசியலில் அவர் ஆற்றிய தாக்கம் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். ஓம் சாந்தி!" - ஆளுநர் ரவி.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிகிச்சை பலன் இன்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
- முற்போக்கு அரசியலில் சீதாராம் யெச்சூரி ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சீராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
"சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
- உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
- சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளை மறுநாள் (செப்.14) காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வைக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

- சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.
- கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில், மறைந்த சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பிறகு அவர் உரையாற்றியதாவது:-
சீதாராம் யெச்சூரியின் மறைவு என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டே இருந்தேன்.
சிபிஎம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும் சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர்.
கருணாநிதி ஆட்சியின்போது கோவையில் நடந்த மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேசினார். கருணாநிதி இல்லாமல் தமிழ்நாடு இல்லை என பேசியவர் சீதாராம் யெச்சரூரி.
கருணாநிதி எழுதிய தாய் காவியம் குறித்து புகழ்ந்து பேசியவர். சீதாராம் யெச்சூரி பேச்சுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்தார். நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி.
கூட்டணி பேச்சுவார்த்தையில் பிரச்சினை ஏற்பட்டாலும் சீதாராம் யெச்சூரி முடித்து தருவார்.
சீதாராம் யெச்சூரி சிரிப்பை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.
தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது இடதுசாரி பங்கில் யெச்சூரியே முக்கிய காரணம்.
இடது சாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தவர். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க முக்கிய காரணமானவர். தற்போது, பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி உருவாகவும் முக்கியமாக இருந்தவர். இளைய சமூதாயத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியவர்.
சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.