search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை அட்டகாசம்"

    • விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி:

    எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்க நாடு ஊராட்சி, சன்னியாசி முனியப்பன் கோவில் அருகிலுள்ள ஒடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் பழனிசாமி, விவசாயியான இவரது விவசாயத் தோட்டம் அங்குள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இவரது விவசாயத் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு கடந்த மாதம் 7-ந் தேதி அன்று திடீரென காணாமல் போனது.

    இதனை அடுத்து பழனிசாமி தனது தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டினை தேடி சென்ற போது சற்று தூரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆடு இறந்து கிடப்பதும், அதன் உடலில் பெரும் பகுதியை மர்ம விலங்கு தின்று இருப்பதும் கண்டு பழனிசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கிருந்த மர்ம விலங்கின் காலடித் தடங்களை பதிவு செய்தனர். ஆட்டினை வேட்டையாடிய மர்ம விலங்கின் காலடித்தடம் சிறுத்தை காலடி தடத்தை போல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த வனத்துறையினர், அது குறித்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட உதவி வன அலுவலர் செல்வகுமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பக்கநாடு கிராமம், கோம்பைகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதையன் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்றது. பசு மாட்டின் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை கடித்துத் தின்ற நிலையில், காலையில் அப்பகுதிக்கு வந்த விவசாய மாதையன் தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு இறந்து கிடப்பதையும் அதன் உடல் பகுதியை மர்ம விலங்கு கடித்து தின்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் காலடி தடங்களை பதிவு செய்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பக்க நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க செல்ல வேண்டாம் எனவும், மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுவர்களை தனியாக வேளியே விட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்த ஒன்றிய குழு தலைவர் குப்பம்மாள் மாதேஷ் ஆறுதல் கூறினார். எடப்பாடி அருகே நள்ளிரவு நேரத்தில் மீண்டும் விவசாய தோட்டத்தில் கட்டியிருந்து பசுமாட்டினை சிறுத்தை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது.
    • சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கொரவயல் பகுதியில் சின்னம்மா என்பவரது காபி தோட்டத்துக்குள் வீடு ஒன்று உள்ளது.

    விவசாய நிலத்தில் உள்ள இந்த வீட்டை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று மதியம் அங்கு பணியாற்றும் இடும்பன் என்ற தொழிலாளி வீட்டுக்குள் சென்றார். வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது. அதனை கண்டு இடும்பன் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் சிறுத்தை வெளியே வராமல் இருக்க கதவை பூட்டி விட்டு வெளியே ஓடி வந்தார். சக தொழிலாளர்களிடமும் தகவலை தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினார்.

    இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு உடைகள் அணிந்த வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் இருந்த சிறுத்தை வெளியே வர முடியாததால் ஆத்திரத்தில் உள்ளே கிடந்த இருக்கை உள்ளிட்ட பொருட்களை கடித்து குதறி நாசம் செய்தது.

    தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இரவு 7.45 மணிக்கு சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனால் சிறுத்தை மயக்கம் அடை ந்தது. உடனடியாக கதவை திறந்து கொண்டு வனத்துறையினர் வீட்டுக்குள் சென்றனர்.

    சிறுத்தையை மீட்டு அவர்கள் வனத்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். நள்ளிரவில் சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு போய் சிறுத்தையை வனத்துறையினர் விடுவித்தனர்.

    வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியே சென்ற சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வனத்துறையினர் போராடி அந்த சிறுத்தையை பிடித்துள்ளனர். அதன்பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ×