என் மலர்
நீங்கள் தேடியது "அம்பத்தூர்"
- பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
- மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
அம்பத்தூர்:
அண்ணாநகர் மேற்கு, ஜீவன் பீமா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாண்டி. இவரது மனைவி பிரதீபா. இவர்களது இரண்டரை வயது மகள் யாஸ்மிகா. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலையில் மின்தடை ஏற்பட்ட போது வீட்டின் முன்பு சிறுமி யாஸ்மிகா விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு சுற்றிய தெரு நாய் ஒன்று திடீரென யாஸ்மிகா மீது பாய்ந்து கடித்து குதறியது. அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி யடித்து சிறுமியை மீட்டனர். நாய் கடித்து குதறியதில் யாஸ்மிகாவின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட யாஸ்மிகாவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி யாஸ்மிகா வசித்த பகுதியில் சுற்றிய நாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தி.மு.க. வார்டு கவுன்சிலர் எம்.இ.சேகர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர்.
அவர்கள் பதுங்கி சுற்றிய 30-க்கும் மேற்பட்ட நாய்களை வலைவீசி பிடித்தனர். மேலும் பல தெருநாய்கள் தப்பி ஓட்டம் பிடித்தன. அந்த நாய்களையும் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சிறுமி யாஸ்மிகாவின் தந்தை தங்க பாண்டியன் கூறும்போது, எனது மகளை நாய் கடித்த போது நீண்ட நேரம் போராடி தான் குழந்தையை மீட்டோம்.
நாய்கடித்தது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்த போது அவர்கள் சிறுமியை கடித்த நாயின் புகைப்படம் இருந்தால் தான் நாயை பிடிக்க முடியும் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்தனர். பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதுபோன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்காதவாறு தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
- சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
- மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.
இந்தநிலையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், "முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் அந்த பெண் கூறி இருந்தார்.
அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர்.
- ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அம்பத்தூர்:
அம்பத்தூரில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையில் அயப்பாக்கம் ஏரிக்கரையோரமாக இன்று காலையில் டன் கணக்கில் ஆப்பிள் பழங்கள் கொட்டப்பட்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்துசென்றனர். இவ்வளவு பழத்தை வீணாக கொட்டிவிட்டு சென்றுள்ளார்களே என்று கூறி பலரும் வேதனைப்பட்டனர்.
இந்த ஆப்பிள் பழங்கள் கெட்டுப்போன ஆப்பிள்களாக இருந்தன. அதில் சில ஆப்பிள் பழங்கள் நன்றாக இருந்தன. அவைகளை பொதுமக்களில் சிலர் எடுத்துசென்றதையும் காண முடிந்தது.
அப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து இந்த பழங்களை மர்ம நபர்கள் லாரியில் எடுத்து வந்து கொட்டி சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இதைதொடர்ந்து ஆப்பிள் பழங்களை கொட்டி விட்டு சென்றவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டன் கணக்கிலான இந்த ஆப்பிள் பழங்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. கடைகளில் கிலோ ரூ. 200 முதல் 300 வரை விற்பனையாகும் ஆப்பிள் பழங்கள் சாலையோரமாக கொட்டப்பட்டு இருந்ததை பார்த்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
- சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் பகுதியில் இருந்து கோயம்பேடு நோக்கி இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. டிரைவர் பாலகிருஷ்ணன் வண்டியை ஓட்டினார். பட்டரைவாக்கம் மேம்பாலத்தில் வந்த போது எதிரே வந்த கார் திடீரென சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் சரக்குவேனின் பின்பகுதி தனியாக உடைந்து சுமார் 50 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள கொரட்டூர் ஏரிக்குள் விழுந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த நபருக்கும், சரக்கு வேன் டிரைவர் பாலகிருஷ்ணனுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு போலீசுக்கு தெரிவிக்காமல் அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதற்கடையே கொரட்டூர் ஏரிக்குள் சரக்கு வாகனத்தில் பின்பகுதி மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏரிக்குள் விழுந்து கிடந்த வாகனத்தின் பாகத்தை மீட்டனர்.
கார் மோதிய விபத்தில் சரக்குவேனின் பின்பகுதி மட்டும் கழன்று ஏரிக்குள் விழுந்ததால் முன்பகுதியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். காரின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிவந்தவர் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- குடிநீர் மிகவும் மாசடைந்து கருப்பு நிறமாக மாறி உள்ளது.
- புழல் ஏரி நீர் முழுவதுமே சாக்கடை நீராக மாறிவிடும் அபாயம் உள்ளது.
அம்பத்தூர்:
சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி தற்போது முழு அளவு நிரம்பியுள்ளது. இங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வாரியம் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலமும், லாரி மூலமும் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் புழல் ஏரியின் கரை பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம், தென்றல் நகர், மேற்கு பாலாஜி நகர், சக்தி நகர், சரஸ்வதி நகர், கிழக்கு பாலாஜி நகர், பானு நகர் 1 முதல் 25 அவென்யூ வரை உள்ள குடியிருப்பு பகுதிகள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் மழை நீர் கால்வாய் மூலம் கழிவுநீர் இணைப்பு இணைக்கப்பட்டு இந்த ஏரியில் திறந்து விடப்படுகின்றன.
இதனால் குடிநீர் மிகவும் மாசடைந்து கருப்பு நிறமாக மாறி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் அப்பகுதியே கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த மழை நீர் வடிகாலில் சுற்றியுள்ள 2000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீரை விடுகின்றனர். இந்த கழிவு நீரானது நேரடியாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்த புழல் ஏரியில் கலக்கிறது.
இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் ஒருவித விஷப்பூச்சி அனைத்து வீடுகளிலும் லட்சக்கணக்கில் படை எடுக்கிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்டால் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றும் வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இங்கு 2 பெரிய மின்விளக்குகளை வைத்து பூச்சிகள் அதில் உட்காரும் வகையில் ஏற்பாடு செய்து சென்று விட்டனர்.
இதே நிலை தொடர்ந்தால் புழல் ஏரி நீர் முழுவதுமே சாக்கடை நீராக மாறிவிடும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல் 2 ஆயிரம் வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால் நீரின் நிறம் கருப்பாக உள்ளது. புழல் ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், செங்குன்றம், முருகாம்பேடு, ஓரகடம் என எங்கெல்லாம் கரைப்பகுதி வருகிறதோ அப்பகுதி முழுவதும் கழிவுநீர் ஏரிகளில் வெளியேற்றப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
- 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
அம்பத்தூர்:
சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி சி.டி.எச்.சாலை (சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை) மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையான இந்த சாலையில் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை சாலை மிக குறுகலாக இருப்பதால் இதனை 200 அடி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து சி.டி.எச்.சாலை 200 அடி அகலத்தில் விரிவுபடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நில எடுப்பு பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறியதாவது:-
தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சி.டி.எச். சாலை கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடி சாலையாக குறைக்கப்பட்டு 6 வழிச்சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இறுதியாக இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கொரட்டூர் சந்திப்பில் இருந்து மண்ணூர்பேட்டை வரை ஒரு உயர் மட்ட மேம்பாலமும் , அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் மட்ட மேம்பாலமும் வர உள்ளது.
விரைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 100 அடி அகலத்தில் 6 வழிச்சாலையாக 3 உயர் மட்ட மேம்பாலங்களுடன் மாற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்த பணிகள் முடிவடையும் போது தொழிற்பேட்டை நிறைந்த இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றியும், விபத்துக்கள் ஏற்படாத வகையிலும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
- மேயர் பிரியா, நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அம்பத்தூர் வெங்கடாபுரம், பள்ளிக்கூட சாலையில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.18.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.21.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தினையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், நிலை குழு தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, அம்பத்தூர் மண்டலக் குழுத் தலைவர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், கமல், ராஜகோபால், நாகவள்ளி, பொற்கொடி, உமா, டாக்டர் பூர்ணிமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.