search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்துறை செயலாளர்"

    • மத்திய உள்துறை செயலாளராக இருந்து வருபவர் அஜய் பல்லா.
    • இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தற்போது கோவிந்த் மோகன் கலாசாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    அஜய் குமாரின் பதவிக்காலம் கடந்த ஆண்டே மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

    2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.

    ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×