என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி சட்டசபை தேர்தல்"

    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது.
    • டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. டெல்லியில் நடைபெற்ற 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியைத் தழுவியது.

    இதற்கிடையே, தலைநகர் தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி கட்சித் தலைவர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டோம். வரும் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடாது. டெல்லி மக்களுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை தனியாகச் சந்திப்போம் என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே.
    • வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொண்டர்களிடம் பேசியதாவது:

    பூத் அளவில் கட்சியை வலுப்படுத்தவும், மாநிலத்தில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவும் தொகுதி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்த கூட்டங்கள் கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. வரவிருக்கும் டில்லி சட்டசபை தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்படும்.

    சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரசின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு தெளிவான அறிகுறி.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தது மக்களவை தேர்தலுக்கு மட்டுமே. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்.

    ஆட்சியில் உள்ள அரசு தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சாக்குப்போக்கு கூறிவருகிறது என தெரிவித்தார்.

    • 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.
    • அரியானாவில் கூட்டணி அமைக்க "இந்தியா' கூட்டணி கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது.

    புதுடெல்லி:

    ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா கக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டெல்லி சட்ட தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும். அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரசையும், திமிர் பிடித்த பா.ஜனதா வையும் நாங்கள் தனித்து எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவர்கள். அண்மையில் நடைபெற்ற அரியானா சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    அதன், அதீத நம்பிக்கையின் காரணமாக இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பூஜ்ஜிய இடங்களே இருந்தன. இருப்பினும், 2024 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் 3 இடங்களை பகிர்ந்து கொண்டது.

    அரியானாவில் கூட்டணி அமைக்க "இந்தியா' கூட்டணி கட்சிகள் எடுத்த அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் முறியடித்தது. கூட்டாளிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது அவசியம் என்று காங்கிரஸ் நினைக்கவில்லை. ஆம் ஆத்மியும், காங்கிரசும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கத் தவறிவிட்டன. ஆம் ஆத்மி அரியானாவில் போட்டி யிட்ட அனைத்து இடங் களிலும் தோல்வியடைந் தாலும், காங்கிரஸ் பெரும் பான்மையை விட மிகக் குறைந்துவிட்டது. இது, ஆளும் பா.ஜனதா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப் பதற்கு வழிவகுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் வரும் 2025-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

    தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

    இதில், முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சத்தர்பூர் தொகுதியில் பிரஹ்ம் சிங்தன்வார் போட்டியிடுகிறார். தொடர்ந்து, பதார்பூர் தொகுதியில் ராம் சிங் நேதாஜி, லட்சுமி நகர் தொகுதியில் பிபி தியாகி, சீலாம்பூர் தொகுதியில் சவுதிரி சுபாயிர் அகமது, சீமா புரி தொகுதியில் வீர் சிங் திங்கன், ரோஹ்டாஸ் நகர் தொகுதியில் சரிதா சிங், கோண்டா தொகுதியில் கவுரவ் சர்மா, விஷ்வாஸ் நகர் தொகுதியில் தீபக் ஷிங்லா, கரவால் நகர் தொகுதியில் மனோஜ் தியாகி, கிராரி தொகுதியில் அனில் ஜா, மாடியாலா தொகுதியில் சுமேஷ் ஷோகீன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


    • ஆம் ஆத்மி மொத்தமுள்ள 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.

    மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார்.

    மொத்தமுள்ள 70 தொகுகளில் 31 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

    டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முன்னாள் எம்பியான சந்தீப் தீக்ஷித் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடப் போவதாக கெஜ்ரிவால் கூறினார்.
    • முன்னாள் முதல் மந்திரி மகன்களை எதிர்த்து போட்டியிட உள்ளேன் என்றார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ.க ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதற்காக அக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

    அதன்படி, புதுடெல்லி தொகுதியில் டெல்லியில் 3 முறை காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரி பதவி வகித்த ஷீலா தீட்ஷித் மகன் சந்தீப் தீட்ஷித்தை அக்கட்சி களமிறக்கியது.

    அதேபோல், முன்னாள் முதல் மந்திரி ஷாகிப் சிங் வர்மா மகன் பர்வேஷ் வர்மாவை இத்தொகுதியில் பா.ஜ.க. களமிறக்கியது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி மாறுவார் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட உள்ளேன். இத்தொகுதியில் முதல் மந்திரி மகன்களுக்கும், சாமானிய மனிதருக்கும் இடையில் போட்டியிருக்கும். முதல் மந்திரி அதிஷி கல்காஜ் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
    • நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு.

    டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க களமிறங்கி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.

    இதைஅடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

    இதில், நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.


     



    • ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.
    • நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு.

    டெல்லியில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க களமிறங்கி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி கட்சி 11 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருந்தது.

    இதைஅடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த யு.பி.எஸ்.சி. ஆசிரியர் அவத் ஓஜாவிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய 3வது வேட்பாளர் பட்டியலை இன்று ஆம் ஆத்மி வெளியிட்டது

    இதில், நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், 4வது மற்றும் கடைசி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வேட்பாளர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரவ் பரத்வாஜ் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.,வில் இருந்து விலகி இன்று மனைவியுடன் ஆம்ஆத்மியில் சேர்ந்த ரமேஷ் பெல்வான், கஸ்தூர்பா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    • மொத்தமுள்ள 70 தொகுகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
    • டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என தெரிவித்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.

    மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது அதற்கான பணிகளை தொடங்கிவிட்டார். மொத்தமுள்ள 70 தொகுகளுக்கும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

    டெல்லி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் தலா 2,100 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர்டெல்லியில் முதல் மந்திரி அதிஷி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாகப் பதவியேற்ற, பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சாமானிய மக்களுக்காக உழைத்தவர்.

    டெல்லி வரலாற்றில் ஏழை மக்களுக்காக பாடுபட்ட ஒரே தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே.

    24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் ஒரே நகரம் டெல்லிதான்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் அரசுப் பள்ளிகளில் எந்த வசதியும் இல்லை. தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி அரசு அமைய மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறோம் என் தெரிவித்தார்.

    • டெல்லியில் கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்​தலில் ௬௨ இடங்​களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சி​யை தக்க​வைத்​தது.
    • மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது. அடுத்து, 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.

    இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை தவிர்த்து, டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிமுகம் செய்தது.

    அப்போது பேசிய கெஜ்ரிவால், தற்போது ராஜேந்திர நகர் பகுதியில் 24 மணி நேரமும் தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் இந்தத் திட்டம் டெல்லி முழுமையும் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

    • வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது.
    • பாஜக 29 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

    டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அதிஷி தற்போது முதல்வராக உள்ளார்.

    இதையடுத்து வரும் பிப்ரவரி மாதத்துடன் ஆம் ஆத்மி ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிறது. அதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    தேர்தல் தேதி அறிவிப்பு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டதோடு, 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, கவர்ச்சிகரமான திட்டங்களையும் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலையும், பாஜக 29 பேர் கொண்டமுதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், டெல்ல சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

    • நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
    • தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.

    * வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

    * நாம் 99 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கையை கடந்த கொண்டிருக்கிறோம்.

    * பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 48 கோடியை எட்டியுள்ளது.

    * நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.

    * டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்.

    * குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.

    * வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது.

    * ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    * தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

    * 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.

    * படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது என்றார். 

    ×