search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுப்படகுகள்"

    • கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கே அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நாட்டுப்படகு ஒன்றில் மிதந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகு மற்றும் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரித்ததில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த பன்னீர்ச்செல்வம் என்பவரின் காணாமல்போன நாட்டுப்படகு என்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன நாட்டுப்படகில் ஆண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டர் முதல் 2.7 மீட்டர் வரை பேரலைகள் உயரமாக எழும்ப வாய்ப்பு இருப்ப தாலும், மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, இன்று கடற்கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் கடலின் அருகில் செல்லவோ, நடைபயிற்சி மேற்கொள்ளவோ வேண்டாம் எனவும், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என கூறிஇருந்தார்.

    அதன்படி, இன்று பெரியதாழை கடற்கரை முதல் வேம்பார் வரையிலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. திரேஸ்புரம், பெரியதாழையில் சுமார் 3,600 நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் சுமார் 20 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் இன்று வேலையில்லாமல் இருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை முதல் கூட்டப்புளி வரையிலும் கடல் அலைகள் அதிக அளவில் எழும்பியதால் அந்த பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் சென்று வர கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அந்த பகுதிகளில் மீனவர்கள் இன்று வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றனர். 

    ×