என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்"
- எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள் என்றார்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி கைதுசெய்தது. உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் நேற்று வெளியில் வந்தார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவரை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் வாழ்த்து கோஷமிட்டு வரவேற்றனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இன்று கட்சித் தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களுக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம்.
பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.
ஜார்க்கண்டில் இருந்து காவி கட்சி ஒழிக்கப்படும்.
இந்தியாவின் சமூக கட்டமைப்பை அழிப்பதில் பா.ஜ.க.வுக்கு நிபுணத்துவம் உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வினருக்கு பாடம் புகட்டினார்கள்.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்