என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே எல் ராகுல்"

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

    "போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

    இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.


    • கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
    • உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். இவரும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய சர்ச்சையில் சிக்கினர்.

    காபி வித் கரன் ஜோகர் எனும் டி.வி. நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். மேலும், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினர்.

    பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி தடை விதித்தது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து கே.எல்.ராகுல் சமீபத்தில் மனம் திறந்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது:

    நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.

    அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது.

    அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதனால் நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

    உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை.

    அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை. பள்ளியிலும் எனது பெற்றோர் வந்து பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை என தெரிவித்தார்.

    • கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் விளாசினர்.
    • கேஎல் ராகுல் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. டிராவிஸ் ஹெட் 152 ரன்னும், ஸ்டீவ் சுமித் 101 ரன்னும் , அலெக்ஸ் கேரி 70 ரன்னும் எடுத்தனர். பும்ரா 6 விக்கெட்டும், முக மது சிராஜ் 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன் னிங்சை ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர் களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன் எடுத்து இருந்தது.

    ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1), விராட் கோலி (3), ரிஷப் பண்ட் (9) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். கே.எல். ராகுல் 33 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    முதல் நாள் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. நேற்றைய 3-வது நாள் போட்டியும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 394 ரன்கள் பின்தங்கி, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

    ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரோகித் சர்மா பெவிலியன் திரும்பினார். அவர் 10 ரன்னில் கம்மின்ஸ் பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 74 ஆக இருந்தது. அடுத்து ஜடேஜா களம் வந்தார்.

    மறுமுனையில் இருந்த கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். அவர் 85 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை தொட்டார். 56-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 17-வது அரை சதமாகும். அவருக்கு ஜடேஜா உறுதுணையாக இருந்தார்.

    சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 84 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 139 பந்துகளில் 8 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை தொட்டார். நாதன் லயன் அவரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    அப்போது ஸ்கோர் 141-ஆக இருந்தது. இந்த ஜோடி 67 ரன் எடுத்தது. 7-வது விக்கெட்டும் ஜடேஜாவுடன், நிதிஷ்குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார்.

    மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து இருந்தது. ஜடேஜா 41 ரன்னும், நிதிஷ் குமார் ரெட்டி 7 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மதிய உணவு இடை வேளைக்கு பிறகு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தினார். இந்த டெஸ்டில் இந்தியா பாலோ ஆன் நிலையில் உள்ளது. பாலோ ஆனை தவிர்க்க 246 ரன் எடுக்க வேண்டும். 

    ×