search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே எல் ராகுல்"

    • கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.
    • உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல். இவரும், ஹர்திக் பாண்ட்யாவும் கடந்த 2019-ம் ஆண்டு பெரிய சர்ச்சையில் சிக்கினர்.

    காபி வித் கரன் ஜோகர் எனும் டி.வி. நிகழ்ச்சியில் பாண்ட்யா மற்றும் ராகுல் ஆகியோர் ஜோடியாக பங்கேற்றனர். அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தனர். அதனால் ரசிகர்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். மேலும், ஹர்பஜன், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களும் கடுமையாக சாடினர்.

    பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் ஆஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு பி.சி.சி.ஐ. அதிரடி தடை விதித்தது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து கே.எல்.ராகுல் சமீபத்தில் மனம் திறந்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது:

    நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடிப்பதில் சிறந்தவனாக இருந்தேன்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியால் நான் பாதிக்கப்பட்டேன்.

    அந்தப் பேட்டி முற்றிலும் வித்தியாசமான உலகமாக இருந்தது. அது என்னை மாற்றியது.

    அந்தப் பேட்டி என்னிடம் பெரிய வடுவை ஏற்படுத்தியது. அதனால் நான் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

    உண்மையில் நான் பள்ளியில் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. தண்டனை பெற்றதில்லை.

    அந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதுகூட எனக்கு தெரியவில்லை. பள்ளியிலும் எனது பெற்றோர் வந்து பதில் சொல்லும் அளவுக்கு நான் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதில்லை என தெரிவித்தார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

    "போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

    இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.


    ×