என் மலர்
நீங்கள் தேடியது "நிர்வாகி கொலை"
- நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார்.
- கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பட்டுக்கோட்டை:
மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மாநகர பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.
இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் பிரச்சனை ஏற்படவே சரண்யா 2-வது கணவரிடம் இருந்து பிரிந்தார்.
பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 3-வதாக சரண்யா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.
வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று மதியம் சரணடைந்தனர்.
கொலையுண்ட சரண்யாவின் கணவர் பாலன் மகன் கபிலன் ஆவார். இவருக்கு சொத்துக்களை பிரித்து தர சரண்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விரோதத்தில் சரண்யா கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
- சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது.
சென்னை:
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது.
* தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
* கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
* சிறந்த தொண்டரான சண்முகத்தை இழந்திருப்பது மிகுந்த மனவேதனை தருகிறது.
* சண்முகத்தை இழந்துவாடும் உறவினர்கள், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகி கொலை தொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாட்டரி சதீஷ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சண்முகம் கொலை தொடர்பாக 55வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் லாட்டரி சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
- ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல் நாடு மாவட்டம், விணு கொண்டாவை சேர்ந்தவர் ஷேக் ரஷீத் (வயது 25). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இளைஞரணி நிர்வாகி.
இவர் முண்டலா முரு பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
கடந்த தேர்தலுக்கு முன்பு இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி என்பவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தேர்தலின் போது ஷேக் ரஷீத், ஷேக் ஜிலானி வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த அவரது பைக்கை தீ வைத்து எரித்தார்.
இதனால் ஷேக் ரஷீத் மீது ஜிலானிக்கு கடும் ஆத்திரம் உண்டானது.
நேற்று இரவு மதுபான கடையில் வேலை முடிந்து ஷேக் ரஷீத் வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
அங்கு வந்த ஷேக் ஜிலானி தான் வைத்திருந்த கத்தியால் ரஷீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கை துண்டாகி விழுந்தது. ரஷீத் ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டும் பார்த்தனர். ஒருவரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ஜிலானி அங்கிருந்து தப்பி சென்றார்.
அருகில் இருந்தவர்கள் ஷேக் ரஷீத்தை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் ரஷீத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் ஜிலானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷேக் ரஷீத் வெட்டி கொல்லப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இது பார்ப்பவர்களை பதற வைக்கும் வகையில் உள்ளது.