search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி பேரணி"

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அணி இன்று இந்தியா வந்தடைந்தது.
    • மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அபாரமாக விளையாடியது. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது. மும்பையில் இந்திய அணிக்கு வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மரைன் டிரைவ் பகுதியில் இருபக்கமும் குவிந்து வீரர்களை வரவேற்றனர். வீரர்களுடன் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அதன்பின் வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் "ரசிகர்களின் இந்த அன்பை இழக்கப் போகிறேன். இன்று இரவு தெருக்களில் நான் பார்த்ததை (ரசிகர்களின் வரவேற்பு) ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    விராட் கோலி பேசும்போது "2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது சீனியில் வீரர்கள் அழுத எமோசன் உடன் நான் தொடர்பு கொள்ள முடியவில்ல. ஆனால் தற்போது அதை செய்கிறேன்" என்றார்.

    ×