என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுதிஅரேபியா"

    • கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார்.
    • இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மனைவி ஜோகண்ணால் தேவ கிருபை. தனது 2 மகன்களுடன் கண்ணீர் மல்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    கடந்த 2021-ம் ஆண்டு எனது கணவர் தமிழரசன் சவுதி அரேபியா நாட்டிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு வாகன விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த எனது கணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததாக அங்கிருந்து தெரிவித்தனர்.

    பின்னர் எனது கணவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் எனது கணவரின் உடல் தொடர்பாக இதுநாள் வரை எதும் தெரியவில்லை. இது குறித்து கேட்டால் யாரும் பதில் கூறவில்லை. ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி, எனது கணவர் தமிழரசனின் உடலை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது.
    • சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    சூரிச்:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2026-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைமையகத்தில் நேற்று 'பிபா' நிர்வாக கமிட்டியினர் கியானி இன்பான்டினோ தலைமையில் ஆலோசித்தனர். இதில் 'பிபா'வின் 211 நாட்டு உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.

    இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பை தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், 2030-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3 ஆட்டங்கள் மட்டும் அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான உருகுவேயில் தான் முதலாவது உலகக்கோப்பை போட்டி 1930-ம் ஆண்டு நடந்தது நினைவு கூரத்தக்கது.

    2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது. பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்த நாட்டுக்கு 2034-ம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ×