என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிஏ தேர்வு"

    • இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் நடத்தப்படும்.

    மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.

    அதன்படி சி.ஏ., தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இறுதித்தேர்வு இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த சி.ஏ., தேர்வு இனி ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படும்.

    ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்படும் இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட் என்ற தேர்வு இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்கள் என ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில் 26-வது கவுன்சில் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய தணிக்கை துறை நிறுவனம் அறிவித்துள்ளது.

    • குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு.
    • சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என அமைச்சர் பதிவு.

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களில் சிலவற்றை பார்க்கும் போது நமக்கு கண்ணீரே வந்துவிடும். அந்தவகையில் தான் இப்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

    47 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டோம்பிவிலி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. டோம்பிரீலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நீரா தோம்பரே. இவர் அந்த பகுதியில் 25 ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மகன் யோகேசை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். தாயின் கடின உழைப்பை உணர்ந்து நன்றாக படித்த யோகேஷ் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

    தேர்வு முடிவு வந்ததும் மகிழ்ச்சி அடைந்த யோகேஷ் நேராக தனது தாயின் காய்கறி கடைக்கு சென்று தனது சாதனையை கூறினார். மேலும் தனது தாய்க்கு அழகான சேலையையும் வழங்கினார். அப்போது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்த நீரா தோம்பரே மகனை கட்டி அணைத்து வாழ்த்தினார். அப்போது அவரது கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வந்தது. இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானது.

    இது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் ரவீந்திர சவாண் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இத்துடன், "மனவுறுதி மற்றும் கடின உழைப்பின் வலிமையால், யோகேஷ் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது தாயின் ஆனந்தக் கண்ணீர் கோடிக்கணக்கில் மதிப்புடையது. சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது" என பதிவிட்டுள்ளார்.

    குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான சி.ஏ. தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு முடிவுகளை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் கடந்த 11-ந்தேதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் லட்சியமாக இருந்து வருகிறது.
    • பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

    நாட்டில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவு மற்றும் தொழில்முறை சார்ந்து போட்டி தேர்வு நடத்தும் விதம் அதன் பாடத்திட்டம் என வேறுப்படும். எதுவாயினும், போட்டித் தேர்வுகளில் மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுவது பட்டய கணக்காளர் (சிஏ) தேர்வு ஆகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது பலரின் வாழ்நாள் கனவு, லட்சியமாக இருந்து வருகிறது.

    அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருவோரம் காய்கறி விற்கும் பெண்ணின் மகன் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்று தாயை சந்தித்து இருவரும் பரஸ்பரம் ஆனந்த கண்ணீர் வடித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.

    இந்த வரிசையில், டெல்லியை சேர்ந்த அமிதா பிரஜாபதி பட்டய கணக்காளர் தேர்வில், தான் தேர்ச்சி பெற்ற சாதனை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் கடந்த பத்து ஆண்டுகளாக பட்டய கணக்காளர் தேர்வில் போட்டியிட்டு, இப்போது தான் தேர்ச்சி பெற்றதாக பிரஜாபதி தெரிவிதுள்ளார்.

    மேலும், தனது குடும்பம் குப்பம் ஒன்றில் வாழ்வதாகவும் தந்தை தேநீர் வியாபாரி என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெண் பிள்ளையை பட்டய கணக்காளர் தேர்வு எழுத வைக்க வேண்டாம். எப்படியும் அவள் வேறொரு வீட்டிற்கு சென்றிடுவாள். அவளுக்கு செலவிடுவதற்கு பதில், அந்த தொகையை கொண்டு வேறு எதையாவது செய்யுங்கள் என்று பிரஜாபதி தந்தைக்கு பலர் அறிவுரை கூறியுள்ளனர்.

    எனினும், அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பிரஜாபதியை படிக்க வைத்துள்ளனர். அதன்படி பத்து ஆண்டுகள் பெரும் கனவோடு படிப்பில் கவனம் செலுத்திய பிரஜாபதி இந்த முறை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பிரஜாபதி தனது தந்தையை கட்டித்தழுவிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


    • பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம்.

    ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கனிமொழி 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

    தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ.ன் (ICIA) முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வு தேதியை மாற்றியமைக்க ஐ.சி.ஐ.ஏ.வை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாசார பன்முகத்தன்மையை குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் நாளில் சி.ஏ. தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • தமிழகத்தில் ஜனவரி 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை பொங்கல் அரசு விடுமுறை தினமாகும்.

    புதுடெல்லி:

    ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் பொங்கல் திருநாள்களில் நடைபெற இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பொங்கல் திருநாள்களில் நடைபெற இருந்த சிஏ தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஜன.14-ந்தேதி நடைபெற இருந்த பட்டயக்கணக்காளர் தேர்வு ஜன.16-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) தெரிவித்துள்ளது.

    ×