search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜா கேத்கர்"

    • பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
    • இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்தார்

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஐஏஎஸ் பறிச்சி பெண் கலெக்டராக இருந்த பூஜா கெத்கர் காரில் சைரன் பொருத்தியது, கூடுதல் கலெக்டர் அறையை பயன்படுத்தியது என தனது அதிகாரத்துக்கு மீறி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் தான் மாற்றுத்திறனாளி என போலியான சான்றிதழை சமர்ப்பித்தும் சாதிவாரி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காக குடும்ப வருமானத்தை குறைத்தும் காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு ஐஏஎஸ் ஆகியுள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரை வேறு இடத்துக்கு மாநில அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மத்திய அரசு கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டியை அமைத்தது.

    இதற்கிடையே பூஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி நீதிமன்றத்தில் பூஜா முன்ஜாமீன் கேட்டும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் யுபிஎஸ்சி முன் ஆஜராக மறுத்தத்ததாலும் அவர் மீது 30 புகார்கள் வரை  இருப்பதாலும் பூஜாவின் யுபிஎஸ்சி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டு வருங்காலத்தில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து டெல்லி உய்ரநீதிமன்றத்தில் பூஜா பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் யுபிஎஸ்சியால் உத்ராவிடப்பட்ட தகுதிநீக்கம் ஒரு மாதம் கழித்து தற்போது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பூஜா கெத்கரை ஐஏஎஸ் சேவையில் இருந்து நீக்கம் செய்து விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    • தன்னை கைது செய்யாமல் இருக்க இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி பூஜா மனுதாக்கல் செய்தார்.
    • என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.

    புதுடெல்லி:

    புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர், பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஓபிசி மற்றும் உடல் ஊனம் வசதி பெற்றது என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் தேர்வு எழுத தடைவிதித்தது.

    இதற்கிடையே இந்த புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிரான யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் பதில் தாக்கல் செய்தார். அந்த பதிலில், என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.

    இதுதொடர்பாக சி.எஸ்.இ. 2022 விதிகளின் விதி 19ன்படி 1954-ம் ஆண்டு அகில இந்திய சேவைகள் சட்டம் மற்றும் தகுதிகாண் விதிகளின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

    • ஓபிசி சான்றிதழ் முறைகேடு, உடல் ஊனம் குறைபாடு உள்ளவர் சான்றிதழ் என புகார் கூறப்பட்டது.
    • விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பிய நிலையில் சரியாக விளக்கம் அளிக்காததால் ரத்து நடவடிக்கை.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்தது. அத்துடன் போலி சான்றிதழ் வழங்கி ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission- UPSC) விசாரணை நடத்தி வந்தது. இதற்கிடையே மகாராஷ்டிரா அரசு பயிற்சி பெறுவதற்கான அளித்த அனுமதியை ரத்து செய்தது.

    இந்த நிலையில் பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை யுபிஎஸ்சி ரத்து செய்துள்ளது. மேலும் யுபிஎஸ்சி நடத்தும் எந்த தேர்விலும் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு விதிமுறை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    போலி அடையாள சான்றிதழ் கொடுக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி யுபிஎஸ்சி பூஜா கேத்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஜூலை 25-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால, பூஜா ஆகஸ்ட் 4-ந்தேதி வரை அவகாசம் கேட்டிருந்தார் யுபிஎஸ்சி ஜூலை 30-ந்தேதி வரை காலஅவகாசம் கொடுத்தது. இதற்கு மேல் காலஅவகாசம் கொடுக்கப்படமாட்டாது என்பதை தெளிவாக தெரிவித்திருந்தது.

    நோட்டீஸ்க்கு பதில் அளிக்காததால் யுபிஎஸ்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பூஜா கேத்கர், தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டார். விசாரணை மேற்கொண்டதில் தேர்வுக்கான விதிமுறையை மீறியது தெளிவாக தெரியவந்தது என யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. பூஜா தனது பெயரை மாற்றியது மட்டுமல்ல பெற்றோரின் பெயரையும் மாற்றியது தெரியவந்துள்ளது.

    பூஜா பயிற்சி காலத்தில் கார், ஸ்டாஃப், அலுவலகம் போன்ற சலுகைகள் கேட்பதாக புனே கலெக்டர் சுஹாஸ் திவாஸ் மகாராஷ்டிர மாநில தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இரண்டு வருட பயிற்சி காலத்தில் இதுபோன்று சலுகைகள் கேட்க அவருக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து பூஜா வாஷிம்-க்கு மாற்றம் செய்யப்பட்டடார். இதில் இருந்துதான் பூஜா ஐஏஎஸ் தேர்வுக்காக செய்த மோசடிகள் வெளியில் தெரிய ஆரம்பித்தது.

    • பூஜா கேத்கர் மீது புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேத்கர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றுள்ளார்.

    பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்து மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. அவரது தந்தையின் சொத்து மதிப்பு, அவரது தாய் துப்பாக்கியால் மிரட்டினது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்ததால், இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில், அவர் செய்தது தவறு என கண்டறியப்பட்டால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்த மகாராஷ்டிர அரசு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    ×