search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவைத் தூதரகம்"

    • திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
    • 7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி:

    பெரம்பலூர், மதுரை, கடலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த ஆர்.வினேஷ், ஆர்.திபாக்கரன், கே.ரிஸ்வந்த், கே.திருமாவளவன், டி.ச ரவணன், கே.வெங்கடேஷ், அ.அசேன் ஆகிய 7 வாலிபர்கள் தனியார் நிறுவனம் மூலம் குவைத்துக்கு வேலைக்கு சென்றனர்.

    இதற்காக வாணியம்பாடியை சேர்ந்த சபீர்கான் என்ற ஏஜெண்டிடம் ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம், 2 லட்சம் என கொடுத்து கடந்த ஜூலை மாதம் குவைத்துக்கு சென்ற அவர்களுக்கு டிரைவர் வேலை கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. முதலில் 8 மணி நேரம் வேலை என சொல்லியதில் 18 மணி நேரம் வேலை கொடுக்கப்பட்டது

    இதில் திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய வினேஷ், சரவணன், வெங்கடேஷ், அசேன் ஆகிய 4 பேருக்கு மட்டுமே ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. திபாக்கரன், ரிஸ்வந்த், திருமாவளவன் ஆகிய 3 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

    இதனால் சரியான தூக்கம் இல்லாமலும், சாப்பிட வழி இல்லாமலும் தவித்த 7 பேரும் தப்பி வந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டு தங்களை தாயகம் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டனர்.

    இதனிடையே 7 தமிழர்கள் நிலையை அறிந்த தொழிலதிபர் ஹைதர் அலி 7 பேருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்ததோடு தனது நிறுவனத்தில் வேலையும் தருவதாக கூறினார். இந்திய தூதரகத்தில் பணிபுரியும் தென்காசி ஷாஜகான் என்பவர் எடுத்த கடும் தொடர் முயற்சியில் பாதிக்கப்பட்ட 7 தமிழர்களின் பாஸ்போர்ட்களை அவர்களது ஸ்பான்சரை தூதரகம் வரவழைத்து பெற்று கொடுத்தார்.

    7 தமிழர்கள் மீட்கப்படுவதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் பக்கபலமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிப்ரவரி மாதம் குவைத் தூதரகத்தில் பணியாளராக பணிபுரிந்துள்ளார்.
    • அப்போது தூதரக ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கணவர் குற்றச்சாட்டு.

    டெல்லியில் உள்ள சாணக்கியாபூரில் குவைத் நாட்டுக்கான தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தில் அபு பக்கர் (70) என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார். அங்கு பாராமரிப்பு பணியாளராக 20 வயது இளம் பெண் ஒருவர் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

    இந்த பெண்ணுக்கு அபு பக்கர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் அபு பக்கரை கைது செய்துள்ளனர்.

    கடந்த இரண்டு வருடங்களாக அபு பக்கர் குவைத் தூதரகத்தில் பணி புரிந்து வருவதாகவும், எனது மனைவி அங்கு வேலை பார்த்தபோது பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் பெண்ணின் கணவர் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் பிப்ரவரி மாதம் வேலை பார்த்துள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×