என் மலர்
நீங்கள் தேடியது "ஒலிம்பிக்ஸ்"
- ஒலிம்பிக் Pole Vault சாதனையே 6.10 தான் என்ற நிலையில், 6.25 மீட்டர் தாண்டி புதிய உலக சாதனையை டுப்ளண்ட்டிஸ் படைத்துள்ளார்.
- தற்போது சமூக வலைத்தளங்களில் டுப்ளண்ட்டிஸ் வைரலாவத்ற்கு அது மட்டும் காரணம் அல்ல
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது. மேலும் யூசுபின் ஸ்டைலான வெற்றி மற்றைய ஒலிம்பிக் வீரர்களுக்கும் பெரும் உந்துதலாக அமைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடத்த கோல் ஊன்றித் தாண்டுதல் [Pole Vault jump] போட்டியில் ஸ்வீடன் சார்பில் பங்கேற்ற தடகள வீரர் அர்மான்ட் டுப்ளண்ட்டிஸ் [Duplantis] தங்கம் வென்றார். ஒலிம்பிக் Pole Vault சாதனையே 6.10 தான் என்ற நிலையில், 6.25 மீட்டர் தாண்டி புதிய உலக சாதனையை டுப்ளண்ட்டிஸ் படைத்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் டுப்ளண்ட்டிஸ் வைரலாவத்ற்கு அது மட்டும் காரணம் அல்ல. மகிழ்ச்சியில் டுப்ளண்ட்டிஸ் இட்ட வெற்றி குறிதான் அனைவரையும் தற்போது கவர்ந்துள்ளது.
அதாவது, யூசுப் டிகேக் துப்பாக்கி சுடுதலில் நின்ற சிக்னேச்சர் பொசிஷனில் நின்ற டுப்ளண்ட்டிஸ் தனது கையை துப்பாக்கி போல் நீட்டி யூசுப்பை பிரதி செய்தார். இது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இதற்கு யூசுப் , புதிதாக தொடங்கப்பட்ட தனது எக்ஸ் பக்கத்தில் டுப்ளண்ட்டிஸை வாழ்த்தியுள்ளார்.
- ஒலிம்பிக்கில் கடைசி நேரத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது அமெரிக்கா.
- ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் சீனாவை கடைசி நேரத்தில் பின்னுக்கு தள்ளிய அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. இதில் 40 தங்கம், 44 வெள்ளி மற்றும் 42 வெண்கலம் அடங்கும். சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கல பதக்கங்களோடு இரண்டாவது இடம் பிடித்தது.
அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 45 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் நிறைவு செய்தது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தில் இருந்தது.

33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 32 விளையாட்டுகளில் மொத்தம் 329 தங்கப்பதக்கத்துக்கு முட்டி மோதினர்.
உலகின் கவனத்தை ஈர்த்த பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நிறைவடைந்தது. ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இசை வெள்ளத்துக்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் சாகசங்கள், வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றது.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.

அதன் பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மேடையில் தோன்றினார். அவர் மேற்கூரையில் இருந்து அந்தரத்தில் சாகசத்துடன் ஸ்டேடியத்திற்குள் என்ட்ரி கொடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரிடம் இருந்து ஒலிம்பிக் கொடியை பெற்று அவர் மோட்டார்சைக்கிளில் சென்றார்.
'மிஷன் இம்பாசிபிள்' படம் போல் அவர் தன்னுடைய செயலை வெளிப்படுத்தினார். சில நிமிடங்கள் தோன்றிய டாம் குரூஸ் தன்னுடைய அபாரமான சாகசத்தால் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய நிறைவு விழா 3.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. 34-வது ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் 2028 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
117 வீரர், வீராங்கனைகளுடன் பாரீசுக்கு படையெடுத்த இந்தியா இந்த முறை 6 பதக்கங்களுடன் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) முடித்துக் கொண்டது. இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் 8 வீரர், வீராங்கைகள் நெருங்கி வந்து பதக்கத்தை நழுவ விட்டனர்.
இதனால் அவர்கள் 4 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்தை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிறைவடையவில்லை.
- பாரீஸ் ஒலிம்பிக்ஸில் சோ யாக்கின் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
- பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் கொடுத்த அப்பாவித்தனமான ரியாக்ஷனால் யாக்கின் வைரல் ஆனார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.
18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
- மனு பாக்கர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.
- மனு பாக்கருக்கு சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
சென்னை:
ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கல பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் சென்னை வந்தார்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற வீராங்கனை மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு துப்பாக்கி பரிசாக அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கிரீடம் அணிவித்து பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்தனர்.
அப்போது மாணவர்களுடன் மனு பாக்கர் உரையாடினார். மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் குறித்து மனு பாக்கர் பேசினார்.
"வினேஷ் எனக்கு அக்கா போன்றவர். மரியாதைக்குரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர் அவர். கடந்த காலங்களில் அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார்" என்று அவர் தெரிவித்தார்.
- தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ளார்
- ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உளளார்
சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களைக் கொண்டு தங்களின் நிறுவனத்துக்கு விளம்பரம் தேடித் கொள்ளும் போக்கு உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பிரபலங்களின் மீது மக்கள் கொண்டுள்ள அளவுகடந்த கிரேஸை நிறுவனங்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஒலிம்பிக்ஸ் வீரர்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் முகங்களாக முன்னிறுத்தப்படுகின்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்சில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர் பாரீஸ் இருந்த சமயத்திலேயே பல்வேறு பிராண்டுகள் தங்களின் விளம்பரங்களில் நடிக்கும்படி அவரை சுற்றி வலைத்தன. அந்த வகையில் இந்திய ஈட்டியெறிதல் நட்சத்திரமாக விளங்கும் நீரஜ் சோப்ராவையும் பிராண்டுகள் விட்டு வைக்கவில்லை.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் பிராண்ட் வேல்யூ இந்த வருடம் 50 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 21 பிராண்டுகளின் விளம்பர முகமாக நீரஜ் சோப்ரா உள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் 32 முதல் 34 அந்த எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. தற்போது ஒரு பிராண்டுக்கு பிரதிநிதியாக இருக்க ரூ.4 கோடி முதல் 5 கோடி வரை நீரஜ் சோப்ரா சார்ஜ் செய்ய உள்ளாராம்.
- டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
- ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன்.
தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷ், சமீபத்தில் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு டெல்லியில் அகில இந்திய செஸ் கூட்ட மைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது. அப்போது குகேஷ் கூறியதாவது:-
ஒலிம்பிக்கில் செஸ் போட்டி ஒரு பகுதியாக இருப்பதை காண நான் விரும்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும்பட்சத்தில் செஸ் சேர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
செஸ், மிகவும் பிரபலத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது என்று நான் நினைக்கிறேன். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை ஒலிம்பிக் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதனால் ஒலிம்பிக்கில் செஸ் சேர்க்கப்படுவதை உண்மையிலேயே எதிர்நோக்குகிறேன்.
ஓரிரு நாட்களில் நெதர்லாந்தில் உள்ள விஜ்க் ஆன் ஜீயில் நடைபெறும் டாடா செஸ் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.