என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோ பைடன்"

    • ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான்.
    • அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில்  ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பும் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

    ஆனால் அதிபர் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக பேச்சிலும் செயல்களிலும் தடுமாற்றத்துடன் இருந்து வருவது அவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்தானா என்ற சந்தேகத்தை அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எழச் செய்தது.

    இதற்கிடையில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க செய்துள்ளதாக பார்க்கமுடிகிறது, எனவே பைடன் அதிபராக போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று ஜநாயனாய கட்சியினர் பயந்தனர்.

    இந்த நிலையில்தான் அதிபர் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய- ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அவர் முன்மொழிந்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு ஜனநாய கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

     

    முன்னதாக ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான். அதை சுட்டிக்காட்டி டிரம்பும் பைடனை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, ஊழல் நிறைந்த தீவிரவாத ஜனநாயகவாதிகள் அவரை தூக்கியெறிந்துள்ளனர். நிலையற்ற ஜோ பைடன் அமரிக்க வரலாற்றிலேயே இது வரை இருந்த மிகவும் மோசமான அதிபர். தெற்கு எல்லை விவகாரத்தில் இருந்து , தேச பாதுகாப்பு, சர்வதேச நிலைப்பாடுவரை நமது நாட்டை அழிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர் செயல்பட்டுள்ளார்.

    பைடனை சுற்றியுள்ளவர்கள் அவரது உடல் மற்றும் மன நிலை, நியாபகமறதி குறித்து அமெரிக்காவிடம் பொய் சொல்லிவந்துள்ளனர். இப்போது [பைடன் விலகியுள்ள நிலையில்] மீதமுள்ளவர்களும் அவரைப் போன்றவரே ஆவர் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர்  சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் சிரிப்பை வைத்து நிறைய விஷயங்களை சொல்லிவிட முடியும். She is nuts. அவரை வெல்வது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில் ஜனநாயகக் காட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து பேசுகையில், சண்டையில் இருந்து பைடன் எப்போதும் பின்வாங்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலை புரிந்துகொண்டு அவர் எடுத்துள்ள இந்த முடிவு அவரது வாழ்வில் எடுத்த மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அமரிக்காவுக்கு நன்மை பயக்காது என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார் என எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். 

     

    • பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
    • 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கின்றனர்.

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் உள்ள பாஜக [ மகாயுதி] கூட்டணிக்கும் காங்கிரசின் மகா விகாஸ் அகாதி இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் இன்று பிரசாரம் மேற்கொண்ட மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு [74 வயது] அமெரிக்க அதிபர் ஜோ பைடனை [81 வயது] போன்று ஞாபக மறதி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

    அமராவதி பிரசாரத்தில் பேசிய ராகுல், அதானியின் தாராவி திட்டத்திற்காக கடந்த 2022 இல் மகாராஷ்டிர அரசையே பாஜக கவிழ்த்தது. மோடியும் அமித் ஷாவும் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தாராவி நிலத்தை, மகாராஷ்டிராவின் ஏழை மக்களின் நிலத்தை, தங்களது நண்பர் கௌதம் அதானிக்கு கொடுக்க துடிக்கிறனர்.

     

    இதனாலேயே மகாராஷ்டிர அரசு மக்களாகிய உங்களின் கைகளில் இருந்து பாஜகவால் பறிக்கப்பட்டது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மகாராஷ்டிர அரசை திருடிய பாஜக அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக கூறிவது எப்படி.

    எனது சகோதரி [பிரியங்கா காந்தி] சமீபத்தில் தான் மோடி பேசியதை கேட்டது பற்றி கூறிக்கொண்டிருந்தார். தனது சமீப கால பேச்சுக்களில் மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும் மோடி கூறி வருகிறார். எனக்கு தெரியவில்லை, ஒரு வேலை அவருக்கு ஞாபக மறதி வந்திருக்கலாம்.

    அமெரிக்க முன்னாள் அதிபருக்கு தனக்கு பின்னல் இருந்து ஒருவர் நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டுமாம், உக்ரைன் அதிபர் அமெரிக்கா வந்தபோது, அவரை ரஷிய அதிபர் புதின் என அமெரிக்க அதிபர் [ஜோ பைடன்] அறிமுகப்படுத்தினார். அவர் தனது ஞாபகத்தை இழந்துவிட்டார். அதே போல நமது பிரதமரும் ஞாபகத்தை இழந்து வருகிறார் என்று ராகுல் விமர்சித்தார்.

    • உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்குதல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
    • வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷியாவுக்கு உதவி செய்து வருவதால் ஜோ பைடன் தற்போது ஒப்புதல்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை. ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்து வருவதால் பதிலடி கொடுத்து வருகிறது.

    அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அதை பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க திட்டவட்டாக தெரிவித்திருந்தது.

    தற்போது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏவுகணைகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

    இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது உக்ரைன்-ரஷியா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளது உக்ரைன்- ரஷியா இடையிலான போரை மேலும் தூண்டும். ஜோ பைடனின் அதிபர் ஆட்சிக்காலம் ஜனவர் 20-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது வெளிப்பட்டது
    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வெற்றி பெற்று ஜோ பைடன் அதிபர் பதவி வகித்து வருகிறார். துணை அதிபராக இந்திய - ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

    இரு கட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில் தான் போட்டி. அந்த வகையில் குடியரசு கட்சி சார்பில் இந்த வருடம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராக நின்றார்.

    கடந்த 2016 முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்ற நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் அவரை எதிர்த்து நின்றார். ஆனால் இந்த முறை அவரை எதிர்க்க ஜோ பைடன் திணறினர். 82 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக ஞாபக மராத்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் பொது வெளியில் பரவலாக விமர்சனங்களை ஏற்படுத்தினார்.

    இது கடந்த ஜூன் 27 ஆம் தேதி டிரம்ப் - பைடன் இடையிலான விவாதத்தின்போது பெரிதும் வெளிப்பட்டது. சொந்த கட்சியினரே பைடன் அதிபர் வேட்பாளராக இருக்க வேண்டுமா என்று யோசித்தனர்.

     

    இதற்கு மத்தியில் பைடன் ஜூலை 21 அன்று தான் அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாகவும், தனக்கு பதிலாக துணை அதிபர் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிவதாகவும் அறிவித்தார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டிரம்ப் உடனான விவாதங்களிலும், தனது பிரச்சாரங்களிலும் அழுத்தமான பேச்சுகளால் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

     

    ஆனால் இந்த முறை டிரம்ப் மீது நடந்த கொலை முயற்சிகள் அவருக்கு பெரும் அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்தன. கடந்த ஜூலை 13 ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் டிரம்ப் பேரணியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.

    தலையை லேசாக அசைத்ததால் துப்பாக்கி குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. இதில் அவர் உயிர்தப்பிய நிலையில் அவரை சுட்ட மாத்தியூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞர் அந்த இடத்திலேயே பாதுகாப்பு அதிகரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

     

    தொடர்ந்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேடி தனக்கு சொந்தமான மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டுருந்த டிரம்ப் மீது இரண்டாவது கொலை முயற்சி நடந்தது. இதிலும் டிரம்ப் தப்பித்த நிலையில் தூரத்தில் வேலிக்கு அருகில் இருந்து குறிவைத்த 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் தப்பியோடும்போது கைது செய்யப்பட்டார்.

     

    டிரம்பின் செல்வாக்கு இந்த கொலை முயற்சிகளுக்குப் பின் அதிகரிக்கத்தொடங்கிய நிலையில் உலகப் பணக்காரருக்கும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து சுமார் 270 மில்லியன் டாலர் வரை நன்கொடை வழங்கினார்.

    வாக்குப்பதிவுக்கு சில வாரங்கள் முன்பிருந்தே நாள் ஒன்றுக்கு ஒரு அதிர்ஷ்டசாலிலுக்கு 1 மில்லியன் டாலர் என வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார்.

     

    இருந்தபோதிலும் டிரம்புக்கு கடுமையான சவாலாக கமலா ஹாரிஸ் விளங்கினார். கமலா குறித்து தனிப்பட்ட முறையிலும் கடுமையாக டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

     

    இருப்பினும் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. இறுதியாக தேர்தலும் வந்தது.

    வாக்கு எண்ணிக்கையில் கமலா ஹாரிஸின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் தகர்ந்தன. கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வகித்தார். 50 மாகாணகளில் மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்.

     

    ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். பராமரியமாக டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் ரெட் ஸ்டேட்டஸ் என்றும் கமலாவின் ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் மாகாணங்கள் புளு ஸ்டேட்டஸ் என்றும் அழைக்கப்படும்.

    இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களித்து இழுபறி ஏற்படுத்தும் மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும். வட கரோலினா, பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் ஆகியவை ஸ்விங் மாகாணங்கள்.

    அந்த இழுபறி மாகாணங்களில் அனைத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் 47வது அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் [ஜனவரி] 20 ஆம் தேதி வாக்கில் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

    பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர், உக்ரைன் - ரஷியா போர் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று கூறும் டிரம்ப் மற்ற நாடுகளுடன் வரி விதிப்பு விவகாரங்களில் தற்போதிருந்தே கறார் காட்டி வருகிறார். 

    • கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.
    • வெடிக்கும் போர்க்கப்பலை விட அதிக தாக்கத்தை உருவாக்கி உள்வரும் ஏவுகணைகளை தாட் அழிக்கிறது.

    அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்தி உள்ளது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.

    இதனை டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) கட்டமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை கடந்த அக்டோபர் மாதம் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கியது.

    இந்நிலையில் அந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தாட் அமைப்பு இடைமறிக்கும் கருவியை ஏவுவதும், அதைத் தொடர்ந்து ஒரு அமெரிக்க வீரர், பதினெட்டு ஆண்டுகளாக நான் இதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறுவதும் பதிவாகி உள்ளது.

    தாட் ஏவுகணை தடுப்பு அமைப்பு 

    தாட் அமைப்பு பூமியின் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவற்றின் முனைய கட்டத்தில் இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

    தாக்குதல்களை தடுக்க தாட், இயக்க ஆற்றலை நம்பியுள்ளது, அதாவது வெடிக்கும் போர்க்கப்பலை விட அதிக தாக்கத்தை உருவாக்கி உள்வரும் ஏவுகணைகளை தாட் அழிக்கிறது. ஒரு தாட் பேட்டரி, ஆறு டிரக் - லாஞ்சர்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் எட்டு இடைமறித்து அழிக்கும் தடுப்புகளை வைத்திருக்கும்.

     

    அதனுடன் ஒரு ரேடார் மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். தாட் - இன் ரேடார் 870 முதல் 3,000 கிலோமீட்டர் தொலைவிலான ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கண்டறியும் வல்லமை உடையது. 

    • ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.
    • ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்.

    அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து இன்னும் சில நாட்களில் விலக இருக்கும் ஜோ பைடன், புதன்கிழமை ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். உரையின் போது, அமெரிக்காவில் உள்ள ஒரு சில செல்வந்தர்களிடையே "ஆபத்தான அதிகாரக் குவிப்பு" குறித்து அமெரிக்கர்களை எச்சரித்தார்.

    ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ஜோ பைடன், "இன்று, அமெரிக்காவில் ஒரு தன்னலக்குழு தீவிர செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் உருவாகி வருகிறது. இது நமது ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் உண்மையில் அச்சுறுத்துகிறது."

    "அமெரிக்கர்கள் தவறான தகவல்களின் கீழ் புதைக்கப்படுகிறார்கள், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது. பத்திரிகை சுதந்திரம் நொறுங்கி வருகிறது. செய்தி ஆசிரியர்கள் மறைந்து வருகின்றனர். அதிகாரம் மற்றும் லாபத்திற்காகச் சொல்லப்படும் பொய்களால் உண்மை அடக்கப்படுகிறது. நமது குழந்தைகள், நம் குடும்பங்கள் மற்றும் ஜனநாயகத்தை துஷ்பிரயோக சக்தியிலிருந்து பாதுகாக்க சமூக தளங்களை நாம் பொறுப்பேற்க வேண்டும்."

    "நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட பணிகளின் தாக்கத்தை உணர சற்று நேரம் ஆகும். ஆனால், நாம் விதைத்த விதைகள் வளர்ந்து, வரும் தசாப்தங்களில் பூத்துக் குலுங்கும். அமெரிக்க ஆபத்தில் இருப்பதை உணர்ந்து தான், நான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டேன்."

    "திக்கி பேசும் குழந்தை ஒன்று ஸ்கிராண்டன், பென்சில்வேனியா அல்லது கிளேமாண்ட், டெலாவேரில் சாதாரண துவக்கத்தில் இருந்து அமெரிக்க அதிபராக ஓவல் அலுவலகத்தின் ரெசல்யூட் மேசையின் பின் அமர்வது உலகில் வேறு எங்கும் சாத்தியமாக முடியாது. நான் நம் நாட்டின் மீது முழு அன்பை முழுமையாக அர்ப்பனித்துள்ளேன். அதற்கு கைமாறாக அமெரிக்க மக்களிடம் இருந்து பல லட்சம் முறை அன்பு, ஆதரவு கலந்த ஆசீர்வாதத்தை பெற்றுள்ளேன்," என்றார்.

    பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அதிபர் ஜோ பைடன் வருகிற 20 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். இதே நாளில் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பம் பதவியேற்கிறார். 

    • அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மற்ற உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அமெரிக்காவில் நடு வானில் ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த புதன்கிழமை இரவு தலைநகர் வாஷிங்டனில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஜெட் விமானத்தின் பாதையில் பறந்து சென்றபோது விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர். ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் கூட உயிர்பிழைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்துக்கு சற்றுமுன் வரை ராணுவ விமானியின் நடவடிக்கைகளை ஆராய்ந்த அதிகாரிகள், இந்த விமான பேரழிவு ஏற்பட்ட நேரத்தில் விமான நிலையத்தின் தரை கட்டுப்பாட்டு ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவான எண்ணிக்கையில் இருந்ததாக தெரிவித்தனர்.

    ஃபெடரல் ஏவியேஷன் அறிக்கையின்படி, மோதல் நடந்தபோது, ரீகன் நேஷனலில் உள்ள கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒரு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். மோதலுக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இந்த விபத்துக்கு முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமாவே காரணம் என தற்போதைய அதிபர் டொனல்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

    விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று [வியாழக்கிழமை] செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஒபாமாவும் பைடனும் குடிமக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.

    அதனால் விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 இல் நான் அதிபரானபோது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.

    ஆனால் 2020 இல் ஜோ பைடன் அதிபரான பிறகு விமான துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார். இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இதுவரை 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
    • நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 2012 முதல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படும்  21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை DODGE அறிவித்தது.

    இந்தியாவிடம் நிறைய பணம் இருப்பதாகவும், தங்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு வழங்கி வந்த இந்த நிதி குறித்து முந்தைய ஜோ பைடன் அரசை டிரம்ப் சாடியுள்ளார்.

    மியாமி நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், " இந்திய தேர்தல்களுக்காகவும், வங்கதேசத்தில் அரசியல் சூழலை சீரமைப்பதற்காகவும் அமெரிக்க மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

    ஆசியா ஏற்கனவே நன்றாகச் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்க தேவையில்லை.

    இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு ஏன் ரூ.182 கோடி வழங்க வேண்டும். அங்கு வேறு யாரையோ வெற்றி பெற வைக்க பைடன் அரசு முயற்சி செய்துள்ளது. இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச வேண்டும்" என்று சந்தேகம் கிளப்பியுள்ளார். 

    ×