search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மானு பாகெர்"

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
    • துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. வில்வித்தை, தடகளம், பேட்மின்டன், குத்துச் சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளனர்.

    போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீராங்கனை மனுபாகெர் வெண்கல பதக்கம் வென்றார். அவர் 221.7 புள்ளிகள் பெற்றார்.

    வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் மனுபாகெர் புதிய வரலாறு படைத்தார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

    ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான மல்லேஸ்வரி (பளு தூக்குதல்), சாய்னா நேவால் (பேட்மின்டன்), மேரிகோம் (குத்துச்சண்டை), பி.வி.சிந்து (பேட்மின்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), மீரா பாய்சானு (பளு தூக்குதல்), லவ்லினா (குத்துச் சண்டை) ஆகியோருடன் மனுபாக்கர் இணைந்தார்.

    துப்பாக்கி சுடுதலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. கடைசியாக 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் விஜய் குமார் (வெள்ளி), ககன்நரங் (வெண்கலம்) பதக்கம் பெற்றனர். ரியோடி ஜெனீரோ, டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கிடைக்கவில்லை. தற்போது இந்தப் போட்டியில்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியது.


    ஒட்டு மொத்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 5-வது பதக்கம் கிடைத்தது.

    மனுபாகெரை தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 2 இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் ரமிதா ஜின்டல், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றனர். இதில் ரமிதா 631.5 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இளவேனில் வாலறிவன் 630.7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அடைந்தார். முதல் 8 இடங்கள் வரையே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

    இதே போல ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜுன் பபுதா 630.1 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தார். மற்றொரு இந்தியரான சந்தீப்சிங் 629.3 புள்ளிகளு டன் 12-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

    ரமிதா மோதும் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. அர்ஜுன் பபுதா விளையாடும் இறுதி சுற்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த இருவரும் பதக்கம் பெறுவார்களா? என்று ஆர்வத்துடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இதே போல ஆண்களுக்கான வில்வித்தை அணிகள் பிரிவிலும் பதக்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    தருணதீப்ராய், தீரஜ் பொம்ம தேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி நேரடியாக கால் இறுதியில் பங்கேற்கிறது. தர வரிசையில் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி கால் இறுதி, அரை இறுதியில் வெற்றி பெற்று பதக்கம் பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபடி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு ஜனாதிபதி திரவுபடி முர்மு, பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மானு பாகெருக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பாராட்டியுள்ளனர்.

    ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில், "பாரீஸ் ஒலிம்ப்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. வெண்கல பதக்கத்தை கைப்பற்றி, ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய முதல் இந்தியரான மானு பாகெருக்கு வாழ்த்துகள். நமது மகள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார். இந்தியாவிற்கு மென்மேலும் பதக்கங்கள் குவியவுள்ளன" என்றார்.

    தொடர்ந்து, மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், " இந்தியா தனது ஒலிம்பிக் ஓட்டத்தை தகுதியான பதக்கத்துடன் தொடங்கியுள்ளது.

    பாரீஸ்2024-ல் பெண்களுக்கான 10மீ பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு வாழ்த்துகள்.

    உங்கள் சாதனை உங்களின் சிறப்பான திறமை மற்றும் விடாமுயற்சிக்கு சான்றாகும். நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்.

    இந்த முக்கியமான சந்தர்ப்பம் எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை சிறந்து விளங்க பாடுபட ஊக்குவிக்கட்டும்" என்றார்.

    • ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    இதைதொடர்ந்து, வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாகெருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    அந்த பதிவில், " இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.

    இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த வாழ்த்துக்கு மானு பாகெர் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மானு பாகெர் தனது எக்ஸ் பக்கத்தில், " உங்கள் வாழ்த்துக்களுக்காக மிக்க நன்றி பிரதமர் நரேந்திர மோடி. அனைத்து ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எனக்கு மிகப்பெரிய விஷயம்" என்றார்.

    • வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • இந்தியாவின் முதல் பதக்கத்தை மானு பாகெர் வென்றது பெருமையான தருணம்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மானு பாகெரின் வெற்றி குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு எகஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கிய மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். மனு பாக்கரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை பல விளையாட்டு வீரர்களை, குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும்.

    எதிர்காலத்தில் அவர் மேலும் சாதனை படைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறுகையில், " பாரீஸ் ஒலிம்பிக்2024ல் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மானு பாகெர் வென்றது பெருமையான தருணம்.

    வாழ்த்துகள் மானு, நீங்கள் உங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மேலும், ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடும் முதல் வீராங்கனையாக மாறியுள்ளீர்கள்" என்றார்.

    • டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
    • குத்துச்சண்டையின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரின் வென்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர். ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பதக்கம் வென்றது குறித்து மானு பாகெர் கூறியதாவது:

    டோக்கியோவிற்குப் பிறகு நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். அதைக் கடக்க எனக்கு மிக நீண்ட காலம் பிடித்தது. வெளிப்படையாகச் சொன்னால், இன்று நான் எவ்வளவு நன்றாக உணர்கிறேன் என்பதை என்னால் விளக்க முடியாது.

    என்னிடமுள்ள முழு ஆற்றலுடன் நான் போராடினேன். நான் வெண்கலத்தை வென்றதற்கு உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

    நான் பகவத் கீதையைப் படித்தேன், நான் செய்ய வேண்டியதை எப்போதும் செய்ய முயற்சித்தேன். எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நாம் விதியை எதிர்த்துப் போராட முடியாது என தெரிவித்தார்.

    • ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் சிறப்பான விளையாட்டால், இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.

    வெண்கலத்திற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது.

    நம்பமுடியாத சாதனை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் ரமிதா ஜிண்டால் வென்றார்.
    • இன்று டேபிள் டென்னிசில் ஸ்ரீஜா அகுளா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர்

    பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.
    • ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.

    ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

    ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார்.

    நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்.

    ×