என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா"

    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள்.
    • வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட காரணங்களுக்காக பயன்படுத்தபட்டு வருகின்றது.

    இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வக்பு வாரிய சட்டத்தில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

    இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதற்கு கடும் எதிர்ப்புக்கள் எழுந்தன.

    இருப்பினும் பாராளுமன்ற கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். அதன் மீது காங்கிரஸ் எம்.பி.வேணுகோபால் பேசினார். அப்போது சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்த மசோதா தாக்கல் செய்த பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

    இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி கூறியதாவது:-

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்த இன்று மிகவும் சோகமான நாள். மத சுதந்திரத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தலையிடுகிறது. இந்த மசோதா மனித உரிமைக்கு எதிரானது. அரசியல் அமைப்பு மட்டுமின்றி கூட்டாட்சி முறைக்கும் இது எதிரானது. நாட்டு மக்கள் இடையே பிரிவை ஏற்படுத்தும் முயற்சி இதுவாகும். குறிப்பிட்ட மதம், சமுதாயத்தினரை குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரான மசோதா. சிறுபான்மை மக்களை குறிவைத்து வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
    • எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

    இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

    • பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை.
    • கருத்து கேட்பு கூட்டத்திற்கு அழைக்காமல் தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசு, சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் வக்பு வாரிய சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டத் திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படும் பொழுதே பலத்த எதிர்ப்புகள் உருவானதை தொடர்ந்து இச்சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி.) அனுப்பப்பட்டது.

    அதன்படி ஜே.பி.சி. குழு அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை பெற்று வருகிறது.

    அதன்படி, நாளை (திங்கட்கிழமை), சென்னையில் ஜே.பி.சி. கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த உள்ளதாகவும், இக்கூட்டத்தை தி.மு.க. அரசின் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தி.மு.க. அரசு கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு இன்று வரை அதற்கு ஆதரவான ஒரு சில அமைப்புகளுக்கு மட்டும் அழைப்பு அனுப்பிவிட்டு, பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்க வில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக, எஸ்.டி.பி.ஐ., ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், ஜமாத் இஸ்லாமிய இந்த், தேசிய முஸ்லிம் லீக், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, மனித நேய ஜனநாயகக் கட்சி போன்ற இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. இச்சட்டத் திருத்தம் இஸ்லாமிய மக்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ள அடிப்படை உரிமையையே தகர்த்து எறிவதாக உள்ளதால், உடனடியாக இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    பெரும்பாலான இஸ்லாமியர் நலம் காக்கும் அமைப்புகளை இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு அழைக்காமல் தி.மு.க. அரசு புறக்கணித்துள்ளது இஸ்லாமிய மக்களுக்கு செய்துள்ள துரோகமாகும். இந்த அரசின் ஓர வஞ்சனை செயலுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கருத் துக்களை நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் எடுத்துரைக்க வாய்ப்ப ளிக்காத தி.மு.க. அரசிற்கு எனது கண்டனத்தைத் தெரி வித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கூட்டுக்குழு அடிக்கடி கூடி வக்பு வாரிய திருத்த மசோதாவை பரிசீலித்து வருகிறது.
    • குழுவின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தியில் உள்ளனர்.

    வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் நோக்கில் ஏற்கனவே உள்ள வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து மசோதா ஒன்றை கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    எனவே இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதற்காக பா.ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த கூட்டுக்குழு அடிக்கடி கூடி வக்பு வாரிய திருத்த மசோதாவை பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளையும் கேட்டு வருகிறது.

    அதேநேரம் இந்த குழுவின் செயல்பாடுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக குழுத்தலைவர் ஜெகதாம்பிகா பால் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அத்துடன் பல்வேறு காரணங்களுக்காக இந்த குழுவின் கூட்டங்களில் இருந்து பலமுறை எதிர்க்கட்சியினர் வெளியேறி உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளை ஜெகதாம்பிகா பால் மறுத்து உள்ளார். மேலும் குழுவின் பா.ஜனதா எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குறைகூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கான பாராளுமன்றக்குழுவில் இருந்து முழுமையாக வெளியேறுவது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிசீலித்து வருவதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

    அந்த கடிதத்தில் ஜெகதாம்பிகா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். குறிப்பாக அவர் தன்னிச்சையாக செயல்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    அந்தவகையில் குழு கூட்டத்துக்கான தேதி, சாட்சிகளை அழைப்பது போன்றவை தொடர்பாக குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்படுவதாகவும், சில நேரங்களில் 3 நாட்கள் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தகுந்த தயாரிப்பு செய்ய கால அவகாசம் கிடைப்பதில்லை என்றும், தயாரிப்பு இல்லாமல் கலந்துரையாடுவது நடைமுறை சாத்தியமில்லை என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பரிசீலிக்கும் பாராளுமன்றக்குழுவும் ஒரு சிறிய பாராளுமன்றம் போலவே செயல்பட வேண்டும் என கூறியுள்ள எம்.பி.க்கள், மாறாக உரிய செயல்முறையை பின்பற்றாமல் அரசு விரும்பியவாறு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வெறும் ஒரு அறையாக கருதக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

    பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவரின் இத்தகைய செயல்பாடுகளால் இந்த குழுவில் இருந்து நாங்கள் வெளியேறலாம் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த குழுவில் அங்கம் வகித்து வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஆ.ராசா (தி.மு.க.), முகமது ஜாவேத், இம்ரான் மசூத் (காங்கிரஸ்), அசாதுதீன் ஓவைசி (மஜ்லிஸ் கட்சி), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) உள்ளிட்டோர் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.

    மேலும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சந்தித்து பேசவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    • கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தலைவருக்கு அழைப்புகள் வந்தன.
    • அதனடிப்படையில் அவர் செயல்பட்டார். அவர் வேறொருவரின் முடிவை செயல்படுத்துகிறார்.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதகம் மற்றும் பாதகம் ஆகியவை ஆராய்ந்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் மசோதா நிறைவேற வேண்டும் என்பதற்காக பராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. பாராளுமன்ற குழு மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தினர். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமள மற்றும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஒவைசி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம் அல்லாத நபர் மற்றும் குறைந்த பட்சம் இரண்டு பெண் உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் மிர்வைஸிடம் இன்று குழு முன் தனது கருத்துகளை தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில் "வக்பு வாரியம் விவகாரம் மிகவும் தீவிரமான விசயம். குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முக்கியமான விசயம். ஏனென்றால், இது முஸ்லிம் அதிகமாக வாழும் மாநிலம் ஆகும். வக்பு விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.

    மேலும், "எங்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும், முஸ்லிம்கள் தாங்கள் அதிகாரம் இழந்தவர்கள் என்று உணர வைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

    இது தொடர்பாக பாஜக எம்.பி. அபரஜிதா சாரங்கி கூறுகையில் "இன்று நாங்கள் ஜம்மு-காஷஸ்மீர் அமைப்பு மற்றும் வழக்கறிஞர்கள் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளிடம் ஆலோசனைகள் கேட்டறிய வந்தோம். இரு அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் கல்யாண் பானர்ஜி (திரணாமுல் காங்கிரஸ் எம்.பி.) தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகாவுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். இரண்டு முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது" என்றார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில் "21-ந்தேதி கடைசி செசனுக்குப் பிறகு, பாராளுமன்ற கூட்டுக்குழு தலைவர், கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25-ந்தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார். மற்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 அல்லது 31-ந்தேதி கூட்டத்தை கூட்ட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், எங்கள் கோரிக்கையை தலைவர் கேட்கவில்லை. அதனால் நாங்கள் எங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து வந்தோம்.

    நேற்று நள்ளிரவு நிகழ்ச்சி நிரலில் மாற்றம் இருப்பதாகவும், தொடர்ந்து விவாதம் இருக்காது என்றும் செய்தி கிடைத்தது. அதேவேளையில் கூட்டம் 24 மற்றும் 27-ந்தேதிகளில் நடைபெறும், ஆனால் 25-ம் தேதி (ஜனவரி) நடைபெறாது எனத் தெரிவித்தனர்.

    உள்ளே அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தலைவருக்கு அழைப்புகள் வந்தன. அதனடிப்படையில் அவர் செயல்பட்டார். அவர் வேறொருவரின் முடிவை செயல்படுத்துகிறார்.

    நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது தலைவர் 10 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தார். எந்த எதிர்ப்பும் இல்லாமல் விவாதம் நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்" என்றார்.

    ×