என் மலர்
நீங்கள் தேடியது "வக்பு வாரியம் மசோதா"
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இதில் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய 31 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பிறப்பித்துள்ளார்.
பா.ஜ.க.வின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மசோதாவை ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.
இந்த கூட்டுக் குழுவானது மசோதா குறித்து ஆய்வுசெய்து அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
- திருப்தியில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
- வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் சட்டத்திருத்த மசோதா கூறுகிறது.
இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. சொந்தமான நிலங்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த மசோதா மூலம் குறைக்கப்பட உள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனவே இந்த மசோதாவை ஆராய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கூட்டங்கள் நடந்தும் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே திருப்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, வக்பு வாரியம் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்துளார். லட்டு பிரசாம் தயாரிக்க மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்து அடங்கிய நிலையில் திருப்பதி கோவில் தேவஸ்தானத்தை நிர்வகிக்க 24 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தார். இதன் தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்ற உடனேயேதிருப்தியில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்ற தடாலடி கருத்தை அவர் வெளியிட்டார். இதற்கிடையே புதிய வக்பு சட்டத்திருத்த மசோதாவில் வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் தேவஸ்தான தலைவரின் கருத்தையும் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஒப்பிட்டு பேசியிருந்தார்.
அதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க முடியாது என்று சூழலை உருவாக்குகிறீர்கள், அப்படி இருக்கும்போது வக்பு வாரியத்தில் மட்டும் ஏன் முஸ்லிம் அல்லாதோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று ஒவைசி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது பேசியுள்ள திருப்பதி அறங்காவலர் பி.ஆர். நாயுடு, இந்த கூற்று அடிப்படையற்றது. வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி, அதை திருப்பதியோடு எப்படி ஒப்பிட முடியும். திருப்பதி திருமலை ஒரு இந்து கோவில், இந்து அல்லாதோர் இங்கு இருக்கக்கூடாது என்பது பல கால கோரிக்கை. இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல, இந்துக்களை தவிர அங்கு யாரும் இருக்கக்கூடாது என்று சனாதன தர்மம் கூறுகிறது. இதை நடைமுறைப்படுத்துவது குறித்து போர்டு மீடிங்கிங்கில் முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
- ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- மார்ச் 10-ந்தேதி வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
வக்பு வாரியங்களுக்கு சொந்தமாக நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்குப்படி, வக்பு வாரியங்களுக்கு 9.4 லட்சம் ஏக்கர் அளவுக்கு சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்கள் பெயரில் இருப்பது தெரிய வந்தது.
வக்பு வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில் வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத 2 நபா்களை உறுப்பினா்களாக இடம்பெற செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த குழு பல்வேறு கட்டங்களாக கூடி ஆய்வு செய்தது. அப்போது 66 திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. இதில், எதிர்க்கட்சிகளின் 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் பரிந்துரை செய்த 14 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வக்பு மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஆராயப்பட்டு, 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மார்ச் 10-ந்தேதி தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில், வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.