என் மலர்
நீங்கள் தேடியது "இந்துக்கள் மீது தாக்குதல்"
- மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன.
- போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.
வங்கதேசத்தில் கடந்த வருடம் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து அந்நாட்டில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் இந்து சமூகத்தின் முக்கிய தலைவர்பபேஷ் சந்திர ராய் (வயது 58) மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்நாட்டில் பாலஸ்தீன தாக்குதல்களை கண்டித்து இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து வங்கதேசம் செல்லும் அமெரிக்க பயணிகளை அந்நாட்டு எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் காக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் உள்ளிட்ட சிட்காங் மலைப்பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசு ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வகுப்புவாத வன்முறை, குற்றச் சம்பவங்கள், பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக பயணிகள் இந்தப் பகுதிக்குச் செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், இந்தப் பகுதியில், குடும்ப தகராறுகளால் தூண்டப்பட்ட கடத்தல்கள் மற்றும் மத சிறுபான்மையினரை குறிவைத்து கடத்தல்கள் நடந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் அரசியல் வன்முறைகளும் இப்பகுதிக்கு வருபவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் IED குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. போராட்டங்கள் வன்முறை மோதல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும், அமைதியான கூட்டங்களையும் கூட தவிர்க்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்.
ஏனெனில் சிறிய எந்நேரமும் அவை வன்முறையாக மாறக்கூடும். வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் உட்பட பயங்கரவாத வன்முறை அபாயம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
- சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
- பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி மாணவர் போராட்டத்தால் கவிழ்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உருவான இடைக்கால அரசின் தலைவராக அமைதிகான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதிவு ஏற்றார்.
ஆனால் அந்நாட்டில் அமைதி திரும்பிய பாடில்லை. முஸ்லீம் பெரும்பான்மை வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த வருட இறுதியில் இந்துக்கள் போராட்டத்தை தூண்டியதாக இஸ்கான் தலைவர் சாமியார் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்ட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இந்து தலைவர் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தினாஜ்பூர் மாவட்டம் பசுதேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பபேஷ் சந்திர ராய் (வயது 58). இவர் வங்காதேச பூஜா உத்ஜபன் பரிஷத்தின் பீரால் பிரிவின் துணைத் தலைவராகவும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் பபேஷ் சந்திர ராய் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் பபேஷ் சந்திர ராயை கடத்தி சென்றனர். நராபரி கிராமத்திற்கு கொண்டு சென்று அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் பபேஷ் சந்திர ராய் உடலை ஒரு வேனில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
- இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
- ராணுவ வாகனம் எரிக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள், உடமைகள், கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து தலைநகர் டாக்கா மற்றும் சிட்டகாங்கில் பேரணி நடந்தது. இதில் லட்சகணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் இந்துக்களின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறும்போது, `வங்காள தேசத்தில் உள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். அங்குள்ள அரசாங்கத்துடனும் பேசுகிறோம்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பை கேட்கிறோம். இந்த அவமானமும், இனப் படுகொலையும் நிறுத்தப் பட்டு, அனைத்து கோவில்களும் பாரம்பரியமாக பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்தன.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உபைதுல் ஹாசன் பதவி விலக கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமை நீதிபதி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதையடுத்து சுப்ரீம் கோாட்டின் தலைமை நீதிபதியாக சையத் ரெபாத் அகமது என்பவரை அதிபர் முகமது ஷஹாபுதீன் நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வங்காள தேசத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கோபால்கஞ்சில் அவாமி லீக் கட்சி பேரணியில் நடந்த மோதலின் போது 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். ராணுவ வாகனம் எரிக்கப்பட்டது.
- இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது.
- இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது.
டாக்கா:
வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே வங்காள தேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இதையடுத்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வங்காள தேசத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசை விக்ரம் மிஸ்ரி சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் சிறுபான்மையினரின் பிரச்சனைகள், தவறான தகவல் பிரச்சாரங்கள், ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது, பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசினர்.
இதில் வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து விக்ரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் முகமது யூனுஸ் கூறும்போது, இந்தியாவுடன் உறவு வலுவானது. நெருக்கமானது. வங்கதேச மக்களின் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா பல கருத்துகளை அறிக்கைகள் மூலம் வெளியிடுகிறார். இது வங்காளதேசத்தில் பதட்டத்தை உருவாக்குகிறது. இதுபற்றி எங்கள் மக்கள் கவலைபடுகிறார்கள்.
ஷேக் ஹசீனாவின் ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மற்றும் மக்கள் என அனைவரும் கைகோர்த்தனர். ஆனால் அவரின் கருத்துகளால் இங்கு பதற்றம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்கும் அவர்களின் மதம், நிறம், இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.