என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்"

    • வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்.
    • கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் ஆட்சியில் இல்லை. மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலம் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது.

    ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதா, இல்லையா என்பதை நான் ஆலோசிக்க வேண்டும்.

    மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். வருங்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். கட்சி சார்பில் யாரையாவது நிறுத்துவேன்.

    இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். எந்தத் தேர்தலிலும் நீங்கள் என்னை வீட்டுக்குப் போக விடவில்லை.

    ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். புதிய தலைமுறையை கொண்டுவர வேண்டும்.

    நான் சமூக சேவையை விடவில்லை. எனக்கு அதிகாரம் வேண்டாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதை விடவில்லை என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
    • அன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.

    இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய, மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், இம்முறை ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பேசியதாவது:

    பெண்களுக்கு மாதம் ரூ.3,000 அளிக்கப்படும். மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் .

    விவசாயிகள் பயிர்க்கடன் ரூ.3 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். கடனை திருப்பிச் செலுத்தியர்களுக்கு ஊக்கத்தொகை 50,000 ரூபாய் வழங்கப்படும்.

    ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க பாடுபடுவது.

    ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.

    வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை என தெரிவித்துள்ளார்.

    • மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவச கல்வி.
    • அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே இன்று வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் மகா விகாஸ் அகாடியின் ஒட்டுமொத்த வாக்குறுதிகளின் ஒரு பகுதியாகும். ஆனால், சில கருத்துகள் சிறப்பு கவனம் பெறக்கூடியவை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மாணவிகளுக்கு இலவச கல்வி பெறும் வசதி உள்ளது. மகா விகாஸ் அகாடி ஆட்சிக்கு வந்தால் மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நிலையாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாராவி மறுசீரமைப்பு திட்டம் கைவிடப்படும் போன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

    மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிட இருக்கிறது.

    • உணவுப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மும்பை:

    288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் வருகிற 20-ந் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தோ்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா-பா.ஜ.க. துணை முதல்-மந்திரி அஜீத் பவாா் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற மகா யுதி கூட்டணிக்கும், எதிரணியான காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மும்பையில் காங்கிரஸ் கூட்டணியின் கூட்டு பிரசாரக் கூட்டம் நேற்று (புதன் கிழமை) நடைபெற்றது.

    மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா், சிவசேனா (உத்தவ்) கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. 'மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாநி லத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும்.

    பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவா்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டம் தொடங்கப்படும். கிருஷி சம்ருத்தி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும். மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    'நாட்டில் தற்போது நடைபெறும் அரசியல், பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கும் 'இந்தியா கூட்டணி' கட்சிகளுக்கும் இடையிலான போா்' என்று ராகுல் காந்தி பேசினாா்.

    பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் மகாராஷ்டிரம் அனைத்து நிலையிலும் வீழ்ச்சிகண்டு விட்டது என்று சரத்பவாா் குற்றம்சாட்டினாா்.

    மகாராஷ்டிரத்தில் சமையல் எண்ணெய், சா்க்கரை, அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே உறுதியளித்தாா்.

    மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு சாா்பில் பெண்களுக்கு ஏற்கெனவே மாதம் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதை ரூ.2,100-ஆக உயா்த்துவோம் என்று ஆளும் கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம்.
    • மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என்று பெயர்.

    மகா விகாஸ் அகாடி தேர்தலுக்கான பிரசாரத்தை நேற்று தொடங்கியதாக குறிப்பிட்ட சரத் பவார், இன்று மூன்று இடங்களில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் மகாராஷ்டிர மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப நாங்கள் பணியாற்றி மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பது அவசியம். இன்று முதல் நான், கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த அதற்கான பணியை மேற்கொள்ள இருக்கிறோம். மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற சுவர் உடைக்கப்படும். ராகுல் காந்தி சொல்வது போன்று நடந்தால் அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    • ராஞ்சி நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற இன்னும் 3 தினங்களே உள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள துலே நகரில் பிரசாரம் செய்கிறார்.

    அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு பிற்பகல் நாசிக் நகருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். அதன் பிறகு அவர் டெல்லி திரும்புகிறார்.

    நாளை (சனிக்கிழமை) அவர் அகோலா, நந்தத் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமை மதியமும், பிற்பகலிலும் பிரதமர் மோடி பொகோரா மற்றும் கும்லா ஆகிய 2 ஊர்களில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அந்த 2 நகரங்களிலும் பிரமாண்டமான ரோடு ஷோவை அவர் மேற்கொள்கிறார்.

    ராஞ்சி நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதையடுத்து மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 12-ந்தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். அன்று அவர் சிமூர் மற்றும் சோலாபூர் நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

    12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை புனே நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்டமான ரோடுஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-ந்தேதி அவர் சம்பஜிநகர், ராய்காட், மும்பை நகரங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பிரதமர் 9 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். பிரதமர் மோடியை போலவே மத்திய மந்திரி அமித்ஷாவும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற இன்னும் 3 தினங்களே உள்ளன. இதனால் அங்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    • கடந்த 2½ ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவின் வளர்ச்சி வேகம் தொடரும்.
    • அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள துலே நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்துடன் எனக்குள்ள தொடர்பு உங்களுக்குத் தெரியும். நான் மகாராஷ்டிராவிடம் ஏதாவது கேட்ட போதெல்லாம், அம்மாநில மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆசிர்வாதம் அளித்துள்ளனர்.

    கடந்த 2½ ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட மகாராஷ்டிராவின் வளர்ச்சி வேகம் தொடரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வோம்.

    மக்களை நாங்கள் கடவுளின் மற்றொரு வடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களை கொள்ளையடிப்பதற்காக அரசியலில் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணி, மகாராஷ்டிரா மக்களை கொள்ளையடிக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கிறது. காங்கிரஸ், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான கட்சி.

    அரசியலில் இவர்களின் ஒரே நோக்கம் மக்களைக் கொள்ளையடிப்பதுதான். அந்த கூட்டணி கட்சியினர் அரசாங்கத்தை அமைக்கும் போது, அவர்கள் ஒவ்வொரு அரசாங்க கொள்கையிலும் வளர்ச்சியிலும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அதை நீங்கள் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தின் 2½ ஆண்டு காலத்தில் பார்த்து உள்ளீர்கள். மகா விகாஸ் அகாடி என்பது சக்கரங்கள் மற்றும் பிரேக்குகள் இல்லாத வாகனம், அங்குள்ள அனைவரும் ஓட்டுநர் இருக்கையில் அமர சண்டை போடுகிறார்கள்.

    பா.ஜ.க. கூட்டணி மக்கள், மாநில வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறது.

    பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி மட்டுமே மகாராஷ்டிராவின் விரைவான வளர்ச்சியை உறுதி செய்யும். மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம் முக்கியம். அதற்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம்.

    எதிர்க்கட்சியினர் கண்ணிய குறைவான கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அவர்கள் பெண்களை அவமதித்தும், துஷ்பிரயோகமும் செய்கிறார்கள்.

    எங்களது அரசாங்கம் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்காக பணியாற்றி வருகிறது. ஆனால் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. அனைத்து சாதிகளும் பிரிந்து இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது.
    • மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது.

    பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள தேசிய மாநாடு கட்சி, சட்டமன்றத்தில் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் சதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    மகாராஷ்டிரா (மகாராஷ்டிரா மாநில மக்கள்) ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் செய்த சதிகளை புரிந்து கொள்ள வேண்டும். நாடு சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது. மோடி இங்கு இருக்கும் வரை, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியால் ஏதும் செய்ய இயலாது. அம்பேக்தரின் அரசியலமைப்பு மட்டுமே அங்கு செயல்படும். சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    மேலும், "காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கான திட்டத்தை (agenda) இங்கு முன்வைக்க வேண்டாம். காஷ்மீருக்காக பிரிவினைவாத மொழிகளை பேச வேண்டாம்" என்றார்.

    • நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்- மோடி
    • முன்னதாக நாம் பிரிந்தால் பிரிக்கப்படுவோம் என்ற ஸ்லோகம் தோல்வியடைந்தது. தற்போது அவர் புதிய ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

    பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் ஒற்றை நோக்கம், ஒரு சாதியினரை மற்ற சாதியினருக்கு எதிராக சண்டையிட வைப்பதுதான். அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.க்களின் வளர்ச்சியை விரும்புவதில்லை. அவர்கள் அங்கீகாரம் பெறுவதை விரும்புவதில்லை. நாம் ஒற்றுமையாக இருந்தால் நமக்கு பாதுகாப்பானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்துள்ளார்.

    சஞ்சய் ராவத் இது தொடர்பாக கூறுகையில் "மோடி இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்துகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முன்னதாக நாம் பிரிந்தால் பிரிக்கப்படுவோம் என்ற ஸ்லோகம் தோல்வியடைந்தது. தற்போது அவர் புதிய ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். மகாராஷ்டிரா மக்கள் ஏற்கனவே பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் மோடி இங்கு வரும்போதெல்லாம் பிரிவு மற்றும் அசாதாரணை நிலையை தூண்டிவிடுவதால் பாதுகாப்பற்ற மாநிலமாகிறது. உண்மையான பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் பா.ஜ.க.வை நீக்க வேண்டும்

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.
    • பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது.

    மும்பை:

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார். மத்திய மந்திரி பியூஸ் கோயல், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். லட்கி பஹின் யோஜனா வரம்பு ரூ.2,100 ஆக உயர்த்தப்படும். விருத் பென்சன் யோஜனா உச்ச வரம்பு ரூ.1500-ல் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்படும்.

    25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். விலையை சீராக வைத்திருக்க சந்தையில் தலையிடப்படும். அரசு அமைந்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொலை நோக்கு ஆவணம் வெளியிடப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தை மிகவும் விரும்பப்படும் மேக்-இன் இந்தியா இடமாக மாற்ற விரும்புகிறோம். ஏரோநாட்டிகல் மற்றும் விண்வெளியில் கவனம் செலுத்தப்படும. செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மகாராஷ்டிராவில் அமைகிறது. 1 லட்சம் கோடி பொருளாதாரமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்க விரும்புகிறோம் என்பது உள்பட பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளன.

    தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு அமித்ஷா கூறியதாவது:-

    பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி வாக்குறுதிகளையும், சித்தாந்தங்களையும் அவமதிக்கிறது.

    உத்தவ் தாக்கரேவிடம் கேட்க விரும்புகிறேன். வீர் சாவர்க்கரைப் பற்றி இரண்டு நல்ல வார்த்தைகளைப் பேசுமாறு ராகுல் காந்தியை அவர் கேட்க முடியுமா? எந்த காங்கிரசாரும் பாலாசாகேப் தாக்கரே பற்றி 2 நல்ல வார்த்தைகள் பேச முடியுமா?

    சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பு கேட்கிறது. காங்கிரஸின் மாநிலத் காங்கிரஸ் தலைவர் நானா படோலே இதை ஒப்புக்கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மக்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், காங்கிரசின் இந்த திட்டத்திற்கு உடன்படுகிறீர்களா? மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது.

    சரத் பவாரை நான் கேட்க விரும்புகிறேன், 2004-2014 வரை 10 ஆண்டுகள் நீங்கள் காங்கிரசின் மத்திய அரசில் மந்திரியாக இருந்தீர்கள். மகாராஷ்டிரா வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    • மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது.
    • மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார்.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    அங்கு ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கும், எதிர்கட்சியான காங்கிரஸ்-உத்தவ் தாக்கரே கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதைதொடர்ந்து, மகாராஷ்டிரா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை வெளியிட்டார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டார்.

    அப்போது, மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    இதில், முக்கிய 5 அறிவிப்புகளாக, பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.3 லட்சம் வரையில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும், கூடுதல் ஊக்கத்தொகையாக, கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    மகாராஷ்டிராவில் வேலையில்லாத ஒவ்வொறு இளைஞருக்கும் மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும்.

    மகாராஷ்டிராவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ரூ.25 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீட்டுத் தொகை பெறும்.

    சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி.
    • ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்துள்ள நிலையில் தற்போது 7 பேர் சஸ்பெண்டு.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த மூன்று கட்சிகளிலும் வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், தங்களது கட்சி வேட்பாளர்களையும் எதிர்ப்பு போட்டியிடுகின்றனர். இது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மூன்று கட்சிகளும் தங்களது கட்சி தலைவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பெரும்பாலான எதிர்ப்பு தலைவர்கள் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனர். சிலர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். வேட்புமனுவை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.

    அவர்களை கட்சிகள் சஸ்பெண்டு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றரன். மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே 21 பேரை சஸ்பெண்டு செய்திருந்தது. தற்போது மேலும் 7 பேரை சஸ்பெண்டு செய்துள்ளனர். மொத்தம் 22 தொகுதிகளில் 28 பேரை சஸ்பெண்டு செய்துள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜ.க. 105 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    தற்போது சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு கட்சிகளாக பிரிந்து எதிரெதிர் கூட்டணியில் உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    ×