search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல் புகார்"

    • மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது.
    • அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மழைநீர் வடிகால் வாரியம் தொடர்பக ரூ26.61 கோடி டெண்டர் முறைகேடு செய்தாக புகார் எழுந்துள்ளது. அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 2018ம் ஆண்டில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, முதற்கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்கு உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் மீதும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார்.
    • மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது

    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று சந்திரபாபுநாயுடு முதல்-மந்திரி ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கிடையே இந்த போட்டி நடத்தியதில் நடிகை ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11-ந்தேதி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது இப்படி அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு இருப்பதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ரோஜா அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    ×