என் மலர்
நீங்கள் தேடியது "போர் விமானங்கள்"
- புதிதாக தளவாடங்கள் வாங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதியை பாதுகாப்புத்துறை ஒதுக்கியது.
- இதில் ராடார், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கடற்படைக்கு மேலும் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு மற்றும் விமானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திற்கு ரபேல்-எம் ரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது. இதற்காக 26 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் மத்திய அமைச்சகத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் புதிதாக தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் கோடி செலவில் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் டன் எடை கொண்டவை ஆகும். மேலும் தாக்கும் திறனும் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது பென்டகனில் ஜெனரல் அணுமின் உற்பத்தியாளர் அவருக்கு பிரிடேட்டர் ட்ரோன்களை பற்றி விளக்கக் காட்சியை வழங்கினார். இதன்பின் இந்த பிரிடேட்டர் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கையெழுத்தாகிவிடும் என தெரிகிறது.
அதேபோல் ரபேல்-எம் போர் விமானங்களைக் வாங்குவதால் வரும் மூன்று மாதங்களில் இந்திய ஆயுதப் படைகளின் திறன், குறிப்பாக இந்தியக் கடற்படைக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். மேலும் 3 கூடுதல் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.
- இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.
தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.
முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.
சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
- எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தின.
- விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
புளோரிடாவில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்கு மேலே மூன்று பயணிகள் விமானங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது, இதனால் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு துறையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் சோதனை பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது குறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள தகவல்களில், எஃப்-16 போர் விமானங்கள் தீப்பிழம்புகளைப் பயன்படுத்தி, மூன்று பயணிகள் விமானங்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்த மூன்று விமானங்களும் பாம் பீச் வான்வெளியில் ஏன் பறந்தன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
பாம் பீச் போஸ்ட் எனும் உள்ளூர் வலைதளம் வெளியிட்டுள்ள தகவல்களில், மார்-எ-லாகோவிற்கு டிரம்ப் வந்திருந்த போது அந்த இடத்தின் மீது மூன்று முறை வான்வெளி விதிமீறல்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரண்டு முறையும், பிப்ரவரி 17-ம் தேதி ஒருமுறையும் விதிமீறல்கள் நடந்துள்ளன.
வான்வெளி விதிமீறல்களுக்கு எஃப்-16 போர் விமானங்கள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. பிப்ரவரி 18-ம் தேதி பாம் பீச்சிற்குள் மற்றொரு பயணிகள் விமானம் பறந்ததாகவும் கூறப்படுகிறது. போர் விமானங்கள் "பாதுகாப்புக்கு உட்பட்டு பயன்படுத்தப்படும். இவை விரைவாக, தரையில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது."
எஃப்-16 ரக போர் விமானங்கள் விமானத்தை வான்வெளியில் இருந்து வெளியேற்றிய பிறகு டிரம்ப் தனது ரிசார்ட்டை சென்றடைந்தார்.