என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா தொடர்"

    • மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
    • பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்தார்.

    இந்நிலையில், அண்மையில் நிதிஷ்குமார் கொடுத்த பாட்காஸ்டில் மெல்போர்ன் டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    பாட்காஸ்டில் பேசிய நிதிஷ்குமார், "ஒருமுறை விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் 'உன் ஷூ சைஸ் என்ன?' என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடி போட்டியில் சதமடித்தேன்" என்று தெரிவித்தார்.

    • இந்திய அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம்.

    சவுத்தம்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நவ. 22-ந் தேதி தொடங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த டேவிட் வார்னர், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவரது ஓய்வுக்கு பிறகு ஸ்டீவன் சுமித் அந்த இடத்தில் விளையாடி வருகிறார்.

    ஆனால் சுமித்தால் ஒரு தொடக்க ஆட்டக்காரராக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் நடுவரிசைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், 'ஸ்டீவன் சுமித் தொடக்க ஆட்டக்காரராக தொடர்வாரா? என்பது குறித்து யோசித்து கொண்டிருக்கிறோம். இந்த விஷயத்தில் தீர்க்கமான எந்த முடிவுக்கும் வரவில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடர் குறித்து நாங்கள் சிட்னியில் ஆலோசித்தோம். அதில் எங்களது பந்துவீச்சின் ஆழம் குறித்து பேசி இருந்தோம்.

    சுமித்தை பின்வரிசைக்கு மாற்றினால், மற்ற வீரர்களில் யாராவது ஒருவர் மேல் வரிசையில் விளையாட வைக்க வேண்டும். அதேநேரத்தில் சுமித் விளையாடி வந்த பேட்டிங்கில் 4-வது வரிசையில் தற்போது கேமரூன் கிரீன் நன்றாக ஆடுகிறார். எனவே இந்த விஷயத்தில் இப்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது.

    நாங்கள் எங்களது டாப்-6 முன்னணி பேட்ஸ்மேன்கள் (சுமித், கவாஜா, டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன்) மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் நியூசிலாந்தை தொடரை சிறப்பாக முடித்தார்கள். அதனால் அவர்களில் எந்த மாற்றமும் இருக்காது' என்றார்.

    • இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் -கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது.

    அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அகமது, முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் சைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

    ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான்.

    • புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    • அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வருகிற 28-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொடரில் 103 டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமகா உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.

    • பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

    ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்பராஸ் கான், துருவ் ஜுரல், அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்

    ஹர்ஷித் ரானா மற்றும் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் அறிமுகமாகின்றனர்.

    ரிசர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

    புஜாரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

    • ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும்.

    இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 -25 பார்டர் -கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. அத்தொடரில் இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றிகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இம்முறை என்ன தான் இந்தியா போராடினாலும் ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கணித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். அதே சமயம் வெற்றிக்காக இந்திய அணி சவால் கொடுக்கும் என்றும் நான் சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பதியப்பட்ட பிட்ச்கள் (ட்ராப் இன்) இருக்கின்றன. அது முந்தைய இயற்கையான பிட்ச்களை விட சவாலாக இருக்கும்.

    ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும். அங்கே 3, 5-வது போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கே வித்தியாசமான கலவையுடன் விளையாட நேரிடலாம். அப்படி மாறுபட்ட பிட்ச் சூழ்நிலைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் அதிக சாதகம் இருக்கும் என்று நான் கருதவில்லை.

    என ஹைடன் கூறினார். 

    • பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.
    • இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி, ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணியுடன் மோதுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்திய அணி தற்போது ரத்து செய்துள்ளது. மேலும் இந்திய அணி கூடுதல் நேரம் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் மற்றும் மூத்த வீரர்கள் வலை பயிற்சியை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

    ருதுராஜ் தலைமையில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து வீரர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
    • இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது.

    நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.

    சொந்த மண்ணிலேயே தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் வீரர் தெரிவித்துள்ளார்.

    இது அவர் கூறியதாவது:-

    அது தூங்கும் ராட்சசனை எழுப்பக்கூடும். 3 -0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது. அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் அடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.

    அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர்.

    இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும் என்று கூறினார். 

    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
    • அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலையில் இருக்க வேண்டும்.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.

    அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.

    ரோகித் மற்றும் விராட் கோலி கடைசியாக விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 100 ரன்களை கூட கடக்கவில்லை. இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தாலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை பயமுறுத்த காத்திருப்பார்கள் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வாகன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரால் ரன்களை குவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனாலும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்கள் சொதப்பதற்க்கு வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவது சாதாரண விஷயம் அல்ல.

    அதிலும் குறிப்பாக பேட் கம்மின்ஸ், ஹசில்வுட், ஸ்டார்க் போன்ற உலகத் தரமான பந்துபந்துவீச்சாளர்கள் ஒன்று சேர்ந்து அட்டாக் செய்ய உள்ளனர். இதன் காரணமாக ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இந்த விசயம் தற்போது ஆபத்தாக மாறியுள்ளது.

    அந்த மூன்று பந்துவீச்சாளர்களையும் சமாளிக்க வேண்டும் என்றால் இருவருமே மிகச் சிறந்த மனநிலையில், சரியான டெக்னிக்குடன் விளையாட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் இந்த தொடரிலும் தடுமாற அதிக வாய்ப்பு இருக்கும்.

    இவ்வாறு மைக்கல் வாகன் கூறினார்.

    • ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
    • முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இழந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    அதோடு இந்த தொடரின் மோசமான தோல்வி காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 அல்லது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும்.

    இந்நிலையில், 'பார்டர் கவாஸ்கர்' டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றக் கூடும் என அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், "பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் எதாவது ஒரு போட்டியில் இந்தியா வெற்றி பெரும் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலான விஷயம். எனவே 3-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என்று கருதுகிறேன். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். முகமது ஷமி இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகும்" என்று தெரிவித்தார்.

    முகமது ஷமி இல்லாத நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் மற்றும் இளம் வீரர்கள் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடிய தனது கடைசி இரண்டு பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் டெஸ்ட போட்டி பெர்த் மைதானத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
    • ஜனவரி 7-ந்தேதி கடைசி டெஸ்ட் சிட்னியில் தொடங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.

    இந்திய அணி 2 கட்டமாக ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகிறது. முதல் குழு நாளை புறப்படுகிறது. நாளை மறுநாள் 2-வது குழு ஆஸ்திரேலியா செல்கிறது.

    இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.

    ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட பார்டர்- கவாஸ்கர் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
    • இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்- கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ந் சிட்னியில் தொடங்கும் டெஸ்ட் உடன் தொடர் முடிகிறது.

    இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என கைப்பற்றினால்தான் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த இரண்டு தொடர்களையும் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி விவரம்:

    பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஹேஸ்ல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லியோன், மிட்சல் மார்ஷ் , நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித் , மிட்சல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட்,

    இந்த தொடருக்கான இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. பும்ரா (துணைக்கேப்டன்), 3. ஜெய்ஸ்வல், 4. அபிமன்யூ ஈஸ்வரன், 5. சுப்மன் கில், 6. விராட் கோலி, 7. கே.எல். ராகுல், 8. ரிஷப் பண்ட் (வி.கீப்பர்), 9. சர்பராஸ் கான், 10. துருவ் ஜூரெல் (வி.கீப்பர்), 11. அஸ்வின், 12. ஜடேஜா, 13. முகமது சிராஜ், 14. ஆகாஷ் தீப், 15. பிரசித் கிருஷ்ணா, 16. ஹர்ஷித் ராணா, 17. நிதிஷ் குமார் ரெட்டி, 18. வாஷிங்டன் சுந்தர்.

    ×