என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்"

    • பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்.
    • உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்து இருந்தது.

    அதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்து இருந்தது. இதை அமல்படுத்த எந்த காலக்கெடுவையும் குழு நிர்ணயிக்கவில்லை.

    இதை அமல்படுத்த ஒரு செயலாக்க குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசியல் சாசனத்தில் 18 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்து இருந்தது.

    பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் மோடி யின் 3-வது ஆட்சி காலம் முடிவதற்குள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    2029-ம் ஆண்டு முதல் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் தனியாக பரிந்துரை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது
    • நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல்படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். இதுதொடர்பாக ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவு செய்து ஆராய்ந்து வந்தது.

    தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தின் 100 நாள் நிறைவு கொண்டாட்டங்களை ஒட்டி ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
    • இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தனது ஆட்சிக் காலத்துக்குள்ளாகவே அமல் படுத்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வை இறுதி செய்து அந்த அறிக்கையை மத்திய அமைச்சரவையில் சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று மோடி தலைமயிலான மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இந்த திட்டத்துக்குக் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. தற்போது இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்தல் வரும் சமயத்தில் பாஜக செய்யும் அரசியல் தந்திரமே ஆகும். தேர்தல் வரும்போதெல்லாம் பாரதீய ஜனதா கட்சி இதுபோன்ற விஷயங்களை கூறும். நாட்டு மக்கள் நிச்சயம் இதை ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் தொலைத் தொடர்புத் துறை அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவித்தவர்களில் 80 சதவீதம் பேர் நேர்மறையான ஆதரவையே வழங்கியுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இந்த திட்டத்துக்கு அதிக ஆதரவளித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    • முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
    • 2-ம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி, இந்த மசோதா உருவாக்கப்பட்டு அது அமைச்சரவை ஒப்புதலும் பெறப்பட்டு தற்போது தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தலை அவ்வளவு எளிதாக நடத்தி விட முடியாது.

    இதற்கு சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும் என்பதை தாண்டி அதோடு சில சட்டங்களை திருத்த வேண்டும்.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்திய அரசியலமைப்பில் குறைந்தபட்சம் 5 பிரிவுகளில் திருத்தங்கள் தேவைப்படும்.

    பாராளுமன்றத்தின் அவைகளின் காலம் தொடர்பான சட்டப்பிரிவு 83.

    ஜனாதிபதியால் மக்களவையை கலைப்பது தொடர்பான பிரிவு 85.

    மாநிலத்தின் பதவிக் காலம் தொடர்பான பிரிவு 172 சட்டமன்றங்கள்.

    மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174.

    மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 356 ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

    `ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் ஒரே நேரத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

    முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

    2-ம் கட்டமாக, பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

    2-ம் கட்ட தேர்தல் முதல் பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும்.

    அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்கும்.

    நாடு முழுவதும் விரிவான பிரசாரம் நடக்கும். இதனால் 5 வருடத்திற்கு ஒரு முறை அந்த 3 மாத காலம் மட்டும் தேர்தல் காலமாக இருக்கும். ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அமலாக்கக் குழு அமைக்கப்படும்.

    தேர்தல் செலவுகள் இதன் மூலம் குறையும். அதேபோல் தேவையில்லாத பிரசார செலவுகளும் இதன் மூலம் குறையும். கடந்த மார்ச் மாதம் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த தேர்தல் முறை கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் இது தொடர்பாக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர்.

    தேர்தல் முடிந்த பின் மாநில அரசு திடீரென கவிழ்ந்தால் என்ன ஆகும்?

    தேர்தல் முடிந்த பின் மத்திய அரசு கவிழ்ந்தால் என்ன ஆகும்?

    ஒரு சில மாநிலங்களில் மட்டும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?

    இப்போது சமீபத்தில் தேர்தல் நடந்த மாநிலங்களில் ஆட்சி நீடிக்கப்படுமா, கவிழ்க்கப்படுமா?

    சட்டமன்றங்கள், மாநில சட்டமன்றங்களை கலைப்பது தொடர்பான சட்டப்பிரிவு 174-ல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும். ஆனால் அப்படி செய்தால் மாநிலங்களின் உரிமை நீக்கப்படும் என்ற கேள்வி எழும்.

    இதனையெல்லாம் சரிசெய்து இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர சுமார் 10 ஆண்டுகளாகும் அதாவது 2034-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது இந்த திட்டம் நடைமுறைக்கு வரலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

    அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டாலும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டம் 2034-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

    அதற்காக, அரசியலமைப்பு (129-வது திருத்த மசோதா), 2024, அரசியலமைப்பில் 82A (பிரிவு 82-க்குப் பிறகு) நுழைக்க முன்மொழிகிறது, இது மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, ஜனாதிபதி அறிவிப்பை வெளியிடுவார் என்று குறிப்பிடுகிறது.

    மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்வதே அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனினும் சில சூழல்களில், மக்களவையுடன் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கும் பிரிவும் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

    அந்த மசோதாவின் பிரிவு 2 உட்பிரிவு 5-இன்படி, மக்களவைத் தேர்தலுடன் எந்தவொரு சட்டசபைக்கும் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கருதினால், அந்த சட்டசபைக்கு மாற்று தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார்.
    • இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு

    பாராளுமன்ற மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களில் உள்ள 4,120 சட்டசபை தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட் டுள்ளது.

    இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அமைத்தது. இந்தக் குழு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையை மத்திய மந்திரிசபை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024-வை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் 12 மணிக்கு மேல் தாக்கல் செய்தார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மத்திய சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்த பிறகு, இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கூட்டுக்குழு பரிசீலனையின் போது அனைத்துக் கட்சிகளும் விரிவாக கருத்து கூறலாம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், கூட்டுகுழுவுக்கு அனுப்ப ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 எம்.பி.க்களும் வாக்களித்தனர். எனவே பெரும்பான்மை வாக்குப்படி மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவானது.

    இந்நிலையில், ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பும் வாக்கெடுப்பு தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர்.

    ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    • 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்த மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

    நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், முன்னாள் மக்களவைச் செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழு, 2024 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது. இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கையை உருவாக்குவதற்கு மத்திய அரசு ரூ.95,344 செலவிட்டதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்தியா டுடே சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

    ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு 194 நாட்களில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அப்படியென்றால் ஒருநாளைக்கு 491 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

    கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் உறுப்பினர்கள் கவுரவ அடிப்படையில் அறிக்கைக்கு பங்களித்ததாக அரசு தெரிவித்துள்ளது.

    ×