என் மலர்
நீங்கள் தேடியது "சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்"
- 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவனத்தில் தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்து கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
- பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
- போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யவதாக குற்றச்சாட்டு.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஒரு பிரிவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.
- அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?
போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் மு.க.ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. குற்றச்சாட்டு
- போராட்டம் நடத்த போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய போலீசார், தொழிலாளர்களை கைது செய்தனர்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்கர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
* பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன்வந்துள்ளது.
* சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.
* அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும். உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம்.
* தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு.யின் பதிவு குறித்து கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு. இந்த பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
* வீடு புகுந்து கை செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கம் இல்லை.
* சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
* சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாக பார்க்கவில்லை.
* தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறை கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும்போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறைதான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.
* பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
- சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றனர்.
சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள தொழிலாளர்களை திமுக கூட்டணி தலைவர்வர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், "
சாம்சங் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது.
சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்" என்றார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்" என்றார்.
மேலும் அவர்கள், "அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பிரச்சினை தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமானது அல்ல.
காஞ்சிபுரம் காவல்துறை, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. காஞ்சி காவல்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது. தெழிாலளர்களின் கோரிக்கைகளளை ஏற்க மறுப்பது ஏன் ? தொழிலாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
சாம்சங் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
- தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி சம்பள உயர்வு. சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசே தொழிலாளர்களை போராட விடு என்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அணுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு" என்று பதிவிட்டுள்ளார்.
- பேருந்தில் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளனர்.
- கூட்டணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காமல் அராஜக ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.
அது மட்டுமின்றி சம்பள உயர்வு. சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "அண்ணாவின் மண்ணில் அந்நியர் நலன் காக்கும் அரசின் கொடுஞ்செயல்கள். இரவோடு இரவாக காவல்துறையினரை வைத்து போராடி வந்த தொழிலாளர்கள் கைது. வருவாய்த்துறையினரை வைத்து போராட்ட பந்தல்கள் அகற்றம்
கூட்டணி இயக்க தலைவர்கள் போராட்டத்தில் பங்குபெற்றிட கூடாது என்பதற்காக கார்ப்பரேட்களின் கைக்கூலியான திமுக அரசு கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளது.
போராடுபவர்களை அழைத்து பேசாமல் போலியானவர்களை அழைத்து பேசிவிட்டு போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என முதலமைச்சர் நியமித்த அமைச்சர்கள் குழு பேட்டி அளித்திருப்பது நியாயமா?
முதலமைச்சரும் அமைச்சர்களும் கார்ப்பரேட்டிற்கு விலைபோகி விட்டதை உணர்த்தும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு இருந்தது.
உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களை மாவோயிஸ்டுகள் என அடையாளப்படுத்த அரசு துணிந்திருப்பது பாசிசத்தின் உச்சம்!
பேருந்தில் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளனர். தொழிலாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி இருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்திற்கு பந்தல் அமைத்தவர்கள் முதல் தேநீர்,உணவு வழங்கியவர்கள் என அனைவரையும் இந்த பாசிச அரசு மிரட்டியுள்ளது.
சங்கம் அமைக்க கூடாது என்ற சாம்சங் நிறுவனத்தின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டு விட்டாரா?
போராட்டங்கள் தொடர்வதை தாங்கி கொள்ள முடியாத 'கார்ப்பரேட்களின் நண்பன்' ஸ்டாலின் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறை செய்கிறார்.
கூட்டணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காமல் அராஜக ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.
சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள். கரைந்து கொண்டிருக்கும் தொண்டர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது.
- தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில், நிர்வாகத்தினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு, தன்னுடைய அதிகார பலத்தின்மூலம் தொழிலாளர்களை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைக்கப் பார்க்கிறது. போராடுவது என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை ஒடுக்க நினைப்பது தொழிலாளர் விரோதப் போக்கு. அவர்கள் பெற்ற உரிமையை பறிக்கும் செயல் ஆகும்.
தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
- இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
சென்னை:
ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி மஞ்சுளா முன்பு மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
- தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.