என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்"
- சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ததாக சி.ஐ.டி.யு. குற்றச்சாட்டு
- போராட்டம் நடத்த போடப்பட்டிருந்து பந்தலை அகற்றிய போலீசார், தொழிலாளர்களை கைது செய்தனர்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்கர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
* பேச்சுவார்த்தை காரணமாக சாம்சங் நிறுவனம் பல்வேறு கோரிக்கைகளை ஏற்க முன்வந்துள்ளது.
* சம்பளத்துடன் சிறப்பு ஊக்கத்தொகை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணிக்காலத்தில் தொழிலாளர்கள் உயிரிட நேர்ந்தால் சிறப்பு நிவாரணத் தொகை ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.
* அனைத்து தொழிலாளர்கள் சென்று ஏ.சி. பேருந்து வசதி செய்த தரப்படும். உணவு உள்ளிட்ட பல்வேறு வசிதிகள் மேம்படுத்த சாம்சங் நிறுவனம் சம்மதம்.
* தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு.யின் பதிவு குறித்து கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சி.ஐ.டி.யு. இந்த பேராட்டத்தை கைவிடுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
* வீடு புகுந்து கை செய்யப்படவில்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணையில் வந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் ரிமான்ட் செய்யவில்லை. அரசுக்கு அந்த நோக்கம் இல்லை.
* சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்தில் நிறுவனங்கள் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை நிலவுகிறது.
* சிஐடியு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக பார்க்கவில்லை. நாங்கள் அதை விரோமாக பார்க்கவில்லை.
* தொழிலாளர்களுக்கு எதிராக அடக்கு முறை கையாளவில்லை. அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தப்படும்போது எந்த அரசும் எடுக்கும் நடைமுறைதான் எடுக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அந்த நடைமுறையை எடுத்துள்ளது. இந்த இடங்களில் உள்ள பல நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை தொழிலாளர் துறை பதிவு செய்துள்ளது.
* பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்ப்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
- உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள்விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் விடியா திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?
போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, "நானும் தொழிலாளி" என்று மேடையில் மட்டும் முழங்கும் மு.க.ஸ்டாலினுக்கு சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பந்தலை போலீசார் அகற்றிய நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்.
- போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கைது செய்ய முயற்சி செய்யவதாக குற்றச்சாட்டு.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி சம்பள உயர்வு, சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களில் ஒரு பிரிவினருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஒரு பிரிவினருடன் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில்தான் நேற்றிரவு போலீசார் போராட்ட பந்தலை அகற்றினர். இன்று காலை போராட்டத்திற்கு கலந்து கொண்ட தொழிலாளர்களை கலைந்த செல்ல வற்புறுத்தினர். அத்துடன் அவர்கள் இழுத்து கைது செய்ய முயற்சித்தனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகளை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து போலீசார் முயற்சி செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி அவசர ஆட்கொணர்வு வழக்காக விசாரிக்க வலியுறுதியுள்ளார். பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் பாலாஜி மற்றும் வேல்முருகன் அமர்வு தெரிவித்துள்ளது.
- 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவனத்தில் தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்து கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருகிறது. வன்மையான கண்டனங்கள். #Samsung #SamsungWorkers #SamsungStrike #WorkersRights #CITU @cmotamilnadu @kbcpim pic.twitter.com/YxOyuFxec1
— CPIM Tamilnadu (@tncpim) October 8, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்