என் மலர்
நீங்கள் தேடியது "நெல்லை மழை"
- நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
- தண்டவாளங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் ரெயில்கள் இயக்க முடியாத நிலை.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினத்தில் இருந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. கோவில்பட்டியில் எங்கு பார்த்தாலும் மழை வெள்ளமாக உள்ளது.
இதனால் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியிலும் குளம்போல் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை- நெல்லை, நெல்லை- சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிஜாமுதீன்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் விரைவு ரெயில் ஆகியவை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சாத்தூர் ரெயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் ரெயில் பயணிகள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
- அம்பாசமுத்திரத்தில் அதிகபட்சமாக 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
- மணிமுத்தாறில் 31.70 செ.மீட் மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலியின் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று காலை 4.30 நிலவரப்படி 41.66 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறில் 31.70 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
தற்போதும் மழை பெய்து வருவதால் அம்பையில் உள்ள மணிமுத்தாறு அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 86.66 அடி உயரமாக இருந்த நிலையில், ஒன்று ஒரே நாளில 108.8 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு தற்போது 17 அயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் 143.6 அடி உயரம் கொண்டி கரையாறு அணையில் 133 அடி உயரமாக நீர்மட்டம் உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த மூன்று அணைகளும் விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதாவது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த மூன்று அணைகளிலும் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 80 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளிக்கின்றன. சாலைகள், தெருக்களில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதுபோல் ஓடுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்துள்ளது.
காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84.5 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்செந்தூரில் 66.9 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 60.70 செ.மீ. மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், பாளையங்கோட்டையில் 42.0 செ.மீ. மழையும, அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
பாளையங்கோட்டை - திருநெல்வேலி ?#Tirunelveli #TNRains #TirunelveliRains pic.twitter.com/VP537AaDP4
— S.Muthu Saravanan ME BJP (@SMuthuSaravana4) December 18, 2023
100'ft Overwhelming rain.manimuthar dam @CMOTamilnadu @MMathiventhan @supriyasahuias @TANGEDCO_SE_TIN @Collectortnv @atree_org @ChennaiRains @RainStorm_TN @ChennaiRmc @lovelyweather_ @narayananweath1 @praddy06 @Rajani_Weather @WeatherRadar_IN @BBC_Travel @AnandaVikatan pic.twitter.com/u5j7mBwCNc
— manjolai selvakumar 0+ (@Mselvak44272998) December 18, 2023
Unprecedented rainfall since Saturday night has hit normal life in Tirunelveli district and, according to the forecast from the Indian #Tirunelveli #TNRains #Rain #Kanniyakumari #Tenkasi #RainAlert #HeavyRainFall #HeavyRain #Kanyakumari #TNRains #SouthernDistrict pic.twitter.com/6T3c0S1pcC
— Apna Rashtra News (@apnarashtranews) December 17, 2023
Around 5 pm there was a landslide beside the Railway bridge across Azhaganeri railway gate. Due to which all the trains were allowed with very minimal speed. Railway inspection team is on site to look on it. #Nellairains #StaySafe #Tirunelveli @thinak_ pic.twitter.com/QkVf4XdHYT
— தேசாந்திரி (@NelsonDevdas) December 17, 2023
குற்றாலம் மெயின் அருவி !#Tirunelvelifloods #Tirunelveli pic.twitter.com/HmAZmg0kxW
— பிரபாகரன் ! (@Xexs_) December 17, 2023
Senior IAS officer R Selvaraj and #Tirunelveli Collector Dr K P Karthikeyan inspected Tirunelveli Medical College Hospital #NellaiRain pic.twitter.com/7baqpsh1ZY
— Thinakaran Rajamani (@thinak_) December 18, 2023
@praddy06 #NellaiRain #Tirunelveli @ChennaiRains @chennaiweather Gandhimathi Nager, Tirunelveli town pic.twitter.com/2S62gJ3iDO
— Ramu (@rammin_s) December 18, 2023
- மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
- நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் - நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து நேற்று முதல் அமைச்சர்களுடனும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும் - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 18, 2023
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள்,… pic.twitter.com/FIvNhf52ce
- தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்துவருதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை செல்கிறார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
- ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
நெல்லை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று (திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கிறது. நேற்று பகல் முழுவதும் 3 மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.
இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் அதிக கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து 2 நாட்களாக சுமார் 30 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணை பகுதிகளிலும் கனமழை பெய்வதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
பாபநாசம் பாணதீர்த்த அருவியில் இருந்து காட்டாற்று வெள்ளம் வெளியேறுவதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சுமார் 32,000 கனஅடி நீர் பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. இது தவிர மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியை கடந்து இருப்பதால் அந்த அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மேலும் கடனா அணையில் இருந்து 4500 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்போது 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. அங்கு இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலம் ஆகியவற்றை தொட்டபடி வெள்ளம் செல்கிறது.
இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தண்ணீர் புகுந்து உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கும் பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் செல்ல முடியாத வகையில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
மாநகரப் பகுதியில் மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாறுகால்களில் அடைப்பு, சாலையோர ஆக்கிரமிப்புகள் உள்ளிட்டவற்றின் காரணமாக மழை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் கழுத்து அளவுக்கு தேங்கி நிற்கிறது.

நெல்லை மாநகரப் பகுதியில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கிறது. பழைய பேட்டையில் தொடங்கி வழுக்கோடை, தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலை, டவுன் ரத வீதிகள், நெல்லையப்பர் கோவிலை சுற்றி அமைந்து உள்ள தெருக்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வழுக்கோடை பகுதியில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அங்கும் காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் ஓடுகிறது. காட்சி மண்டபம், கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகள் தீவுகள் போல் காட்சி அளிக்கிறது.
இதுபோல் எஸ். என். ஹைரோட்டில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. சந்திப்பு பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சந்திப்பு மீனாட்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், சி.என். கிராமம், தச்சநல்லூர், சிந்து பூந்துறை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், ரஹ்மத் நகர், தியாகராஜ நகர், மகாராஜா நகர், அன்பு நகர், பொதிகை நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
ஒரு சில இடங்களில் பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், கால்வாய் நிரம்பி வழிவதாலும் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான காம்பவுண்டுகளில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முகாம்களில் மீட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். டவுன் குறுக்குத் துறையில் இருந்து கருப்பன் துறை வழியாக மேலப்பாளையத்துக்கு செல்லும் தரைப்பாலம் மூழ்கி விட்டது.
தீயணைப்புத் துறையினரும் மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளம் புகுந்த வீடுகளில் தத்தளிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்பணி கரிசல்குளம், பேட்டை, திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை குளத்தில் இருந்து வெளியேறும் நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக நெல்லை மாநகராட்சி முழுவதுமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இன்று காலை முதல் மாநகரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்களின் பாடு மேலும் திண்டாட்டமாகி வருகிறது.
இன்று காலை 7 மணி நிலவரப்படி மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 60 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. அதற்கு அடுத்த படியாக பாளையில் 42 செ.மீ., அம்பாசமுத்திரத்தில் 41 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. சேரன்மகாதேவியில் 40 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
நெல்லை புதிய பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வேய்ந்தான் குளமும் நிரம்பி விட்டதால் பஸ் நிலையத்தில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லையிலிருந்து மற்றும் கன்னியாகுமரியில் இருந்து வடக்கு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பெரும்பாலான பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியிலும் இயங்கி வரும் பஸ்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1200 குளங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் கடந்த 2 நாட்களில் பெய்த மழையின் காரணமாக நிரம்பும் தருவாயில் இருக்கிறது. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வயல்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் நாற்றுகளை மூழ்கடித்தபடி தேங்கிக் கிடக்கிறது.

மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, கூடங்குளம், உவரி உள்ளிட்ட கட லோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கூட்டப்பனை கூடுதாழை மற்றும் 9-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ரெட் அலர்ட் எச்சரிக்கையில் இருந்து மஞ்சள் அலர்ட்டுக்கு மாறி உள்ளது. இதனால் இன்று காலை சற்று மழை குறைந்துள்ளது. எனினும் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்த வண்ணம் உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை காரணமாக ஒரு சில அணைகளை தவிர மற்ற அனைத்து அணைகளும் நிரம்பி விட்ட நிலையில் குளங்கள் உள்ளிட்டவற்றுக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது 2 நாட்களாக பெய்து வரும் அதிக கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளிலும் வெளியேறும் தண்ணீர் சிற்றாறு கால்வாய் மூலமாக குளங்களை வேகமாக நிரப்பி வருகிறது.
ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் மேலாக குளங்கள் நிரம்பிய நிலையில் தற்போது பெய்த மழையால் இதுவரை பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த குளங்கள் கூட ஒரே நாள் இரவில் பெய்த மழையால் நிரம்பிவிட்டன. தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது.
இதேபோல் சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், சுரண்டை, கடையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்புவதோடு காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடுகிறது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 நாட்களாக கொட்டி தீர்க்கும் மழையின் காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் நிரம்பாத பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து உள்ளது. காயல்பட்டினம் பகுதியில் மட்டும் இன்று காலை நிலவரப்படி சுமார் 93 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அங்கு அதிக அளவு மழை பொழிந்து உள்ளது.
இதேபோல் திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. அங்கும் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து உள்ளது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 69 செ.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் 49 செ.மீ., சாத்தான்குளத்தில் 46 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து அதிலிருந்து பொதுமக்கள் தற்போது மீண்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை மேலும் சிரமம் அடைந்துள்ளது. மாநகர பகுதி முழுவதும் தீவு போல் காட்சியளிக்கிறது.
ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.
3 மாவட்டங்களிலும் கிராமங்கள் தனித்தனி தீவாக மாறி விட்டதால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று முடங்கி போனது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் தகவல் தொடர்பையும் மக்கள் இழந்துள்ளனர்.
இதனால் மக்களை மீட்க முப்படைகளும் உதவிக்கு விரைந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் தலைமையில் தீவிர ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
- 4 மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு தொடங்கி இந்த மாவட்டங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று வரை நீடித்தது.
இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர பகுதியில் உள்ள சாலைகள், தெருக்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுத்து வரும் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
- கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கட்டுக்கடங்காத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
- இதன் காரணமாக ஊருக்குள் வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்தன. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் கலெக்டர் அலுவலகம், ஜங்ஷன், ரெயில் நிலையம் சாலை போன்று ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளை மழை வெள்ளத்துடன் தாமிரபரணி ஆற்று நீரும் சேர்ந்து மூழ்கடித்தன. இதனால் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
மீட்புப்படையினர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளனர். திருநெல்வேலி புறநகர் பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் சென்றது.
இந்த நிலையில் நேற்றிரவு முதல் மழை குறைந்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் செல்லும் வெள்ளத்தின் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.
நேற்று காலை ஆற்றை மூழ்கடித்து சென்ற வெள்ளம் இன்று சுமார் 15 அடி குறைந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை சந்திப்பு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது.
இன்று கனமழை பெய்யாவிடில், மாலைக்குள் நீர் வடிந்துவிடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பல இடங்கள் தீவு போல் மாறியுள்ளது. அந்த இடங்களில் இருந்து மீட்புப்படையினர் படகு மூலம் மக்களை வெளியேற்றினர். இரவு பகலாக மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
- கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
- மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது:-
* நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
* மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
- வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.
- வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
- ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
* சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும். சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தான் எப்போதும் அறிவிக்கிறார்கள்.
* உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வருகிறது. இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது.
* வானிலை ஆய்வு மையத்தை நவீனப்படுத்த வேண்டும்.
* காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
* மத்திய அரசு நிவாரண நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும்.
* நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் பார்க்கக்கூடாது.
* மீட்பு, நிவாரண பணிகளை அமைச்சர்கள் விரைவுப்படுத்த வேண்டும்.
* ரூ.6000 வெள்ள நிவாரண நிதி நிச்சயம் போதாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
- உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.
நெல்லை:
நெல்லையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து சேத விவரங்கள் கணக்கீடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் செல்கிறது. ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.