என் மலர்
நீங்கள் தேடியது "ஜி.ராமகிருஷ்ணன்"
- அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
- விஜய், பொருளாதார கொள்கை குறித்து பேசவில்லை.
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. தமிழகத்தில் பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்க விஜய்க்கு உரிமை உள்ளது. திராவிடம் குறித்து பேசும் விஜய், பெரியார் உட்பட தலைவர்களின் கட்அவுட்களையும் பயன்படுத்தியுள்ளார்.
மக்கள் வாழ்வாதார பிரச்சனையான, பொருளாதாரம் குறித்து பேசுவது அவசியம். அதை தீர்மானிப்பது அரசியல் கட்சியின் பொருளாதார கொள்கை. ஆனால் விஜய், பொருளாதார கொள்கை குறித்து பேசவில்லை. அவரது பொதுக்குழு கூட்டத்திலும் ஒரு வார்த்தைகூட இடம்பெறவில்லை. இதுகுறித்து விஜய் விளக்க வேண்டும். அதன்பிறகே அவரின் இயக்கம் குறித்து கூற முடியும்.
மத்தியில் பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். அதனடிப் படையில்தான் இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது.
- அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
கோவை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது.
மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொடக்க நிகழ்ச்சியாக கோவையின் வரலாற்றை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சியை அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் திறந்துவைத்தார்.
பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதிகளை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. தனது சொந்த காலில் நிற்க முடியாமல் பிற கூட்டணி கட்சிகளை சார்ந்து தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைவந்துள்ளது.
பா.ஜ.க. அரசு பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத கொள்கையை கடைபிடிக்கும் அரசாகவும் உள்ளது. பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது.
பாசிசத்துக்கும், பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ஆட்சியை பிடித்தால் என்ன செய்வார் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு கம்பெனிக்கு வொர்க்பிரம் ஹோம் பண்ணலாம். அரசியலில் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து உழைப்பாளர் பேரணியும், மசக்காளிபாளையத்தில் பொதுக்கூட்டமும் நடந்தது.
- மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான்.
- மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக அரசு இருமொழி கொள்கையை கடைபிடிப்பது என்பது மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வந்த பிறகு நடைபெறவில்லை. காமராஜர், அண்ணா காலங்களில் இருந்து தற்போது வரை இருமொழி கொள்ளை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை திணிக்கவும், இந்தி பேசுகிற மாநிலங்களில் சமஸ்கிருத்தை திணிக்கவும் மும்மொழி கொள்கையை கொண்டு வர நினைக்கிறது. மொழி மூலம் பிரிவினையை உருவாக்குவது மாநில அரசு அல்ல, மத்திய அரசுதான். எனவே, மும்மொழி கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி கொடுத்துவிட்டு, கேரளா மற்றும் தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காதது பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களை தண்டிப்பது போன்றதாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முரணாக உள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது எதற்கு? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.