என் மலர்
நீங்கள் தேடியது "கேஎல் ராகுல்"
- கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
- தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 24 அன்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது.
அண்மையில் தான் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் முதல் போட்டியில் டெல்லி அணியின் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் விளையாடவில்லை.
இந்நிலையில், தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார். இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பேட்டிங் ஸ்டைலை கே.எல்.ராகுல் ரீக்ரியேட் செய்த விடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கெவின் பீட்டர்சன் போலவே கே.எல்.ராகுல் மிமிக்ரி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
- லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 14 சீசன்களாக 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் 15-வது சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.
2022-ம் ஆண்டில் குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வென்றது. லக்னோ அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 2023-ம் ஆண்டு குஜராத் 2-வது இடத்தையும் லக்னோ அதே 3-ம் இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டு லக்னோ 7-வது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெற்றி பெற்ற டாப் 5 அணிகளில் லக்னோ அணி 4-வது இடத்தில் உள்ளது.
2022ல் அறிமுகமான லக்னோ, தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2022, 2023) பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. 2024-ல் சற்று பின்தங்கினாலும், 44 போட்டிகளில் 24 வெற்றிகளுடன் 55.81% வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன்களாக களமிறங்கிய அனைவரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். அதன்படி 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
அதேபோல் 2023-ம் ஆண்டு மற்றொரு கேப்டனான குர்ணால் பாண்ட்யாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். இது புதுவிதமான சாதனையாக உள்ளது.
- கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
- இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார்.
- கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
தற்போது கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை பிறந்துள்ளதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை களமிறங்கிய உள்ளார்.
- மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்கத்தில் சில போட்டிகளை ராகுல் தவறவிடுகிறார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பதவியை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு வீரராக அணிக்கு பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்க போட்டிகளை தவறவிடுகிறார். இதனையடுத்து அக்ஷர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கேல் ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்-க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடுவரிசையை சமாளிக்க கேஎல் ராகுல் அந்த வரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை இந்திய அணிக்காக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கே.எல். ராகுல் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
- ஐபிஎல் போட்டி தொடங்கும்போது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
தற்போது அவரது மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. வெற்றி சந்தோகத்தில் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Oh, Baby! எனப் பதிவிட்டுள்ளார்.
குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், கேப்டன் பதவியை நிராகரித்து ஒரு வீரராக விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் 4-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்று பிறந்தநாள்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரையிறுதியில் இந்திய அணி இடம் பெற நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
இதனால் 2007-க்குப்பின் 2-வது உலக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் சொதப்பிய ராகுல் 4-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.
இந்நிலையில் இன்று அவரது காதலியான அதியா ஷெட்டிக்கு இன்ஸ்ட்கிராமில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் (ஜோக்கர் பொம்மை போடப்பட்டுள்ளது) நீ அனைத்தையும் சிறப்பாய் மாற்றிவிட்டாய் என பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது.
- டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும்.
சென்னை:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது. எனினும் இந்தியா மீதான விமர்சனங்கள் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. இந்திய அணியில் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை மாற்ற வேண்டும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்று ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வினே தற்போது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியதாவது:-
டி20 கிரிக்கெட் என வரும்போது, வெற்றி தோல்விகள் மிகவும் சிறிய ரன் வித்தியாசத்தில் தான் இருக்கும். ஒரே ஒரு பந்தில் தோற்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் வெற்றி பெறலாம். இதனை விட முக்கியமான ஒன்று பவர் ப்ளே.
நிறைய போட்டிகளின் முடிவு பவர் ப்ளேவிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர் ப்ளேவின் முடிவில் 30 ரன்கள் அடித்து, எதிரணி 60 ரன்களை அடித்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது. ஆனால் பவர் ப்ளே தான் ஆட்டத்தை தீர்மானிக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மையாக உள்ளது. பரிசோதனை செய்து பார்ப்பதற்கு டி20 கிரிக்கெட்டில் நிறைய இடங்கள் உள்ளன. ஆனால் முக்கியமான போட்டிகளில் நம் பலத்தை அறிந்து முழுமையாக அதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவை அனைத்துமே இந்திய ஓப்பனர்கள் ரோகித் - கே.எல்.ராகுலை குறிக்கின்றன. இந்த தொடரின் பவர் ப்ளேவின் மிகவும் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருந்த 4வது அணி இந்தியா ஆகும் (95.85 ). 9 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி தான் சென்றுள்ளது. அதாவது ரோகித் , கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு பந்திற்கு ஒரு ரன்னிற்கும் குறைவாக அடித்துள்ளனர்.
ரோகித் - கே.எல்.ராகுல் ஜோடி மொத்தமாக 6 போட்டிகளில் 88 ரன்களை மட்டுமே அடித்தனர். அவர்களின் சராசரி பார்ட்னர்ஷிப் 14.66 ரன்கள் மட்டுமே ஆகும். அரையிறுதியில் இந்தியா 38/ 1 என இருக்க, இங்கிலாந்து அணி 66/1 என வலுவான நிலையில் இருந்தது. இதனை தான் அஸ்வின் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
- ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் தவான் ஒருநாள் அணி கேப்டனாக பணியாற்றியுள்ளார்
- கே.எல். ராகுல் அணிக்கு திரும்பியதால் தவானிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது
இந்திய அணியின் தொடக்க இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.
மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்படும்போது ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பின் ஜிம்பாப்வே தொடருக்கான அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜிம்பாப்வே தொடர் தொடங்கும் நிலையில் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதால் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடரின்போது கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தவான் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:-
நீங்கள் நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்த நிலையில் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேப்டன் பதவியும், அதன் சவால் பற்றியும் நான் சிறப்பாக உணர்கிறேன். இளம் வீரர்களை கொண்ட அணியுடன் நாம் சில சிறந்த தொடர்களை வென்றுள்ளோம்.
ஜிம்பாப்வே தொடரின்போது, மெயின் அணியின் துணைக் கேப்டனான கே.எல். ராகுல் மீண்டும் விளையாட வரும்போது, அவர் ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறார் என்ற உண்மையை நான் கவனத்தில் கொண்டேன். ஆசிய கோப்பையின்போது ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டால், கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட கேட்டுக் கொள்ளப்படுவார். ஆகவே, ஜிம்பாப்வே தொடர் அவருக்கு சிறந்த பயிற்சியாக இருந்திருக்கும்..
அதனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. எது நடந்தாலும், அது சிறப்பானவைக்காக நிகழும் என நினைப்பேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்கான கேப்டனை தேர்வு செய்யும்போது, எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தனர். நான் ஒருபோதும் மோசமானதாக உணர்ந்தது இல்லை'' என்றார்.
- மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
- இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார்.
காதலியை கரம்பிடிக்கும் கேஎல் ராகுல்- திருமணம் தேதியை சூசகமாக அறிவித்த சுனில் ஷெட்டிபிரபல பாலிவுட் வில்லன் நடிகரின் மகளை காதலித்து வரும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்து வருபவர் கே.எல்.ராகுல். கர்நாடகாவை சேர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு காதல் வதந்திகளில் சிக்கி உள்ளார். கே.எல்.ராகுல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வால் உடன் டேட்டிங் செய்து வந்தார். இதைவைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவின. பின்னர் ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து கே.எல்.ராகுல் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியுடன் நெருங்கி பழகி வந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சுனில் ஷெட்டியின் மகள் தான் அதியா ஷெட்டி. கே.எல்.ராகுல் உடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, அவருடன் ஜோடியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த அதியா ஷெட்டி, கடந்த ஆண்டு தங்கள் இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.
இந்நிலையில், தற்போது இந்த ஜோடியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அதியா ஷெட்டி - கே.எல்.ராகுல் ஜோடியின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் தான் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.
இதுகுறித்த சூசகமான அறிவிப்பை நடிகர் சுனில் ஷெட்டியும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். பட விழா ஒன்றில் கலந்துகொண்ட சுனில் ஷெட்டியிடம் உங்கள் மகளின் திருமணம் எப்போது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் மூன்று மாதங்களில் திருமணத்திற்கு உங்களை அழைப்பேன் என நினைக்கிறேன் என கூறி இருக்கிறார். இதன்மூலம் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் ஜனவரி மாதம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 186 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்கா:
இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.
ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வேகமாக ஓடிச்சென்றார். அவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்ச் தவறவிட்டதை தொடர்ந்து, அதிரடியை தொடர்ந்த ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஹசன் மிர்சா - ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும், கேட்சை தவறவிட்ட கே.எல்.ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
- ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
- 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்
வங்கதேசத்துக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 -0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய அந்த அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய கிரிக்கெட் வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்து சென்றனர். அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் நங்கூரமாக நின்று வெற்றிக்குப் போராடினார். அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.
அதை பயன்படுத்திய ஹசன் 38* (39) ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று நிறைய ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால் பேட்டிங்கில் 200 ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் அவர் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்.
சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள். அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார். ஆனால் உண்மையாக இந்தியா 80 - 70 ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்.
ஏனெனில் ஓவருக்கு வெறும் 4 ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும். சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே 70 - 80 ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும் என்று கூறினார்.
அவர் கூறியதை கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் முடிவில் ஒப்புக்கொண்டார். சொல்லப்போனால் சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் இதே வங்கதேசத்துக்கு எதிராக எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸை அற்புதமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்த ராகுல் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இப்போட்டியில் கூட பேட்டிங்கில் 73 ரன்கள் எடுத்த அவர் நீண்ட நாட்களுக்கு முதல் முறையாக விக்கெட் கீப்பிங் செய்ததால் துரதிஷ்டவசமாக கேட்ச்சை தவற விட்டார் என்பதால் தோல்விக்கு அவர் மட்டும் காரணமல்ல என்பதே நிதர்சனம்.