என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் 2024"

    • மிட்செல் மார்ஷ், மார்கிராம் அரைசதம் அடித்தனர்.
    • ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2025 தொடரின் 16ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீ்ச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 27 பந்தில் அரைசதம் விளாசினார். 5.3 ஓவருக்குள் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 6 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். ரிஷப் பண்ட்-ஐ 2 ரன்னில் வெளியேற்றினார்.

    மார்கிராம் மெல்லமெல்ல ஆட்டத்தில் வேகத்தை கூட்டி 38 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். இவரது விக்கெட்டையும் ஹர்திக் பாண்ட்யாதான் கைப்பற்றினார். ஆயுஷ் படோனி 19 பந்தில் 30 ரன்கள் அடித்தார்.

    கடைசி ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த டேவிட் மில்லர் 14 பந்தில் 27 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ 19.3 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.

    4ஆவது பந்தில் டேவிட் மில்லரும், 5ஆவது பந்தில் ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட் வீழ்த்தினார். கடைசி பந்தில் வைடு உடன் 3 ரன்கள் விட்டுக்கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 203 ரன்கள் குவித்தது.

    • கொச்சியில் டிசம்பர் 23-ந்தேதி மினி ஏலம் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவிப்பு
    • கிறிஸ்துமஸ் விழாவிற்கு இரண்டு நாள் முன்னதாக இருப்பதால் அணிகள் கோரிக்கை

    ஐ.பி.எல். 2023 சீசனுக்கு மினி ஏலம் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கடந்த 15-ந்தேதிக்குள் விடுவிக்கப்படும், தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அதன்படி 10 அணிகளும் பட்டியலை வழங்கிவிட்டன. பெரும்பாலான அணிகள் வெளிநாட்டு ஸ்டாஃப்களை கொண்டுள்ளன. அவர்கள் மினி ஏலத்தில் கலந்து கொள்வார்கள். டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஏலம் நடைபெற இருப்பதால் அவர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

    இதனால் பெரும்பாலான அணி நிர்வாகம், மினி ஏலத்திற்கான தேதியை மாற்றம் செய்யும்படி பி.சி.சி.ஐ.யிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், பி.சி.சி.ஐ. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் இன்னும் 42.25 கோடி ரூபாய், பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 32.20 கோடி ரூபாய், லக்னோவிடம் 23.35 கோடி ரூபாய், மும்பையிடம் 20.55 கோடி ரூபாய், சென்னையிடம் 20.45 கோடி ரூபாய், டெல்லியிடம் 19.45 கோடி ரூபாய், குஜராத்திடம் 19.25 கோடி ரூபாய், ராஜஸ்தானிடம் 13.20 கோடி ரூபாய், பெங்களூரிடம் 8.75 கோடி ரூபாய், கொல்கத்தாவிடம் 7.05 கோடி ரூபாயும் உள்ளது.

    மெகா ஐ.பி.எல். ஏலம் இரண்டு நாட்கள் நடைபெறும். மினி ஏலம் ஒருநாள் நடைபெறும்.

    • ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
    • இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


    இதனை தொடர்ந்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • ஐபிஎல் தொடர் வருடம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
    • தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்காது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடர் வருடம் வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

    அடுத்த ஆண்டு இந்த மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருவதால் ஐபிஎல் தொடர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார்

    • இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
    • இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் மினி ஏலப்பட்டியலில் ஸ்டார்க் பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். ஆனால் தீவிர பயிற்சி மேற்கொள்ளவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் முக்கிய போட்டி தொடர்களில் விளையாடவில்லை. இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் உள்ளார். இந்த நிலையில் கொல்கத்தாவில் நடைபெறும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்கு ரிஷப் பண்ட் சென்றார். அவர் மற்ற வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை.

    இந்த நிலையில் டெல்லி அணியின் ஆலோசகரான சவுரவ் கங்குலி கூறும்போது, "ரிஷப் பண்ட் நல்ல நிலையில் இருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் விளையாடுவார். தற்போது அவர் பயிற்சி செய்யமாட்டார். வீரர்கள் ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் இருப்பதால் அவருடன் அணியை பற்றி விவாதித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.பி.எல். 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • வருகிற 26-ந்தேதிக்குள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என்பது இயல்பே. அதையெல்லாம் கடந்து செல்வதுதான் விளையாட்டின் இயல்பு. இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. தோல்வியில் இருந்து இன்னும் வெளியே வர முடியாத நிலையில், கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

    இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில்தான் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ந்தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது என்ற விவரத்தை நவம்பர் 26-ந்தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அணிகள் தங்களுடைய வீரர்களை பரஸ்பர மாற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த வகையில், அதிகாரப்பூர்வமாக லக்னோ சூப்பர் செயின்ட்ஸ் அணி ஆவேஷ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்கிறது. அதற்குப் பதிலாக தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெறுகிறது.

    டெல்லி அணி சர்பராஸ் கான், மணிஷ் பாண்டே ஆகியோரை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸை வெளியிட விரும்புகிறது. பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த பெரும் தொகையை தக்கவைத்துக் கொண்டு ஏலத்தில் வீரர்களை வாங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 2023 சீசனில் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இதைவிட மிகப்பெரிய செய்தி ஒன்று இணைய தளத்தில் உலா வருகிறது. அது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கிறார் என்பதுதான்.

    ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட்டபோது, புதிதாக ஏலம் விடப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்ட்யா குஜராத் லயன்ஸ் அணிக்கு சென்றார். ஹர்திக் பாணட்யா தலைமையில் குஜராத் அணி 2-வது இடம பிடித்தது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் அணியில் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக ஜாஃப்ரா ஆர்சர் அல்லது ரோகித் சர்மாவை கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வதந்தி செய்தியாக கூட இருக்கலாம்.

    தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுமே தங்களுடைய தலைசிறந்த கேப்டன்களை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    வருகிற 26-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்களை பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. தக்கவைத்துள்ளது என்பது தெரியவரும்.

    • 17-வது ஐ.பி.எல். தொடர் 2024, மார்ச் 23-ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • இதற்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டது. 17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதி முதல் மே 29 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடக்கிறது. அதற்கு முன்னதாக இன்றுக்குள் இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவிக்கப்படும் வீரர்கள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது.

    மேலும் டிரேடிங் முறையில் வீரர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி), ராஜஸ்தான் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கல் (ரூ.7.75 கோடி) லக்னோ அணிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சபாஷ் அகமது ரூ.2.4 கோடிக்கு ஐதராபாத் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் விலகியுள்ளார்.

    முன்னாள் கேப்டனான அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில்தான் அறிமுகம் ஆனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ஜோ ரூட்டை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். ஜோ ரூட்டின் இந்த முடிவை மரியாதையுடன் வரவேற்பதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தெரிவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் 2-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆவார். ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை குஜராத் அணி எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அந்த பதிவில் உங்கள் அடுத்த பயணத்திற்கு வாழ்த்துக்கள் ஹர்திக் பாண்ட்யா என தெரிவித்திருந்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் பெங்களூர் அணியில் இணைந்துள்ளார்.

    • குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் ஆர்சிபி அணிக்கு இணைந்துள்ளார்.

    இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு காலக்கெடு கொடுத்திருந்தது. இதனால், ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இதனையடுத்து குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட கேமரூன் கிரின் ஆர்சிபி அணிக்கு இணைந்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ள நிலையில் எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் ஒரு பதிவை பாண்ட்யா வெளியிட்டுள்ளார். அதில் இது பல அற்புதமான நினைவுகளைக் திரும்ப கொண்டுவருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரை முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பயிற்சி பெற்றது குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.


    • 10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அம்பதி ராயுடுவுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளத்தில் போஸ்டருடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் லெஜண்டரி சிங்கம், களத்தில் இருக்கும் போது தனது 100% திறமையை கொடுக்கத் தவறுவதில்லை. உங்கள் முன்னேற்றத்திற்கு நன்றி என பதிவிட்டிருந்தனர்.

    ×