என் மலர்
நீங்கள் தேடியது "TN Govt"
- அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
- வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
- தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான பணம் வந்து சேர்ந்து விட்டது. அதில் சுமார் ரூ.230 கோடியை குறைத்து விட்டார்கள்.
மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 120 கோடி நாம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1,876 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது.
இந்த ஆண்டிற்கு ரூ.2 ஆயிரத்து 300 கோடி கேட்டிருந்த நிலையில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.
இதுதொடர்பாக தமிழக அரசின் அடுத்தகட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர்.
அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே அதனை ஏற்கவில்லை. தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்ட குழு முடிவின் அடிப்படையில் தான் அது குறித்து முடிவெடுக்க முடியும்.
பிரதம மந்திரி மாதிரி பள்ளியில் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவார்கள். பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை. அனைவருக்கும் கல்வி தொடர்பான நமக்கு தர வேண்டிய நிதியை தான் நாம் அவர்களிடம் கேட்கிறோம்.
பாராளுமன்றத்தில் ஒரு திட்டத்திற்காக நிதியை ஒதுக்கி விட்டால் அதன் பிறகு அதற்கான நிபந்தனைகளை விதிப்பது சரியானது அல்ல. அது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
- மசோதாக்களை 2,3 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடுவதே வாடிக்கையாக உள்ளது என்று வாதாடினார்.
புதுடெல்லி:
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என். ரவிக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் கவர்னர் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்குகளைத் தொடுத்து உள்ளது.
இந்த விவகாரத்தில் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக கவர்னர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும், பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2023-ல் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது ஏன்? என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. அரசு-கவர்னர் மோதலால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் திரிவேதி வாதாடும்போது கூறியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது. அரசு அமைக்கும் தேடல் குழுவை கவர்னர் ஏற்க மறுக்கிறார். தனக்கு தான் நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது என செயல்படுகிறார்.
இது கல்வி நிலையங்களின் செயல்பாட்டை பாதிக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களில் கவர்னர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார்.
மத்திய அரசின் ஏஜென்டாக கவர்னர்கள் செயல்படக் கூடாது. அரசியலமைப்பு சட்டங்களின் விளக்கங்களை திரித்து கவர்னருக்கு தான் அரசியலமைப்பின் அனைத்து அதிகாரங்கள் உள்ளன என தவறான தகவல் வழங்கக் கூடாது. அவ்வாறு கவர்னருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினால், அது கூட்டாட்சியின் முடிவு ஆகும். தமிழகத்தில் கவர்னர் என்பவர் தன் விருப்பம் போல் செயல்படுகிறார். மசோதாக்களை 2,3 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடுவதே வாடிக்கையாக உள்ளது என்று வாதாடினார்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:-
மசோதா மறு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது தொடர்பாக விடை காண வேண்டும்.
மசோதா மாநில அரசால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் போது அதில் கவர்னர் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் அதன் மீது ஜனாதிபதி என்ன மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளலாம்?
நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை" என்று கவர்னர் கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்? மசோதாவுக்கு தான் ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் வரை, அவர் ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா? மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கவர்னர் கூறும்போது, எந்த காரணத்துக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறுகிறாரா? இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது, எந்த அடிப்படையில் கவர்னர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார்? அனைத்து மசோதாக்களையும் குடியரசு தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருக்கும் போது கவர்னர் 2 மசோதாக்களை மட்டும் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்தது ஏன்? என நாளை காலை விளக்கம் தர கவர்னருக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும்.
சென்னை:
1991 முதல் 1996 வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 1996-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களது வீட்டில் சோதனை நடத்தி சட்ட விரோத சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் ஜெயலலிதா வீட்டில் 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்ச்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் நகைகளில் மட்டும் விதவிதமான தங்க செயின்கள், வளையல்கள், தங்க கை கடிகாரங்கள், கடிகாரத்தின் தங்க வார்கள், தங்க தட்டுகள், தங்க கிரீடம் நெத்திச்சுட்டி, தங்க ஒட்டியானம், தங்க காசு மாலை, நெக்லஸ்கள் என 481 வகையான தங்க நகைகள் இடம்பெற்றிருந்தது.
இதில் தங்க ஒட்டியானம் 1.2 கிலோ, தங்க வாள் 1.5 கிலோ, தங்க கிரீடம் ஒரு கிலோ, 1, 600 கிராம் எடை கொண்ட தங்க எழுதுகோல், ஜெயலலிதா ஒரு குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற தங்க சிலை ஆகியவை மிகப் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றன.
அத்துடன் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாங்கி குவித்திருந்த 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட போது ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள நகைகள், சொத்து ஆவணங்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பிறகு மேல் முறையீடு வழக்கில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்து விட்டனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி ஜெ.தீபா, தீபக் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து ஜெயலலிதாவின் ரூ.60 கோடி மதிப்புள்ள 27 கிலோ தங்கம், வைரம், முத்து, மாணிக்கம், பவள நகைகள் மற்றும் 1,526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களை பெங்களூரில் நீதிபதி மோகன் முன்னிலையில் கடந்த 14-ந் தேதி தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவற்றை தமிழக உள்துறை இணை செயலாளர் ஆனி மேரி, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு விமலா, கூடுதல் சூப்பிரண்டு புகழ்வேந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நகைகள் 6 இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நகைகளை ஏலம் விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-
ஜெயலலிதாவின் நகைகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்துள்ளதால் கோர்ட்டு வழிகாட்டுதலின் படி ஏலம் விடும் நடவடிக்கைகள் தொடங்கும். லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் கலெக்டர் மேற்பார்வையில் வருவாய்த் துறையினர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்குவார்கள். இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் நடைபெறும்.
அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருந்தால் ஜெயலலிதாவின் நகைகள் விற்கப்படாமல், ரிசர்வ் வங்கி அல்லது அருங்காட்சியகத்தில் வைக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனால் இப்போது ரிசர்வ் வங்கி மூலமாகவோ அல்லது ஏலம் மூலமாகவோ பணமாக்கி கொள்ளலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் அதன்படி அரசு செயல்படும்.
கட்டிடங்கள், இடங்கள், நிலத்தை பொறுத்தவரை சிட்கோ, அல்லது டான்சி மூலம் அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது விற்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ மற்றும் வில்சன் எம்.பி. ஆகியோரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் பல ஏக்கர் நிலங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏலம் விடும் பணிகள் தொடங்கும்.
ஜெயலலிதா வழக்கை பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் இருந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கையாண்டு வந்துள்ளதால் அவர்களுடன் சேர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் கலெக்டர் மேற்பார்வையில் இவற்றை ஏலம் விடும் பணியை தொடங்குவார்கள் என தெரிகிறது.
இதை யார் மூலம் செயல்படுத்துவது என்பது பற்றி கோர்ட்டு தெளிவாக கூறி இருக்கும். அதன் நகலை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. இன்று அல்லது நாளை வந்ததும் விளக்கமாக தெரிவிக்கிறோம் என்றனர்.
- சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.
- 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும்.
சென்னை:
சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உட்பட 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர்–வந்தவாசி-போளூர் சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலியில் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச் சாலைகள், மழை நீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.
இந்த சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது.
இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.92.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.