என் மலர்
நீங்கள் தேடியது "கராச்சி மைதானம்"
- போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும்.
- பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.
கராச்சி:
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா மோதும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் நடக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர், ராவல் பிண்டி ஆகிய 3 நகரங்களில் போட்டி நடக்கிறது. போட்டியில் விளையாடும் 8 நாடுகளின் தேசிய கொடிகள் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட வேண்டும். ஆனால் பாகிஸ்தான் ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடி மட்டும் ஏற்றப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியானது. அதில் லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி மட்டும் இல்லை. மற்ற நாட்டு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்தியாவின் கொடியை ஏற்றவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த புறக்கணிப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவின் கொடி பாகிஸ்தான் ஸ்டேடியங்களில் ஏற்றப்பட்டது.
The Indian flag has been placed at the National Bank Stadium, Karachi ahead of the #ChampionsTrophy2025 #Cricket | #Pakistan | #Karachi | #India pic.twitter.com/TTLZLGz6DY
— Khel Shel (@khelshel) February 19, 2025
சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்க உள்ள நிலையில் கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி காணப்பட்டது.
- ஐசிசி தொடரில் ஒவ்வொரு அணியின் தேசியக்கொடியும் மைதானத்தில் பறக்க விடப்படுவது வழக்கமான ஒன்று.
- பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 19-ந் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்திய அணி முதல் ஆட்டத்தில் வங்க தேசத்தை வருகிற 20-ந் தேதி சந்திக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி மைதானத்தில் ஏழு நாடுகளின் கொடி மட்டும்தான் பறக்க விடப்பட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் தேசியக்கொடி இல்லை. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி, பாகிஸ்தானில் வந்து விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டும் தான் பறக்க விடப்பட்டிருப்பதாகவும், இந்தியா தங்களது நாட்டுக்கு வரவில்லை என்பதால் தான் இந்திய நாட்டின் தேசிய கொடியை தாங்கள் வைக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளனர்.
ஏற்கனவே பாகிஸ்தான் என்ற பெயரை தங்களது ஜெர்சியில் போடமாட்டோம் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது பாகிஸ்தானும் இந்தியாவின் தேசிய கொடியை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
கராச்சி:
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்றும் 2 நாட்களே உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற 7 அணிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No Indian flag in Karachi: As only the Indian team faced security issues in Pakistan and refused to play Champions Trophy matches in Pakistan, the PCB removed the Indian flag from the Karachi stadium while keeping the flags of the other guest playing nations. pic.twitter.com/rjM9LcWQXs
— Arsalan (@Arslan1245) February 16, 2025
ஐசிசி தொடர் மற்றும் இரு தரப்பு தொடர் என்றால் அந்த மைதானங்களில் அணிகள் பங்கேற்கும் நாட்டின் கொடி பறக்கவிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.