என் மலர்
நீங்கள் தேடியது "மும்மொழி கொள்கை"
- கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை.
- டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது.
மதுரை:
ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை.வைகோ எம்.பி. மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சகோதரர் உதயநிதிக்கும், அண்ணாமலைக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை தவிர அனைத்து இயக்கங்களும், இருமொழிக் கொள்கையால் கல்வி உயர்ந்து அனைவரும் படித்துள்ளனர் என உறுதியாக இருக்கிறோம்.
வடமாநிலங்களுக்கு தமிழக பா.ஜ.க.வினர் செல்ல வேண்டும். அங்கு பா.ஜ.க. தலைவர்கள் வைக்கின்ற பிரசாரம் ஆங்கிலம் தேவையில்லை என்று. இன்றைக்கு உலக அளவில் மருத்துவத்துறை, வர்த்தகத் துறை, தொழில்துறை ஆகியவற்றில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஆங்கில புலமை தான் காரணம்.
பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களின் புள்ளி விவரம் தமிழ்நாட்டில் இன்றைக்கு 50 சதவீதம். இன்றைக்கு உள்ள பள்ளி மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகம். மருத்துவத்துறையில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டும். பொறியியல் படிப்பு செல்ல வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. அப்படி இருக்கையில் எதற்காக மாணவர்கள் மூன்றாவது மொழியில் படிக்க வேண்டும்.
மூன்றாவது மொழியாக இந்தியை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் மூன்றாவது மொழியை தேர்ந்து எடுத்தால் இந்தியை தான் தேர்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகும். உலக மொழியை கற்றுக் கொள்வதில் என்ன தவறு? இதற்கிடையே ஒன்றிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தமிழகம் என்றைக்கு தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதோ அப்போது தான் நிதி வழங்கப்படும் என தெள்ளத்தெளிவாக கூறி விட்டார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி இதுவரை வரவில்லை. பா.ஜ.க. அல்லாத பிற மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கு நிதியை கொடுக்காமல் இருக்கிறது. அதன் மூலமாக மக்களுக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்துவது அல்லது ஆளுநர் மூலமாக இடையூறு அளித்து மாநில அரசுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் பாலியல் வன்முறை அதிகம் நடந்துள்ளது. தனிமனித ஒழுக்கம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டும். தவறு செய்யும்போது தவறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வழக்குகள் இந்தியாவிலேயே முதலிடம். டெல்லியை பொறுத்தவரை காவல் துறை ஒன்றிய அரசின் கையில் தான் இருக்கிறது. அங்கேயும் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது.
டெல்லி தலைநகரில் துப்பாக்கி சூடுகள், குண்டு வெடிப்பு, அடிக்கடி பள்ளி மாணவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி நடந்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள டான்கள் டெல்லியில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்றும் மாநிலங்களை விட குற்றச்சம்பங்கள் குறைவுதான்.
மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள், ஜாதி, மத அரசியல் செய்கிற இயக்கங்கள் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்றைக்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் நடக்கின்ற சம்பவங்களை முதலில் பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மீண்டும் ஒரு மொழிப்போரை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது.
- தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழகம் ஏற்கனவே தரமான கல்வியை தான் வழங்கி கொண்டிருக்கிறது.
* தொடக்க கல்வி மாணவர்களுக்கே பொதுத்தேர்வு என்பது பள்ளிக்கு மாணவர்களின் வருகையை குறைக்கும். இடைநிற்றலை அதிகரிக்கும்.
* தேசிய கல்வி கொள்கையை விட இடைநிற்றலை அதிகரிக்கும்.
* மீண்டும் ஒரு மொழிப்போரை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது.
* தமிழின் பெருமையை பிரதமர் முன்னெடுத்துள்ளதாக கூறி இந்த கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என மத்திய அமைச்சர் கூறுகிறார்.
* இளைய சமுதாயத்திற்காக ஏற்படுத்தியுள்ளீர்கள் என்றால் நீங்கள் விதிகள் போட்டு நிர்பந்திக்கக்கூடாது.
* மருத்துவம் முதல் இஸ்ரோ வரை இருமொழிக்கொள்கையை பயன்படுத்திய அரசு பள்ளியில் படித்த தமிழக மாணவர்கள் முன்னிலையில் உள்ளனர்.
* தூண்டில் போட்டு மீன் சிக்காதா என்ற வகையிலேயே மத்திய அமைச்சரின் கடிதம் உள்ளது.
* 1968 முதல் அண்ணா உருவாக்கிய இருமொழிக்கொள்கையை தமிழகம் பின்பற்றுகிறது.
* அண்ணா முதல் ஜெயலலிதா வரை எதிர்த்த மும்மொழி கொள்கையை முதல்வரும் எதிர்கிறார்.
* மூன்றாவது மொழி கற்பது மொழி திணிப்பு, மாநில உரிமையை பறிப்பதாக அமைகிறது.
* 3-வது மொழியை திணிக்காமல் மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
* இந்தியை விரும்பி கற்பதை ஒருபோதும் எதிர்க்கவில்லை.
* இந்தியாவில் 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டுள்ளன.
* மாணவன் காலில் சங்கிலியை கட்டி ஓட விடும் பணியை மத்திய அரசு செய்கிறது.
* தமிழகம் கூட்டாட்சி ஒத்துழைப்பை விரும்புகிறது.
* மத்திய அரசால் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கையை ஏற்க முடியாது.
* மத்திய அரசு நிபந்தனையின்றி நிதியை வழங்க வேண்டும் என்றார்.
- மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதியைதான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.
- அண்ணாமலை பற்றி பேச விருப்பமில்லை.
சென்னை:
மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, கல்விக்கு நிதி வழங்கும் விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள்? என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மொழிப்போருக்காக பலர் உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு, கல்வி என்பது எங்கள் உரிமை. மும்மொழி கொள்கைக்கு தமிழகம் என்றுமே எதிரானது.
மாணவர்களுக்கு வரவேண்டிய கல்வி நிதியைதான் மத்திய அரசிடம் கேட்கிறோம். தமிழக மக்களின் வரிப்பணத்தை தான் மத்திய அரசிடம் கேட்கிறோம்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேச விருப்பமில்லை என்றார்.
- தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.
- இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மும்மொழி கொள்கையால் எந்த பிரயோஜனமும் இல்லை.
* தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை வெற்றியடைந்த ஒன்று.
* இருமொழிக் கொள்கை உள்ள தமிழகத்தில் 80% மேற்பட்டோர் உயர்கல்வி செல்கின்றனர். வடமாநிலங்களில் செல்வதில்லை.
* இலக்கணமற்ற இந்தி எங்கள் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
* அந்தந்த மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் மாநில மொழியே பயிற்று மொழி என முதலில் அறிவியுங்கள்.
* முதல்வரை பொருத்தவரை தமிழ், தமிழன் என பேசுவார். ஆனால் செயல்படமாட்டார் என்றார்.
- புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 ஐ குறுகிய பார்வையுடன் பார்க்கிறது.
- மோடிஜியின் அரசு உலகளவில் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள முமொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததை அடுத்து பெரும் சர்ச்சை வெடித்தது. மீண்டும் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழக அரசுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு, நமது மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
2022 இல் சென்னைக்கு வந்த செய்த மாண்புமிகு பிரதமர், "தமிழ் மொழி நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
ஒரு மாநிலம் புதிய கல்விக் கொள்கை (NEP 2020) ஐ குறுகிய பார்வையுடன் பார்ப்பதும், அரசியல் கதைகளைத் தக்கவைக்க அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துவதும் மிகவும் பொருத்தமற்றது.
இந்தக் கொள்கை ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. NEP 2020 மொழியியல் சுதந்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்துகிறது . மாணவர்கள் தங்கள் விருப்பப்படி மொழியை தொடர்ந்து கற்க உறுதி செய்கிறது.
இந்தியாவின் கல்வித் துறையின் முதுகெலும்பாக இருந்து வரும் மும்மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கட்டத்திற்குக் கொண்டுவருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அது ஒருபோதும் எழுத்து மற்றும் உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை. இது பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பிப்பதில் சரிவுக்கு வழிவகுத்தது.
காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்பியிருப்பதற்கு வழிவகுத்தது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்ய NEP 2020 முயல்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Highly inappropriate for a State to view NEP 2020 with a myopic vision and use threats to sustain political narratives. Hon'ble PM @narendramodi ji's govt. is fully committed to promote and popularise the eternal Tamil culture and language globally. I humbly appeal to not… pic.twitter.com/aw06cVCyAP
— Dharmendra Pradhan (@dpradhanbjp) February 21, 2025
- உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவோம்.
- "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!
சென்னை :
எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் 'தமிழ் வெல்லும்' என்று அண்ணாதுரை கையெழுத்திட்டதை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில்,
மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று,
நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,
எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை "உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்" என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்! என்று தெரிவித்து உள்ளார்.
மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும்
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 21, 2025
உலகத் தாய்மொழி நாளான இன்று,
நம் தாய்நிகர் #தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன்,
எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர்… pic.twitter.com/kcSGgwxmoT
- உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
- ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாகி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. என்று தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
— Prakash Raj (@prakashraaj) February 21, 2025
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi #justasking
- ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது.
- போஸ்டர் ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மும்மொழி கொள்கை தீவிரமாகி வருகிறது. மும்மொழி கொள்கைக்கு எதிராக தி.மு.க. அரசு குரல் கொடுத்து வரும் நிலையில், மும்மொழி கொள்கை ஏன் அவசியம் என்பது குறித்து மாநில பா.ஜ.க. வாதம் செய்து வருகிறது.
மீண்டும் இந்தி திணிப்பை அனுமதிக்கமாட்டோம் என்று அரசு சார்ந்த அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்தியை எதிர்க்கும் யாரெல்லாம் இந்தி மொழி உடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது குறித்து அண்ணாமலையும் தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, அண்ணாசாலைக்கு வந்து பார்க்கட்டும் என்று துணை முதலமைச்சர் கூற அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் அங்கு வரட்டும்.. இடத்தை கூறுங்கள்' என்று அண்ணாமலை கூற தமிழக அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 'தமிழ் வாழ்க' என்கிற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதுவும் ரெயில்வே பலகையில் எழுதப்பட்டுள்ள இந்தி வாசகம் அழிக்கப்பட்டு தமிழ் வாசகம் மட்டும் இருப்பது போன்று போஸ்டர் காணப்படுகிறது. இதனை ஒட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
இதனிடையே இன்று சர்வதேச தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 'தமிழ் வாழ்க' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.