என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுதி மறுசீரமைப்பு"

    • மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் எதிர்க்கிறோம்.
    • பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம்

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கே: பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?

    பதில்: தொகுதி மறுசீரமைப்பைத் தி.மு.க எதிர்க்கவில்லை. எதிர்வரவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம்.

    மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது நாட்டின் பொருளாதாரம்-மக்களின் நல்வாழ்வு-வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடும் தென்மாநிலங்களும் இருந்த காரணத்தால் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம்.

    மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்ன நியாயம்? இந்த அளவுகோலைத் தான் எதிர்க்கிறாம்.

    தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறுத்த பாராளுமன்றத்தில் உங்களிடம் போது மான எம்.பி.க்கள் உள்ளதா?

    பதில்: இரண்டே இரண்டு எம்.பி.க்களைக் கொண்டி ருந்த தி.மு.க.தான், இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற உறுதி மொழியை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடமிருந்து பெற்றது.

    மாநிலங்களவையில் ஒற்றை எம்.பி.யாக இருந்த எங்கள் இயக்கத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா அவர்கள், இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளுக்காகவும், அந்தந்த மாநிலங்களின் உரிமைக்காகவும் முழங்கினார். பண்பட்ட ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றக்கூடிய அரசாங்கமும் அன்றைக்கு இருந்தது. தற்போது நியாயத்தைப் பெறுவதற்கு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.

    அந்த வகையில், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நேரடியாகப் பாதிக்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பி.க்களும்கூட, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது என்பது மாநில உரிமைகளுக்கு-மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு விடுக்கப்படும் சவால் என்பதை உணர்ந்து, இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.

    கே: தொகுதி மறு சீரமைப்பு என்பது அரசியலமைப்பு ஆணை. அதை எப்படி சட்டப்படி தடுக்க முடியும்?

    பதில்: நாங்கள் அதைத் தடுக்கவில்லை. நியாயமான காரணங்களை முன்வைத்து, அதனைத் தள்ளி வைக்கக் கோருகிறோம். ஏற்கெனவே இரண்டு சட்டத்திருத்தங்களுடன் தள்ளிவைக்கப்பட்டதை, மீண்டும் ஒருமுறை அதே வழியில் தள்ளிவைத்து, காலவரையறையைச் சரியாக செயல்படுத்தி, சம நியாயம் கொண்ட தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

    மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.

    கே: தொகுதி மறுசீரமைப்பு ஏற்படும் போது அதனால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்க நீங்கள் முன்னணியில் இருந்தீர்கள். அவர்களின் பதிலில் நீங்கள் திருப்தி யடைகிறீர்களா?

    பதில்:கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் மார்ச் 22 அன்று சென்னையில் கூட்டப்பட்டு 3 முதல்-அமைச்சர்கள், 2 துணை முதல்-அமைச்சர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் உள்பட 8 மாநிலங்களின் பங்கேற்புடன் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது முதல் கட்ட வெற்றி. போராட்டம் தொடரும்.

    கே: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தீர்களே பிரதமர் மோடியை தமிழக எம்.பி.க்கள் எப்போது சந்திப் பார்கள்? பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறீர்களா?

    பதில்: பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம். அவரும் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர். மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உணர்ந்தே இருப்பார். அதனால், அவரது அழைப்பை நம்பிக்கையுடன் எதிர்பார்த் திருக்கிறோம்.

    கே: தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை பிரச்சினையை நீங்கள் கையில் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே அதுபற்றி உங்கள் பதில்?

    பதில்: தி.மு.க.வின் மாநில உரிமைக் குரலுக்கு நியாயமான பதில் சொல்ல முடியாதவர்கள்தான் திசை திருப்புகிறார்கள்.

    ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகளின்படியே தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் முன்னேறியிருக்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு வலுவாக உள்ளது. எனவே, திசை திருப்ப வேண்டிய சூழலோ அவசியமோ எங்களுக்கு கிடையாது.

    1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அது மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

    கே: தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்று பிரதமர் மோடி அரசு சொல்கிறதே?

    பதில்: அதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலோ-நாட்டு மக்களுக்கோ ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமரிடம் கேட்டும் இதுவரை ஏன் பிரதமர் தெளிவுபடுத்தி-மக்கள் தொகையை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு வராது என்ற உறுதி மொழியை ஏன் அளிக்கவில்லை?

    பா.ஜ.க. அரசு சொல்வதும் செய்வதும் முற்றிலும் மாறுபாடாக உள்ளது என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உண்டு. வக்பு வாரிய திருத்தச் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக தி.மு.க.வின் சார்பில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த வாதங்கள், கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப் பட்டு, பா.ஜ.க. விரும்பியபடி அந்த சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. நியாயமற்ற அரசாக பா.ஜ.க செயல் படுவதால்தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதன் தெளிவற்ற விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை.

    • தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர்
    • அதிமுக - பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்

    "ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே" என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து உங்கள் பதில் என்ன?

    பதில்: ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

    பதில்: அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க. காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.

    என்று தெரிவித்தார்.

    • தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.
    • மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது.

    டெல்லியில் சிஎன்என் நியூஸ் 18 நடத்திய 'ரைசிங் பாரத்' மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இது நடக்கிறது; ஏனென்றால் தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது.

    மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது. இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பேசிய வீடியோவை அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்க பார்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து ஆ.ராசா பெயரில் நாளை வழக்கு.
    • நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.727 கோடியில் 56 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.


    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    நாங்கள் உழைப்பது, இந்தியா முழுமைக்கும் சமூக நீதி மாநில சுயாட்சி, கூட்டாட்சி மத நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை வென்றெடுக்கத்தான். அதனால் தான் நம் கழக எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையில் மாநிலங்க ளவையில் எடுத்து வைக்க கூடிய வாதங்கள் இந்தியா வையே காப்பாற்றக் கூடிய அளவுக்கு அமைந்து உள்ளது. இதைப் பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள்?

    தமிழ்நாட்டின் நாடாளு மன்ற எண்ணிக்கையை குறைக்க சதி செய்கி றார்கள். தொகுதி மறுசீர மைப்பு என்ற பெயரில் மிகப் பெரிய சதி நடக்க இருப்பதை முதன் முதலில் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தான் நம்முடைய தமிழ்நாடு.


    வர இருக்கக் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்ப டையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகுது.

    மக்கள் தொகையை பல்வேறு பல திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும்.

    இதைப்போல தென் மாநிலங்களும் தொகுதி எண்ணிக்கையை இழப்பார்கள். உடனே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன்.

    அந்த கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி இது போல பாதிக்கப்படும் மாநிலங்களை இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. 7 மாநிலங்களை சார்ந்த 22 கட்சிகள் அதில் கலந்து கொண் டார்கள்.

    அந்த கூட்ட முடிவின்படி அகில இந்திய அளவிலான கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளோம்.

    அந்த குழுவின் சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு, ராமேசுவரத்துக்கு பிரதமர் வர இருக்கிறார்.

    நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால் ராமேசுவரம் விழாவில் என்னால் பங் கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை அவருக்கு நான் தெரிவித்து விட்டேன். அந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியின் மூல மாக உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரும் மோடியை, நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை நீங்கள் போக்க வேண்டும்.

    தென்மாநிலங்கள் உள் ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி விழுக்காடு குறையாது என்ற உறுதி மொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்க வேண்டும்.

    அதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ தொகுதி எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, நம் அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய கவலை.

    இந்த எண்ணிக்கையும் குறைந்தால் தமிழ்நாட் டையும் நசுக்கி விடுவார்கள். அதனால்தான் நம் வலிமையை குறைக்க பா.ஜ.க. துடிக்கிறது.

    வக்பு வாரிய திருத்த சட்டத்தை நள்ளிரவு 2 மணிக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றியதை பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதல் தமிழ்நாடு அரசும் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்தோம். வக்பு திருத்த சட்டம் ஜனநாயகத்துக்கு விரோத மான முறையில் நிறை வேற்றப்பட்டு உள்ளது.

    இதில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பித்துரை 1 நிமிடம்தான் பேசினார். ஆனால் நாங்கள் சட்ட மன்றத்தில் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தோம். தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்துள்ளேன்.

    நாளை துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பெயரில் வழக்கு தொடுக்கப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது.
    • இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களுக்கான பாராளுமன்ற தொகுதிகள் கணிசமாக குறையும் என்பது குற்றச்சாட்டு.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:-

    தெற்கை (தென்இந்திய மாநிலங்கள்) அமைதியாக்குவதற்காக வடக்கு (வடமாநிலங்கள்) மக்கள் தொகை அதிகரிப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முடியாது.

    தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது. இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையை கோருகிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாதிப்பை உருவாக்கும்.
    • பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தங்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பாதிப்பை உருவாக்கும். பிரதமரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், கூட்டு நடவடிக்கை குழு தீர்மானங்களை பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் நேரில் சந்தித்து வழங்க நேரம் கேட்டு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார்.



    • மது விற்பனை அதிகமாக நடைபெறும் 10 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு இல்லை.
    • மதுபான கொள்முதல் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இருந்தால் மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம்.

    புதுக்கோட்டை:

    தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொகுதி சீராய்வு குறித்து பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஒருங்கிணைத்து கலந்து ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் 58 கட்சிகள் கலந்து கொண்டன.

    பாதிக்கப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது தென் மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் 23.4 சதவீதம் ஆகவும் வடமாநிலங்களின் வளர்ச்சி சதவீதம் 24.39 ஆகவும் உள்ளது.

    மக்கள் தொகையை பொறுத்தவரை தென் மாநிலங்களில் 12.53 சதவீதம் கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் வட மாநிலங்கள் 21.83 சதவீதம் ஆக உள்ளது. பொருளாதார ரீதியில் தென் மாநிலங்கள் பங்களிப்பு 36 சதவீதம், வட மாநிலங்களில் பங்களிப்பு 20 சதவீதமே உள்ளது.

    ஆனால் தென் மாநிலங்களில் கிடைக்கும் நிதி பகிர்வு 27 சதவீதமாக உள்ளது. வடமாநிலங்களில் இருந்து கிடைக்கக்கூடிய பகிர்வு தொகை 42.5 சதவீதம் ஆக உள்ளது. பட்ஜெட்டில் 100 ரூபாய்க்கு தமிழ்நாட்டுக்கு 29 பைசா மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

    அதைப்போல் கர்நாட காவுக்கும் 14 ரூபாய் கொடுக்கப்படுகிறது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் 100 ரூபாய்க்கு 900 ,400 ரூபாய் விகிதத்தில் ஒதுக்கப்படுகிறது.

    மது விற்பனை அதிகமாக நடைபெறும் 10 மாநிலங்களுக்குள் தமிழ்நாடு இல்லை. மது விற்பனையில் பா.ஜ.க. ஆளும் மாநிலமான ராஜஸ்தான் முதலிடம் வகிக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தில் 2006-ல் மோடி முதல்வராக இருந்தபோது வருவாய் அதிகரிக்கும் நோக்கில் வைப்ரண்ட் குஜராத் என்ற பெயரில் மது விற்பனைக்கு உரிமம் வழங்கியது.

    வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், வெளி மாநிலையில் இருந்து வருபவர்கள் மது அருந்த அனுமதிக்கப்பட்டனர். அந்த மாநிலத்திலேயே அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு வெளிப்படத் தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது . மதுபான கொள்முதல் மற்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு இருந்தால் மத்திய அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொள்ளலாம்.

    தொகுதி மறுசீராய்வினால் மக்கள் தொகை அதிக அளவில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தென் மாநிலங்களில் எம்பிக்கள் சீட்டுகள் குறைய வாய்ப்புள்ளது.

    வடமாநிலங்களில் மக்கள் தொகை கணக்குப்படி எம்.பி.க்கள் சீட்டுகள் அதிகரிக்கப்படாது என சொல்ல அமித்ஷா தயாரா? வக்பு வாரிய சொத்துக்கள் அல்லாஹவுடைய சொத்துக்கள்.

    அவற்றை அபரிக்கவே தற்பொழுது வக்பு வாரிய திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரவிருக்கும் தேர்தலில் தோல்வியை தடுக்க மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்புகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தி.மு.க. தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்கவும் மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எழுப்புகிறது.

    தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கமாக, ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களை ஏமாற்றுவார்கள்.
    • தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது.

    சென்னை :

    தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார். அதில், "இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது. இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?" என தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:-

    "திரு. மு.க. ஸ்டாலின், நீங்கள் நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்பின் பாதுகாவலர் என்று வேடமிட்டு ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். வழக்கமாக, ஏமாற்றுபவர்கள் பணக்காரர்களைத் தான் ஏமாற்றுவார்கள். ஆனால் தி.மு.க. எந்த வித்தியாசத்தையும் காட்டுவதில்லை; அவர்கள் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்தே ஏமாற்றுகிறார்கள்.

    தமிழக முதல்வரின் குடும்பம் மூன்று மொழிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்பிக்கும் தனியார் பள்ளிகளை வைத்திருக்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்த கொள்கையை எதிர்க்கிறது என்பதை இப்போது மொத்த நாடும் அறிந்திருக்கிறது. அவர்கள் உங்களை ஒரு நயவஞ்சகர் என்று அழைக்கிறார்கள், மு.க.ஸ்டாலின்.

    தமிழக முதல்வர் தனது கட்சிக்காரர்கள் அங்கும் இங்கும் திட்டமிட்டு நடத்திய நாடகம் முழு தமிழகத்தின் குரலையும் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார். மக்களின் கவனத்தை முக்கியமற்ற விஷயங்களில் திசைதிருப்ப நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அம்பலமாகிவிட்டன என்பதை நீங்கள் உணரவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.

    உங்கள் அறியாமையின் பேரின்ப உலகில் வாழ்க, மு.க. ஸ்டாலின். நாங்கள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம்," என்று கூறியுள்ளார்.



    • வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.
    • தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2026) இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ் நாட்டில் 8 எம்.பி. இடங்கள் வரை குறையும் அபாயம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதேபோன்று வேறு சில மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது.

    இதையடுத்து தொகுதி மறு சீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் 24 கட்சிகள், அமைப்புகள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கைகளை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டாலும் இது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்ய காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியில் குழு ஒன்று அமைக்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் இது தொடர்பான கருத்துக்களை ஆய்வு செய்ய குழு அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை தெளிவான தகவல்களை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வெளியாகும் யூகத்தின் அடிப்படையிலான தகவல்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கங்களை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை மக்கள் தொகை பற்றிய புதிய கணக்கெடுப்பு நடத்தும் வரை மேற்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை;
    • திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.

    சென்னை:

    தமிழகத்தில் மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சனம் செய்து இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.

    இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல. இது அதன் இருண்ட அரசியல் கருப்பு நகைச்சுவை. இது முழுக்க முழுக்க அரசியல் டார்க் காமெடி.

    நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறோம்.

    இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என்று கூறியுள்ளார். 



    • 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
    • தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39-ல் இருந்து 31-ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். தென் மாநிலங்களில் இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் எனவே, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த சனிக்கிழமை (22-ந்தேதி) நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பின்போது பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.

    பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாகவே இவர்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா? என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.

    ×