என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் விஜய்
- CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் விஜய்
இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் என காரணம் காட்டி விஜய் பாதுகாப்பு பெற்றதாக வன்னி அரசு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வன்னி அரசு பேச்சுக்கு த.வெ.க. கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இஸ்லாமியர்கள் அச்சுறுத்தல் எனக் காரணம் காட்டி எங்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பாதுகாப்புப் பெற்றதாக எள்ளளவும் அறமற்ற அபாண்டமான ஒரு பொய்யினைத் தொலைக்காட்சி ஊடக விவாதம் ஒன்றில் பேசியிருக்கும் சகோதரர் திரு.வன்னியரசு அவர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் கழகத்தின் மாநிலக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த என்னை நியமனம் செய்தவர் எங்கள் தலைவர்!
கழகத்தின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இஸ்லாமிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்தவர் எங்கள் தலைவர்!
கல்வி விருது வழங்கும் விழாவில் இஸ்லாமிய மாணவர்கள் பலருக்குப் பரிசளித்துப் பாராட்டியவர் எங்கள் தலைவர்!
CAA சட்டத்தை எதிர்த்து, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நிற்பவர் எங்கள் தலைவர்!
எங்கள் தலைவர் அவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் நீங்கள் பேசியுள்ள அப்பட்டமான பொய்யின் வாயிலாக ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் ஏதோ தமிழகத்தில் உள்ள தலைவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் செய்பவர்கள் போலச் சித்திரித்து அவமரியாதை செய்துள்ளீர்கள். இதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தி.மு.க.வின் ஊதுகுழலாக இத்தகைய பொய்யினைச் சர்வ சாதாரணமாகப் பேசும் நீங்கள், நாங்கள் பெருமதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தங்கள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கும் அவப்பெயரைத் தேடிக் கொடுத்துள்ளீர்கள் என்பதை மறவாதீர்.
இஸ்லாமிய மக்களைத் தம் நெஞ்சில் வைத்து நேசிப்பவர் எங்கள் தலைவர்!
இஸ்லாமிய மக்களும் எங்கள் தலைவரைத் தங்கள் மனத்தில் வைத்து மதிப்பவர்கள்! உங்களை ஏவிவிடுவோரின் பொய், புரட்டுகளால் ஒருபோதும் இதனை மாற்றவோ மறைக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் இது போன்று அநாகரிகமான முறையில் இஸ்லாமிய மக்களை அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்த்து, நாகரிக அரசியல் பாதையில் பயணிக்க முயற்சி செய்யுங்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும்.
- பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியதாவது:-
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் மத்திய பாஜக அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?
பாசிசம் – பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.
ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது. படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது. உடல் நலத்திற்கு நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும்.
- புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தனக்கு அரசியல் புரிதல் இல்லை என்பதை அவரே வெளிகாட்டிக் கொள்கிறார். 1938ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி போய் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனேயே இந்தி மொழி திணிக்கப்பட்டது.
அன்றைக்கே தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிடக் கட்சி தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து போராட்டம் நடத்தி மக்களிடம் கருத்தை பரப்பினார்கள். இதெல்லாம் அவருக்கு தெரியாது.
1952ல் மீண்டும் இங்கே முதல் தேர்தலில் ராஜாஜி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழி கற்பிக்கப்படும் என்று கூறியபோது அதையும் எதிர்த்து போராடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
1957ல் இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட நேரத்தில் ஈவிகே சம்பத் அவர்கள் நேருவிடம் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று பேசினார். அப்போது நேரு உத்தரவாதமாக இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என்று ஒரு உத்தரவாதம் அளித்தார்.
அனுபவமின்னை. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும். அது அவருடைய அறியாமை.
திமுக என்ன செய்திருக்கிறது. திராவிடக் கழகம் தமிழை காப்பாற்ற என்ன செய்திருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய போராட்டம் நடத்தி இருக்கிறது ? எவ்வளவு உயிர்களை பலி கொடுத்திருக்கிறது ?என்பதெல்லாம் விஜய்க்கு தெரியாது.
புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள். அவர்கள் மீது குறை சொல்வார்கள்.
அந்த குறையில் எதுவும் நியாயம் இருக்கிறதா ? என்று அவர்களுக்கு சிந்தித்து பார்ப்பதற்கு கூட தெரியாது. இந்தி மொழி பிரச்சினையிலும் அப்படிதான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
- தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது. சுமார் 300 தொண்டர்கள் அரங்கிற்குள் அமர்ந்திருக்க த.வெ.க. தலைவர் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்தார். மேடை ஏறியதும் 'Get Out' கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார்.
கையெழுத்து இயக்கத்தில் முதல் ஆளாக அதன் தலைவர் விஜய் கையெழுத்திட்ட நிலையில், அவரைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்பட பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டனர். அப்போது மேடையில் இருந்த பிரசாந்த் கிஷோரையும் கையெழுத்திட த.வெ.க. பொதுச் செயலாளர் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.
அப்போது, "இல்லை, இல்லை வேண்டாம்" என்றவாரு செய்கையில் தெரிவித்த பிரசாந்த் கிஷோர் கடைசி வரை கையெழுத்திடாமல் நழுவி கொண்டார். த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கையெழுத்து இயக்கத்திற்காக அரங்கத்தின் மேடையில் வைக்கப்பட்ட பேனரில், "புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத் தணிப்பு, அரசியல் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம் ஆகியற்றுக்கு எதிராக போராட உறுதியேற்போம்," என எழுதப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
- 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பங்கேற்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
விஜய் வீட்டில் செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி செருப்பு வீசியவர் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் என்று தகவல் வெளியாகி உள்ளது. போதையில் விஜய் வீட்டிற்குள் செருப்பை வீசியதாக தகவல். கைதானவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
- மர்ம நபர் செல்போனில் பேசிய படி காணப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபர், செல்போனில் பேசிய படி அங்கிருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
- விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
- மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
சென்னை:
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தொடங்கினார்.
அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து முதலாம் ஆண்டு முடிந்து 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சொகுசு விடுதியில் வருகிற 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பொதுக்குழு கூட்டத்துக்கு முன்பு கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. இதையடுத்து பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் வருகிற 26-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.
26-ந்தேதி காலை 10 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழாவில் கட்சித்தலைவர் விஜய் சிறப்புரை நிகழ்த்துகிறார். அப்போது விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும் பொதுக்குழு கூட்டம் எப்போது நடத்தப்படும் என்கிற தேதியையும் அவர் அறிவிக்க உள்ளார்.
இந்த ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச்சீட்டு இருப்பவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இந்த நுழைவுச்சீட்டுகளை வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
2-ம் ஆண்டு விழாவில் பேசும் விஜய், கட்சி சம்பந்தமாகவும், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பது தொடர்பாகவும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேச இருக்கிறார். எனவே விழாவில் விஜய் என்ன பேச இருக்கிறார்? என்னென்ன அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆண்டுவிழாவின் முடிவில் அதில் பங்கேற்பவர்களுக்கு 18 வகையான உணவு வகைகளை கொண்ட அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சித்தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன் அவர்களை தனித்தனியே அழைத்தும் பேசினார். கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 'நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க பெரிய பெரிய பணக்காரர்கள் வந்து மோதினார்கள். ஆனால் உங்களை நம்பி, நீங்கள் உழைத்த உழைப்பை நம்பி, மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன். எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டும் இந்த பதவியை பயன்படுத்த வேண்டும்' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகளை தீவிரப்படுத்துவதற்காக கட்சியில் 3 லட்சம் பேருக்கு முக்கிய பதவிகளை வழங்க விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பையும் ஆண்டு விழாவில் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மாவட்ட செயலாளர்களும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். விஜய் கட்சியில் மொத்தம் 28 அணிகள் உள்ளன. அதில் குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி ஆகியவையும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வேறு எந்த கட்சியிலும் இதுபோன்ற அணிகள் கிடையாது. விஜய் கட்சியில் மட்டுமே இந்த அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அணிகளுக்கும் சேர்த்து தமிழகம் முழுவதும் மொத்தம் 3 லட்சம் பேருக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுவிழா முடிந்ததும் கட்சி நிர்வாகிகளுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் நடிகர் விஜய்யின் அதிரடி விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம், வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மாவட்டம் வாரியாக இதுவரை என்னென்ன மக்கள் பணிகள் செய்யப்பட்டுள்ளது இனி என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என வியூகம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் தொடர்பான பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளன. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், விரைவில் விஜய் முழு வேகத்தில் அரசியலில் ஈடுபட இருக்கிறார். அடுத்த கட்டமாக கட்சியை வலுப்படுத்துவதுடன் மக்களையும் நேரடியாக சந்திக்க தயாராகி வருகிறார். இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று விஜய் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
- தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக, தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், "எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார்" என்று தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் அவர், "ஊழல் கூடாரத்துக்கு எதிராக வீர வசனம் பேசியவர், இன்று அதே கூடாரத்தில் சுயநலனுக்காக இருக்கிறார்.
ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு, பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் கமலுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும்.
எம்ஜிஆர் வெற்றியை சிவாஜியால் பெற முடியவில்லை, எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக விஜய் மாற்றுவார்" என்றார்.
- மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
- அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழ் நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள 'Y' பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்றும் இந்த 'Y' பிரிவு பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் சிஆர்பிஎஃப் Z, Y என்றெல்லாம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியாக இருந்த போதே பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்-க்கு சிஆர்பிஎஃப் Y பிரிவு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் போது, அதனை தமிழக அரசே அளித்திருக்க வேண்டும். இது அரசியல் கிடையாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
- திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.
திருவண்ணாமலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சீமான், " விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்தித்துக்கொண்டார்கள் என்று உங்கள் செய்தியை பார்த்து தெரிந்துகொண்டேன். வியூக வகுப்பில் எனக்கு உடன்பாடில்லை. பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும்" என்றார்.
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பை 'பணக்கொழுப்பு' என விமர்சித்திருந்த சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகம் பதிலிடி அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?
திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.
அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.
நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.
பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.
ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்து தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார்.
- விஜய்- பிரசாந்த் கிஷோ சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்.
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த வருடம் புதுக்கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விஜயை சந்தித்து, த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். த.வெ.க.-வில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஆர். நிர்மல் குமார் என்பரும் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இவர் ஐ.டி. பிரிவில் தலைசிறந்தவர்.
ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிராசாந்த கிஷோர்- விஜய் சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்தாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விஜயை பிரசாந்த கிஷோர் சந்தித்து பேசினார்.
அப்போது 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.