என் மலர்
நீங்கள் தேடியது "slug 94445"
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.
இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.
மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.
நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.
மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் அரசு மார்பு நோய் நிலையம், ஜிப்மர் நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறை சார்பில் உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு தகவல் இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் புகையிலை நிறுவனங்களில் குறுக்கீடு தொடர்பான பயிலரங்கு அக்கார்டு ஓட்டலில் நடந்தது.

உலக இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டு கணக்கெடுப்பில் கிடைத்த தகவலின்படி, ‘புதுவையில் 13-15 வயதிற்குப்பட்ட மாணவர்களில் 4.3 சதவீதத்தினர் புகைக்கும் அல்லது மெல்லும் வகையிலான புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். இது தேசிய சராசரியான 8.5 சதவீதத்தை ஒப்பிடும்போது பாதியளவு குறைவானது.
புகையிலை இல்லா வழிகாட்டு நெறிமுறைகளை 63.6 சதவீதம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. 45.5 சதவீதம் பள்ளிகள் புகையிலை இல்லா பள்ளிக்கூடம் என்ற தகவல் பலகை வைக்க வேண்டும் என்ற நெறிமுறை பற்றி அறிந்துள்ளன. 52.6 சதவீதம் பேர் மூடப்பட்ட பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும், 59.1 சதவீதம் பேர் திறந்தவெளி பொது இடங்களில் புகையிலையை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்’.
இதுநாள் வரை படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என வீட்டிலேயே பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு பழகி விட்டதால் சட்டென்று அவர்களை பள்ளிச் சூழலுக்கு தயார்படுத்துவது சிரமமானது. அதனை கருத்தில் கொண்டே இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் இசை, நடனம், கலை வேலைப்பாடுகள் மற்றும் கைவினை, திரைப்பட விமர்சனங்கள், புகைப்பட விளக்கக்காட்சிகள், தோட்டக்கலை, புத்தக வாசிப்பு என பல விஷயங்கள் சொல்லித்தரப்படுகின்றன.
இந்த பாடத்திட்டம் பள்ளி நேரத்திற்கு அப்பால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த பள்ளிக்கூடம் ஆலுவாவில் உள்ள கீழ்மாட் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது. ‘‘எங்கள் பள்ளிக்கூடம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக இயங்குகிறது. இங்கு படிப்பவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் விடுதியில் தங்கி படிக்கிறார்கள். கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டதால் நீண்ட நாட்களாக வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். மீண்டும் பள்ளிக்கு திரும்பும்போது வீட்டுச்சூழலை மறப்பது சற்று சிரமமானது. திடீரென்று குடும்பத்தில் இருந்து துண்டிக்கப்பட்டதைப்போல அவர்கள் உணருவதையும் நாங்கள் விரும்பவில்லை. மீண்டும் பள்ளி வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பழக்கப்படுத்தும் நோக்கத்தில் மகிழ்ச்சி பாடத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.
மகிழ்ச்சி பாடத்திட்டங்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது. அதனை பின்பற்றி இரண்டு வாரங்களுக்கு இந்த பாடத்திட்டத்தை நடத்த இருக்கிறோம். மாணவர்கள் மீண்டும் கற்றல் சூழலுக்குத் திரும்ப உதவுவதற்கான சிறந்த வழியாக மகிழ்ச்சி பாடத்திட்டமும் அமைந்திருக்கிறது’’ என்கிறார்கள், ஆசிரியர்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், சாந்தி நகரை சேர்ந்தவர் லாவண்யா. தனியார் இணைய தள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், இரவு பணிக்கு செல்வதற்காக ஆதம்பாக்கம், மோகனபுரி தெருவில் காருக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென லாவண்யா வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.
இதில் லாவண்யாவிடம் செல்போன் பறித்தது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த சஞ்சய், பாலாஜி, விக்னேஷ் என்பது தெரிய வந்தது.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். பிடிபட்டவர்களில் சஞ்சய் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்.
பாலாஜி கிண்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். விக்னேஷ் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்.
உல்லாச செலவு செய்ய அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதே போல் அவர்கள் வேறு எந்த இடங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.
59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூரியில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதையடுத்து மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்து படிக்க வேண்டும். ஆனால் எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் அவர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தங்களுக்கு விருப்ப மான பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேல்நிலை கல்வியுடன் படிப்பை விட்டு விடக் கூடாது. நாட்டில் உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை தற்போதும் குறைவாகவே உள்ளது. அதை உயர்த்த வேண்டியது அவசியம். இதற்கு கல்லூரி படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு என்று மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். ஆராய்ச்சி நிலை வரை மாணவ- மாணவிகள் படித்தால் தான், அது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டிற் கும் பயன் உள்ளதாக இருக்கும்.
கல்லூரி படிப்பை தொடர கிராமப்புற மாணவர்கள், நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலை தற்போதும் உள்ளது. அதற்காக அவர்கள் மனம் தளர்ந்து விடாமல் விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்து படிக்க வேண்டும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதில் மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர்கள் உதவிகரமாக, வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். மாறாக மாணவ- மாணவிகளை நிர்பந்தம் செய்து, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட்டு விடக்கூடாது. எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மாணவர்களின் கல்வி விருப்பத்தை நிறைவேற்ற பெற்றோர்கள் முயற்சி செய்வார்கள். அதை புரிந்து கொண்டு மாணவர்களும் செயல்பட வேண்டும்.
வேலை, சம்பளம் என்பதை மட்டும் அடிப்படையாக கொண்டு படிப்பை தேர்வு செய்து விடக்கூடாது. விருப்பமான துறைகளில் தங்களுக்கு உள்ள வாய்ப்புகளை அறிந்து படிக்க வேண்டும். அந்த கல்வி தான் வாழ்க்கை முழுவதற்கும் நிறைவை தருவதாக இருக்கும். அப்படி இல்லாத நிலையில் வேலை, சம்பளம் மட்டும் மகிழ்ச்சி அளித்து விடாது. எனவே உயர் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாணவ- மாணவிகள் உறுதியாக இருக்க வேண்டும். அது அவர்களை உயர்த்திக் கொள்ளவும், நாட்டை வளப்படுத்துவதற்கும் உதவும் என்பது நிச்சயம்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு 29-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் வரும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 6-ந்தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SSLCExam
தேர்வு முடிவு வருகிறது என்றாலே மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. தேர்வில் தேர்ச்சி பெறுவோமா? அதிக மதிப்பெண் கிடைக்குமா? நினைத்த உயர்கல்வி படிப்பில் சேர முடியுமா? என்று மாணவர்கள் எண்ணிக் கொண்டு இருப்பர். பெற்றோருக்கும் இதே தவிப்புதான் இருக்கும். வெற்றி பெற்றவர்கள் கொண்டாடட்டும் தவறில்லை. ஆனால் தோல்வியடைந்தவர்கள் முடங்கிக்கிடக்கத்தான் வேண்டுமா? ஒரு தோல்வி மனரீதியாக ஒருவனுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தைவிட புறச்சூழலான பெற்றோர் மற்றும் நண்பர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.
சிறு குழந்தைகளையே எடுத்துக்கொள்ளுங்கள் அது கீழே விழுந்துவிட்டால் நாம் அதைக் காணாத மாதிரி இருந்துவிட்டால் அது தான் விழுந்தது குறித்து அலட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் கொண்டே இருக்கும். நாம் அதைப் பெரிதுபடுத்தி ஐயோ..செல்லம் விழுந்துட்டியா? என்று கொஞ்ச ஆரம்பித்தால் அது தனக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாய் நினைத்து வீறிட்டு அழத் தொடங்கும். சிறுகுழந்தை கொஞ்சும்போதே அழுகிறதென்றால், ஓரளவு உலகம் தெரிந்த மாணவனை அவனது தேர்வுத் தோல்விக்காக கடும் சொல் கூறினால், அவன் எந்த மாதிரி வருத்தமுறுவான்? தான் வாழத் தகுதியற்றவன் என்கிற விபரீத முடிவுகளுக்கும் அவன் செல்லக்கூடுமே. தேர்வில் தோல்வி தரும் வலியைவிட பெற்றோர்கள் திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே இன்றைய பிள்ளைகளை பெரும் மனவருத்தம் கொள்ள வைக்கிறது.
தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை முடிவு செய்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் வெற்றி பெற்ற பெரும்பான்மையான வெற்றியாளர்கள் எல்லோருமே ஒரு கட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான். தோல்வியை கூட அவர்களால் ஒரு புதிய வெற்றியாக மாற்ற முடிந்தது. அப்படி ஒரு புதிய வெற்றியை பெற்றவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயிஸ் பிரெய்லி. ஐயோ கடவுளே, என்ற அலறல் சத்தம் கேட்டு செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தந்தை ஓடி வந்தார். மகன் கண்ணிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பதறினார், துடித்தார். சிறுவன் விளையாட்டாக செருப்பு தைத்த அந்த ஊசியால் கண்ணைக் குத்திக்கொண்டான்.
குத்துண்ட கண்ணுக்குச் சிகிச்சை மேற்கொண்ட போது துரதிருஷ்டவசமாக மறுக்கண்ணும் பாதிக்கப்பட்டு, இரு கண்ணுமே பார்வை இழந்தார் பரிதாபத்திற்குரிய அந்த சிறுவன். ஆனால் பிற்காலத்தில் பார்வையிழந்தோரின் கல்விக்கண் திறந்த கண்ணாளன் ஆனார். பார்வையிழந்த பலர் கைகளால் தடவிப் படிக்கும் பிரெய்லி முறையை கண்டுபிடித்தார். இந்த புதிய மொழியின் மூலம் பார்வையிழந்த பலர் பட்டதாரிகளாகி வேலைவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள். லூயிஸ் பிரெய்லி கண்களில் பார்வை போய்விட்டதே என்று துவண்டு போயிருந்தால் இப்படியொரு கண்டுபிடிப்பு நமக்கு கிடைத்திருக்குமா? என்பதை சிந்தித்து பாருங்கள்.
பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லையா? மனஉறுதியுடன் ஒரு சில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். எத்தனையோ மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுதி பொறியியல், கலை அறிவியல் மற்றும் இதர படிப்புகளில் சேர்ந்து உயர்கல்வியை சிறப்பாக படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையை கொடுக்கக்கூடிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது போன்ற பெற்றோர் அமைந்துவிட்டால் எந்தத் தோல்விக்கும் மாணவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.
பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே தங்களது குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும் சக்தியை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு தோல்விக்கும் பிறகு ஒரு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்குள் வளர்க்க வேண்டும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது, கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணை திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்” என்கிறார். அந்த நம்பிக்கை விதைகளை மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்துக் கொள்ள வேண்டும்.
21 வயது இளைஞர் ஒருவர் கல்லூரிக்கு செல்லும் போது ஷூ லேஸ் கட்டுவதற்கு சிரமப்பட்டார், அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு எல்லாம் தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு சொன்னார், உங்களது மகனுக்கு நரம்பு குறைபாடு தொடர்பான ஒரு கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கும் இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகங்களையும் பாதிக்கும் இரண்டே வருடங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
அப்போது அதை கேட்டு கொண்டிருந்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி இந்த நோய் எனது உடலை பாதிக்கும், ஆனால் என்னுடைய மூளையை பாதிக்குமா? என்று கேட்டார். அதற்கு மருத்துவர் மூளையை பாதிக்காது என்றார். உடனே அந்த இளைஞர் சொன்னார் என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என் உடலா செய்யப்போகிறது, எனது மூளைதான் ஆராய்ச்சிக்கு உதவப்போகிறது என்றார் தன்னம்பிக்கையுடன். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல். கழுத்துக்கு கீழே அத்தனை உறுப்புகளும் செயலிழந்து இரண்டு விரல்கள் மட்டும் செயல்பட்டு கொண்டு இருந்தது. அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். தனது நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை சுவாரசியமான புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு.
இரண்டே வருடத்தில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மனஉறுதியின் மேல் நம்பிக்கை கொண்டிருந்ததே. அவர் தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹக்கிங்ஸ்.
காலத்தை வென்ற மாமனிதர் ஸ்டீபன் ஹக்கிங்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், வாழப்பழகு, போராடு, தோல்விகளை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை நோக்கிப் புறப்படு என்பது தான்.
தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்களை சுற்றி உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதுமே எதிர்மறையாளர்களை தவிர்த்துவிடுங்கள்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளில் அவர்களை ஈடுபட உதவுங்கள். தேர்வு தோல்விகள், குறைந்த மதிப்பெண்கள் என்பவை தற்காலிகம் தான். அவற்றை உளவியல் ரீதியாக உங்கள் பிள்ளைகள் கடந்து வர நீங்கள் உதவியாக இருங்கள். தேர்வு முடிவு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆரம்பமே என்பதை மட்டும் புரிந்து கொண்டால், அதற்கு பின்னான நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பானதாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.
முனைவர் அ.முகமது அப்துல்காதர்,
முதல்வர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி,
மதுராந்தகம்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டம் தேர்ச்சி வீகிதத்தில் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-ம் பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 94 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 305 மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.38 ஆகும்.
இதே போன்று ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 404 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 533 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 17 ஆயிரத்து 379 மாணவ-மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 பேர் தேர்வு எழுதினர்.
இதில் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 152 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 323 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 16 ஆயிரத்து 680 மாணவ-மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ திருச்சி மாநகர போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று, பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டிய மாணவர்கள் யார்? என விசாரித்தனர். இதில் எம்.காம். 2-ம் ஆண்டு வகுப்பை சேர்ந்த 9 மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வீடியோ பதிவில் உள்ளதையும் ஒப்பிட்டு அவர்களை போலீசார் உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்களை ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களது படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் போலீசார் நூதன தண்டனை அளித்தனர். அதன்படி 9 மாணவர்களையும் தோப்புக்கரணம் போடவைத்தனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தோப்புக்கரணம் போட்டதும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். #tamilnews

நிறுவனத்தின் வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் முனைவர் மரிய ஜான்சன் இருவரும் விழாவிற்கு தலைமையேற்று வளாகத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி கவுரவித்தார்கள். காஃக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் சிறப்புரை ஆற்றினார்.
வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த மாணவர்களில் 91.2 விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பணியமர்த்தப்படுகின்றனர். இதுவரை மொத்தமாக 1138 பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை 267-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வருகைபுரிந்து தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், தளவாடங்கள், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பணி நியமனங்களை வழங்கியுள்ளன. இந்த 267 நிறுவனங்களில் 63 நிறுவனங்கள் மாணவர்களின் உலகத்தரம் வாய்ந்த கனவு நிறுவனங்களாக உள்ளன.
புதிய உச்சமாக 186 மாணவர்கள் ரூபாய் 4.5 லட்சத்திற்கும் கூடுதலான ஆண்டு ஊதியத்துடன் நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள். உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் மாணவர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றன.
வேலைவாய்ப்பு வளாகத் தேர்வின் முக்கிய அம்சங்கள்:
1. மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உச்ச ஊதியம், ஆண்டுக்கு ரூ.18 இலட்சம்
காக்சிசன்ட், விப்ரோ, டிசிஎஸ், நீல்சன், அமேசான், ஹிட்டாச்சி, டைட்டன், எச்சிஎல், ஆரக்கிள், வெரைசான், டாடா கம்யூனிகேசன்ஸ், ரெனால்ட் நிசான், கோட்டக், போஸ்ச், யமஹா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வளாகத்தேர்வில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது. #SathyabamaUniversity #CampusInterview
ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது தான் தொண்டு. அவ்வகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள நம் நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய தொண்டுக்கு அளவே இல்லை. நம் சமுதாயம் வறுமை, கல்வியின்மை, அறியாமை, சாதிமத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சிதைந்துள்ளது. குறிப்பாக கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் உறுப்பாய் விளங்கும் மாணவர்கள் சமுதாய மேம்பாட்டுக்காக தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர்கள் தம் பள்ளி பருவத்தில் தொண்டு செய்வதற்கு வாய்ப்பாக பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற அமைப்புகள் உள்ளன. மாணவர்கள் இவ்வமைப்புகளில் சேர்ந்து தொண்டாற்றலாம்.
தெருக்களை தூய்மை செய்தல், நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், சாலைகளை செப்பனிடுதல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், தவறிய பொருட் களைத் தேடி கண்டுபிடிக்க உதவுதல் ஆகிய தொண்டுகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். எழுத்தறிவற்றவர்களுக்கு எழுத்தறிவை போதிக்கலாம்.
செய்தித்தாள்களை வாசித்து காட்டலாம். நூல்நிலையங்கள், படிப்பகங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் செய்தித்துறையினர் உதவி கொண்டு வேளாண்மை, குடும்ப நலம், நோய்த்தடுப்பு முதலியன பற்றிய திரைப்படங்களை காட்டி பொது அறிவை வளர்க்க உதவலாம். கிராமங்களில் உள்ள விவசாயிகள் தம் ஓய்வு நேரத்தை பயன்படும் வகையில் போக்க அரசின் நிதிஉதவி பெற வழிகாட்டலாம். அதன் மூலம் அவர்கள் கோழி பண்ணைகள் வைத்தல், தேனீக்கள் வளர்த்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல் போன்ற கைத்தொழில்களை செய்ய அறிவுறுத்தலாம். நல்ல ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்களை வழிகாட்டலாம்.
நகர்புறங்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறையினருக்கு உதவலாம். பள்ளி வகுப்பறையையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏழை மாணவர்களுக்கும், படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். ஒழுக்கம் தவறும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் தம்முடைய புத்தகங்களை இலவசமாக கொடுத்து உதவலாம்.
இயற்கை சீற்றங்கள், புயல், வெள்ளம் போன்றவை நிகழும்போது, அந்த பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு மக்களின் நலன் காக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் மருந்து பொருட்களை தந்து உதவவேண்டும். மஞ்சள் காமாலை, போலியோ மற்றும் இதர நோய் தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் திகழ வேண்டும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று நினைத்து சமூக நலத்தொண்டாற்ற வேண்டும்.