search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமீர்கான்"

    பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் திருமணம் நடக்க போவதாக வந்த தகவலால் பிரபல நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளார்.
    கடந்த சில நாட்களாக பாலிவுட்  திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக் , அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது. தற்போது மூன்றாவதாக  பாத்திமா சனா  ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது. 

    பாத்திமா சனா ஷேக்

    இந்நிலையில் நடிகை பாத்திமா சனா ஷேக் இது வெறும் வதந்திதான்  இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். இதில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
    தங்கல், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படங்களில் இணைந்து நடித்த அமீர்கான் - பாத்திமா சனா சேக் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பாத்திமா விளக்கம் அளித்துள்ளார். #AamirKhan #FatimaSanaShaikh
    அமீர் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகி நல்ல வரவேற்புடன் வசூலை குவித்த படம் தங்கல். இந்த படத்தில் ஆமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். அந்த படத்திற்கு பிறகு ஆமீர்கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் என்ற படத்திலும் நடித்தார்.

    ஆமீர்கானின் பரிந்துரையின்பேரில் தான் பாத்திமாவுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது என்று கூறப்பட்டது.

    பாத்திமா சனா ஷேக்கிற்கும், ஆமீர்கானுக்கும் இடையே கள்ளக்காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த கள்ளக்காதலால் ஆமீர்கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்சினையை உருவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால்ஆமீர்கான் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

    பாத்திமாவின் விஷயத்தில் ஆமீர்கான் அதிக அக்கறை காட்டுவதாகவும், அவருக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகவும் பேச்சு கிளம்பியது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவரும் கண்டுகொள்ளவில்லை.



    ஆமீர்கானுடனான காதல் பேச்சு குறித்து பேட்டி ஒன்றில் பாத்திமாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,

    இந்த வதந்தி மிகவும் வித்தியாசமானது. என் அம்மாவும் டி.வி பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒருநாள் அவர் என்னிடம் 'உன் புகைப்படம் வந்து இருக்கிறது' என்று எனக்குக் காட்டினார். 'என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தலைப்பைப் படித்து காட்டினார். நான் கலங்கினேன், இந்த வதந்தி குறித்து நானே விளக்க வேண்டும் என நினைத்தேன்.

    யாராவது உங்களை ஏதாவது குற்றம்சாட்டினால், முதல் உள்ளுணர்வு வெளியே வந்து இதுபோன்று ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். நீங்கள் ஒரு கோபக்கார நபராக இருந்தால், நீங்கள் அவரை தாக்குவீர்கள். நீங்கள் அமைதியானவராக இருந்தால் நீங்களும் அதைப் பற்றி பேசுவீர்கள் என கூறினார்.

    நான் இந்த வதந்தியால் பாதிக்கப்பட்டேன். மக்கள் எதையாவது கூறிக் கொண்டே தான் இருப்பார்கள். அதனால் இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை. நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்.

    தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படத்தில் ஆமீரின் பரிந்துரையால் பாத்திமாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததை பார்த்து கத்ரீனா கைப் கடுப்பானாராம். அவருக்கு கவர்ச்சி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #AamirKhan #FatimaSanaShaikh

    சீன பல்கலைக்கழகத்தில் அமீர்கான் நடித்த ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு தி்டீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. #AamirKhan
    அமீர்கான், அமிதாப்பச்சன் ஆகிய இருவரும் நடித்துள்ள ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ இந்தி படம் கடந்த மாதம் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. அதிக பொருட்செலவில் எடுத்த இந்த படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் படம் தோல்வி அடைந்தது.

    தோல்விக்கு பொறுப்பு ஏற்று அமீர்கான் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்றார். தக்ஸ் ஆப் இந்துஸ்தான் படம் அடுத்த வாரம் சீனாவில் வெளியாகிறது. படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் அங்கு தொடங்கி உள்ளன. இதற்காக அமீர்கான் சீனா சென்றார். சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்டாங் பல்கலைக்கழகத்தில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் பங்கேற்பதற்காக அமீர்கானும் ஓட்டலில் இருந்து புறப்பட தயாரானார். ஆனால் கடைசி நேரத்தில் விழா நடத்த பல்கலைக்கழகம் தடை விதித்தது.



    இதுகுறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறும்போது, “படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி என்று எங்களுக்கு தெரியவில்லை. முறையான அனுமதி பெறாததால் விழாவுக்கு தடை விதித்தோம்” என்றனர். இதனால் நிகழ்ச்சியை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றினர். அங்கு அமீர்கான் கலந்துகொண்டார்.
    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப், அமீர்கானுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார். #PrabhuDeva
    பிரபுதேவா சமீபகாலமாக நடனம் மற்றும் இயக்கத்தில் இருந்து ஒதுங்கி நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 6 படங்களில் பிசியாக நடித்து வரும் பிரபுதேவா, அமிதாப் பச்சன், அமீர்கான் நடிக்கும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் இடம்பெறும் பாடலுக்காக ஒரு நடனத்தை இயக்கி கொடுத்துள்ளார்.

    அமிதாப்பும் அமீர்கானும் இணைந்து ஆடும் இந்த பாடலின் தமிழ் பதிப்பை மதன் கார்க்கி எழுதியுள்ளார். வாஷ் மாலே எனத் தொடங்கும் இந்த பாடலுக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 



    நவம்பர் 8-ந்தேதி வெளியாக இருக்கும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. 
    அமீர்கான் தயாரிக்கவிருந்த ‘மொகுல்’ திரைப்படத்தின் இயக்குநர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், இத்தகைய ஆட்களுடன் பணிபுரிய விருப்பமில்லாமல் வெளியேறுவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். #AamirKhan #Mogul
    இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் உறுப்பினராக இருந்த பேன்டம் பிலிம்ஸின் நிர்வாகி விகாஷ் பாகல் மீதும், ஆமீர்கான் தயாரிக்கவிருந்த ‘மொகுல்’ திரைப்படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீதும் செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன.

    நடிகர் அலோக்நாத், பாடகர் கைலாஷ்கேர் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிப்படுகிறது.

    இதனால் அமீர்கான் தயாரிக்கும் படத்தில் இருந்து டைரக்டர் சுபாஷ்கபூர் நீக்கப்பட்டுள்ளார்.

    இதுபற்றி அமீர்கான் மற்றும் அவரின் மனைவி கிரன் ராவ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



    ‘திரைப்படத் துறையை அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு வேலை இடமாய் மாற்றும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எங்கள் நிறுவனம். பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அடுத்து நாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூருடன் பணிபுரிய விருப்பமில்லை. அவரது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், இத்தகைய ஆள்களுடன் பணிபுரிய வேண்டாம் என முடிவெடுத்து, அந்தப் படத்திலிருந்து வெளியேறுகிறோம். திரைப் படத்துறையைப் பாதுகாப்பான வேலையிடமாக மாற்ற நாங்கள் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுப்போம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர். #AamirKhan #Mogul

    அமிதாப்பச்சன், அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் டிரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். #Kamal #ThugsOfHindostan
    வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்திப்படங்களை தயாரித்த நிறுவனம், யாஷ்ராஜ் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்திப்படம், ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்.’ இது, அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட படம். இது, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் கத்ரினா கைப், பாத்திமா சனாசேக் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா டைரக்டு செய்திருக்கிறார். நவம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாக இருக்கிறது.

    இந்திப்பட உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் ஆகிய இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். படத்தை பற்றிய தகவலை அமிதாப்பச்சன், அமீர்கான் இருவரும் வீடியோ ஒன்றில் பேசி, வெளியிட்டனர்.

    இந்த படத்தின் டிரைலர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார்.
    பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும், டோலிவுட் நடிகர் பிரபாஸும் ரூ.1000 கோடியில் உருவாகும் சரித்திர கதையில் நடிக்க இருக்கிறார்கள். #AamirKhan #Prabhas
    பாகுபலி வெற்றிக்கு பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை புராண, இதிகாச, சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. ராமாயண கதையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிப்பில் ஏற்கனவே ஸ்ரீராமராஜ்ஜியம் படம் தமிழ், தெலுங்கில் வந்தது. 

    நாகார்ஜுனா, அனுஷ்கா நடிப்பில் ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவிளையாடல்களை சித்தரித்து பக்தி படம் வெளியானது. சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பத்மாவத் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலில் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாதனை படைத்தது.

    ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையும் படமாகி வருகிறது. இதில் லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். தெலுங்கில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படம் தயாராகிறது.

    இந்த நிலையில் மகாபாரதம் கதையையும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் படமாக எடுக்கின்றனர். ரூ.1000 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. இதில் கர்ணன், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், சகுனி, திரவுபதி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களுக்கு நடிகர்–நடிகைகள் தேர்வு நடக்கிறது. 

    அமீர்கானை முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். அர்ஜுனன் வேடத்தில் நடிக்க பாகுபலி படம் மூலம் பிரபலமான பிரபாஸிடம் பேசி வருகிறார்கள்.
    சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித், அமீர்கான் வழியில் உடலமைப்பை மாற்றி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
    அஜித்துக்கு எப்போதுமே இரட்டை வேட செண்டிமெண்ட் உண்டு. அவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி. அஜித் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் அசல் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

    எனவே இரட்டை வேடங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்கள் என்கிறார்கள். இப்போது வயதான வேடத்துக்கான படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கிறது.



    அடுத்து இளமையான அஜித்துக்கான காட்சிகள் படம் பிடிக்கப்படும். இந்தியில் அமீர்கான் தங்கல் படத்தில் நடித்தபோது முதலில் தொப்பையுடன் கூடிய வயதான வேடத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னர் உடலை குறைத்து இளமையாக நடித்தார். அது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. அதேபோன்றதொரு ரிஸ்க்கை தான் அஜித்தும் எடுத்திருக்கிறார். முதலில் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். #Viswasam #AjithKumar

    தனது 30 ஆண்டுகள் சினிமா பயணத்தை நிறைவு செய்த அமீர்கான், தனது முதல் படமான ’கயாமாத் சே கயாமத் டக்’ படக்குழுவினருடன், டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்து சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். #AamirKhan
    இந்தி திரையுலகில் அமீர்கான் மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் கொண்ட நடிகர். இவர், இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்தவர்.

    இந்நிலையில், நடிகர் அமீர்கான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அவரது முதல் படமான  ‘கயாமாத் சே கயாமத் டக்’ திரைப்படத்தை மீண்டும் திரையிடும் நிகழ்ச்சி படக்குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கான், நிகழ்ச்சிக்கு டாக்ஸி ஓட்டுநர்களையும் அழைத்திருந்தார்.



    அவரது முதல் படத்தின் வெற்றிக்கு டாக்ஸி ஓட்டுநர்களின் பங்கு முக்கியமானது என்பதை நினைவு கூர்ந்தே அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுடன் உரையாடிய அமீர்கான், புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அமீர்கானின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்துள்ளார். #Aamir Khan
    ×